உடுமலை அருகே இலக்கிய மன்ற விழா துவக்கம் - மாணவர்கள் ஆர்வம்

உடுமலை அடுத்த பெரிய வாளவாடி அரசு மேல்நிலைப் பள்ளியில் இலக்கிய மன்ற தொடக்க விழா, தமிழ் கூடல்விழா, கலை இலக்கிய வெற்றி போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது.


திருப்பூர்: உடுமலை அருகே அரசு பள்ளியில் நடைபெற்ற இலக்கிய மன்ற விழாவில் மாணவர்கள் பங்கேற்பு.

உடுமலை அடுத்த பெரிய வாளவாடி அரசு மேல்நிலைப் பள்ளியில் இலக்கிய மன்ற தொடக்க விழா, தமிழ் கூடல்விழா, கலை இலக்கிய வெற்றி போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பாராட்டு விழா என முப்பெரும் விழா நடைபெற்றன. பள்ளி தலைமை ஆசிரியை அ. ஜெயலட்சுமி தலைமை தாங்கினார். வரலாற்று ஆசிரியை பி.மாலா வரவேற்புரை வழங்கினார்.

முதுகலை தமிழ் ஆசிரியை வி.ஜானகி இலக்கிய மன்றத்தின் நோக்கமும் அவசியமும் பற்றி எடுத்து உரைத்து நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார். பூலாங்கிணறு அரசு மேல்நிலைப்பள்ளி முதுகலை தமிழ் ஆசிரியர் செ. சரவணன் தமிழ்மொழியின் தொன்மையும் மொழியின் சிறப்புகளும் என்னும் தலைப்பில் சிறப்புரை ஆற்றினார். பட்டதாரி ஆசிரியர் சுரேஷ்குமார் வாழ்த்துரை வழங்கினார்.

இதையடுத்து கலைப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு தலைமை ஆசிரியை பரிசுகள் வழங்கினார். மாணவ மாணவிகள் சங்க இலக்கிய பாடல்களையும் பாரதியார் பாரதிதாசன் போன்ற தமிழ் புலவர்களின் பாடல்களை குழுவாக சேர்ந்து பாடினார்கள்.நிறைவாக ஆசிரியை ஆர்.பார்வதி நன்றியுரை வழங்கினார்.

Newsletter

கோவை மாநகராட்சி 24x7 குடிநீர் திட்டப் பகுதிகளில் சாலை சீரமைப்பு பணிகள் தொடக்கம்: மாநகராட்சி நிர்வாகம் அறிவிப்பு

கோவை மாநகராட்சியில் 24x7 குடிநீர் திட்டப்பணிகள் நடைபெறும் திருச்சி சாலை, மேட்டுப்பாளையம் சாலை, சத்தியமங்கலம் சாலை, அவினா...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் இன்னோவிஷன்-2026 அறிவியல் மற்றும் தொழில்நுட்பப் போட்டிகள் நடைபெற்றன

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் மாணவர்களின் சிந்தனைத்திறன் மற்றும் ஆய்வுநோக்கை ஊக்குவிக்கும் வகையில் இன்னோவிஷன்-2026 அறிவிய...

கோவை வடக்கு மண்டல வளர்ச்சித் திட்டங்களை மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் மற்றும் ஆணையாளர் கட்டா ரவி தேஜா முன்னிலையில் இணைப்பு பா...

கோவை மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் 51 மனுக்கள் பெறப்பட்டன

கோவை மாநகராட்சியில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. ஆணையாளர் க...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரியில் ராகிங் எதிர்ப்பு வார விழா நிறைவு

கோவை நவ இந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஆகஸ்ட் 12 முதல் 18 வரை நடைபெற்ற ராகிங் எதிர்ப...

கோவையில் மாநகராட்சியில் மக்கள் தொகை கணக்கெடுப்பு 61% நிறைவு: விடுபட்ட வீடுகளுக்கு உதவி எண்கள் வெளியீடு

கோவை மாநகராட்சியில் ஆகஸ்ட் 1 முதல் நடைபெறும் மக்கள் தொகை கணக்கெடுப்பு 2027-ன் முதற்கட்ட வீட்டு பட்டியல் பணி 61% நிறைவடைந...