மாநகராட்சியில் நடைபெற்று வரும் பணிகள்- பொதுமக்களிடம் கேட்டறிந்த கோவை ஆணையர்

கோயம்புத்தூர்‌ மாநகராட்சி தெற்கு, மேற்கு மண்டலத்திற்குட்பட்ட பகுதிகளில்‌ நடைபெற்று வரும்‌ பாதாள சாக்கடை திட்டப்பணிகள்‌, தார்சாலை பணிகள்‌ உள்ளிட்ட வளர்ச்சித்‌ திட்டப்பணிகளை மாநகராட்சி ஆணையாளர்‌ சிவகுரு பிரபாகரன்‌ நேரில்‌ பார்வையிட்டு ஆய்வு செய்தார்.


கோவை: பணிகளை விரைவாகவும்‌, தரமாகவும்‌ முடித்து பயன்பாட்டிற்கு கொண்டுவர சம்மந்தப்பட்ட அலுவலா்களுக்கு உத்தரவு.



கோயம்புத்தூர்‌ மாநகராட்சி தெற்கு மண்டலம்‌ வெள்ளலூரில்‌ ரூ.591.14 கோடி மதிப்பீட்டில்‌ நடைபெற்று வரும்‌ குறிச்சி குனியமுத்தூர்‌ பாதாள சாக்கடை திட்டப்பணிகளில்‌ ஒருபகுதியாக அமைக்கப்பட்டுள்ள கழிவுநீர் ‌ சுத்திகரிப்பு நிலையத்தை மாநகராட்சி ஆணையாளர்‌ சிவகுரு பிரபாகரன்‌ நேரில்‌ சென்று பார்வையிட்டு, ஆய்வு செய்து,



அதன்‌ செயல்பாடுகள்‌ குறித்து கேட்டறிந்து, பணியை விரைவில்‌ முடித்து பயன்பாட்டிற்கு கொண்டுவர உத்தரவிட்டார்‌.



அதனைத்‌ தொடாந்து, தெற்கு மண்டலம்‌ வெள்ளலூர்‌ குப்பை கிடங்கு வளாகத்தில்‌ டெங்கு கொசு ஒழிப்பு பணியாளா்கள்‌ கிருமிநாசினி தெளிக்கும்‌ பணிகளில்‌ ஈடுபட்டுவருவதை மாநகராட்சி ஆணையாளர்‌நேரில்‌ பார்வையிட்டு, ஆய்வு செய்த பின்னர்‌, வார்டு எண்‌.99க்குட்பட்ட வெள்ளலூர்‌ பகுதியிலுள்ள அற்புதம்‌ நகரில்‌ பாதாள சாக்கடை கழிவுநீர்‌ உந்து நிலையத்தின்‌ செயல்பாடுகள்‌ குறித்து மாநகராட்சி ஆணையாளர்‌ நேரில்‌ சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்‌.



பின்னர்‌, வார்டு எண்‌.990க்குட்பட்ட அற்புதம்‌ நகா்‌ பகுதியில்‌ (NSMT) நகர்ப்புற சாலைகள்‌ மேம்பாட்டுத்திட்டத்தின்கீழ்‌ ரூ.46.33 இலட்சம்‌ மதிப்பீட்டில்‌ சுமார்‌ 1.54 கிலோ மீட்ட தொலைவிற்கு அமைக்கப்பட்டுள்ள தார்சாலையினை மாநகராட்சி ஆணையாளர்‌நேரில்‌ சென்று பார்வையிட்டு ஆய்வு செய்த பின்னா்‌, அற்புதம்‌ நகர்‌ மற்றும்‌ இந்திரா நகர்‌ பகுதிகளில்‌ வீடுகளுக்கு பாதாள சாக்கடை இணைப்பு வழங்கப்பட்டுவரும்‌ பணிகள்‌ குறித்து நேரில்‌ பார்வையிட்டு ஆய்வு செய்து பொதுமக்களிடம்‌ நேரில்‌ கேட்டறிந்தார்‌.



அதனைத்‌ தொடர்ந்து, கோயம்புத்தார்‌ மாநகராட்சி மேற்கு மண்டலத்தில்‌ பாதாள சாக்கடைத்திட்டப்பணிகளின்‌ ஒருபகுதியாக வடவள்ளி மற்றும்‌ சோமையம்பாளையம்‌ பகுதிகளில்‌ பாதாள சாக்கடை கழிவுநீர்‌ உந்து நிலையம்‌ அமையவுள்ள இடத்தினை மாநகராட்சி ஆணையாளர்‌ மா.சிவகுரு பிரபாகரன்‌ இ.ஆ.ப., நேரில்‌ சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்‌.



இந்த ஆய்வுகளின்போது, மேற்கு மண்டலத்தலைவர்‌ தெய்வயானை தமிழ்மறை, தெற்கு மண்டல உதவி ஆணையர்‌ பிரரம்‌ ஆனந்த்‌, தமிழ்நாடு குடிநீர் வடிகால்‌ வாரிய செயற்பொறியாளர்‌ தமிழ்ச்செல்வன்‌, உதவி பொறியாளாகள்‌ மதியழகன்‌, கீதாதேவி, மாநகராட்சி செயற்பொறியாளா்கள்‌ இளங்கோவன்‌, சுந்தாராஜன்‌, கனகராஜ்‌, உதவி பொறியாளா்கள்‌ சரண்யா, சபரி, மண்டல சுகாதார அலுவலர்‌ ஆண்டியப்பன்‌, தமிழ்நாடு குடிநீர்‌ வடிகால்‌ வாரிய அலுவலாகள்‌ மற்றும்‌ மாநகராட்சி அலுவலர்கள்‌ உடனிருந்தனர்‌.

Newsletter

KG Hospital Introduces CUVIS Joint Robotic Knee Replacement System, Promising Improved Recovery Outcomes

Coimbatore’s KG Hospital has launched the advanced CUVIS Joint Robotic Knee Replacement System, marking a major step for...

நீண்டநாள் கோரிக்கைகள்: அமைச்சரிடம் மனு அளித்த டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட நீண்டநாள் கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர்...

கோவை பீளமேடு பகுதிகளில் பல்வேறு தூய்மைப் பணிகள், கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி, வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் தலைமையில் குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள...

கவுண்டம்பாளையம் மேல்நிலை நீர்த்தேக்கத்தில் மாநகராட்சி ஆணையாளர் நேரடி ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மேற்கு மண்டல வார்டு எண்.33ல் உள்ள கவுண்டம்பாளையம் மேல்நிலை நீர்த்தேக்கத்தில் ஆணையர் மா.சிவகுரு...

Black Ribbons, Walkout: Farmers Allege CM Failed to Keep Poll Promise on Crop Loan Waiver

Members of the Tamil Nadu Vivasaayigal Paadhukaapu Amaippu attended the farmers’ grievance redressal meeting in Tiruppur...

பயிர் கடனை முழுமையாக தள்ளுபடி செய்யக் கோரி கருப்புத் துணி கட்டி விவசாயிகள் வெளிநடப்பு

தேர்தல் வாக்குறுதியாக அறிவித்தபடி பயிர் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் என வலியுறுத்தி, திருப்பூரில் நடைபெற்ற...