வால்பாறை அருகே ஆற்றில் மூழ்கி ஐந்து மாணவர்கள் பலி - சுற்றுலா வந்த போது விபரீதம்

கோவை மாவட்டம் வால்பாறை சோலையார் ஆற்றில் குளித்துக் கொண்டிருந்த ஐந்து மாணவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


கோவை: ஆற்றில் குளிக்கும் போது நீரில் மூழ்கி உயிரிழந்த கல்லூரி மாணவர்கள்.

கோவை மாவட்டம் வால்பாறை பகுதிக்கு பல்வேறு இடங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் வருகின்றனர் ஆற்றில் குளித்து மகிழ்ந்து விளையாடி செல்கின்றனர். இந்நிலையில் கோவை சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த கிணத்துக்கடவு தனியார் கல்லூரியில் படிக்கும் 10 மாணவர்கள் இரண்டு சக்கர வாகனத்தில் வால்பாறையை சுற்றி பார்க்க வந்துள்ளனர்.

பல்வேறு இடங்களுக்கு சென்று சுற்றி பார்த்துவிட்டு சோலையார் எஸ்டேட் செல்லும் வழியில் உள்ள நல்ல காத்து ஆற்றில் குளித்து விளையாடினர். அதில் ஐந்து பேர்கள் தண்ணீரில் இறங்கி குளித்து கொண்டிருக்கும் பொழுது ஒருவர் நீரில் சிக்கி உள்ளார். அவரை காப்பாற்ற முயன்ற போது ஒருவர் பின் ஒருவராக தண்ணீருக்குள் மூழ்கி உள்ளனர். இதை கரையில் இருந்து பார்த்த ஐந்து நண்பர்கள் காப்பாற்ற முயன்றுள்ளனர்.



அப்பொழுது அவர் வழியாக பொதுமக்கள் பார்த்து காவல்துறைக்கும் தீயணைப்பு துறைக்கும் தகவல் தெரிவித்து காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை செய்து தீயணைப்பு துறையினர் தண்ணீரில் இறங்கி மூழ்கி உயிரிழந்த சரத், அஜய், ரபேல், தனுஷ், வினித் ஆகிய ஐந்து பேர்களின் உடலை மீட்டு வால்பாறை அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக வைத்துள்ளனர்.



சுற்றுலா வந்த இடத்தில் தண்ணீரில் மூழ்கி ஐந்து பேர் இறந்தது இப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கரூரில் வாக்களிக்காத செந்தில் பாலாஜி; அதிமுகவினர் விமர்சனம்

சட்டமன்ற தேர்தலில் கோவை தெற்கு தொகுதி வேட்பாளரும் கோவை திமுக தேர்தல் பொறுப்பாளருமான செந்தில் பாலாஜி தனது சொந்த ஊரான கரூர...

குனியமுத்தூர் பழனி ஆண்டவர் கோயிலில் பூச்சாட்டு திருவிழா கோலாகலம்

குனியமுத்தூர் பழனி ஆண்டவர் கோயிலில் இன்று பூச்சாட்டு திருவிழா நடைபெற்றது. சிறப்பு அபிஷேகம், அலங்காரங்கள் செய்யப்பட்ட சுவ...

குனியமுத்தூர் பழனி ஆண்டவர் கோயிலில் பூச்சாட்டு திருவிழா கோலாகலம்

குனியமுத்தூர் பழனி ஆண்டவர் கோயிலில் இன்று பூச்சாட்டு திருவிழா நடைபெற்றது. சிறப்பு அபிஷேகம், அலங்காரங்கள் செய்யப்பட்ட சுவ...

குனியமுத்தூர் பழனி ஆண்டவர் கோயிலில் பூச்சாட்டு திருவிழா கோலாகலம்

குனியமுத்தூர் பழனி ஆண்டவர் கோயிலில் இன்று பூச்சாட்டு திருவிழா நடைபெற்றது. சிறப்பு அபிஷேகம், அலங்காரங்கள் செய்யப்பட்ட சுவ...

கோவை வாக்கு எண்ணிக்கை மையத்தில் 300 CCTV கேமராக்கள் மூலம் மூன்றடுக்கு பாதுகாப்பு

கோவை மாவட்டத்தில் 84.67 சதவீத வாக்குப்பதிவுக்குப் பிறகு, 10 சட்டமன்ற தொகுதிகளின் வாக்குப்பதிவு இயந்திரங்கள் அரசு தொழில்ந...

கோவையில் அண்ணாமலை வாக்களிப்பு: எப்போதும் இதே Dress Code தான்..! - கலகலப்பான பதில்..!

கோவை பீளமேட்டில் உள்ள பிஎஸ்ஜி கல்லூரி வளாகத்தில் வாக்களித்த பாஜக முன்னாள் மாநில தலைவர், அண்ணாமலை , தனது உடை குறித்து எழ...