வால்பாறை அருகே ஆற்றில் மூழ்கி ஐந்து மாணவர்கள் பலி - சுற்றுலா வந்த போது விபரீதம்

கோவை மாவட்டம் வால்பாறை சோலையார் ஆற்றில் குளித்துக் கொண்டிருந்த ஐந்து மாணவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


கோவை: ஆற்றில் குளிக்கும் போது நீரில் மூழ்கி உயிரிழந்த கல்லூரி மாணவர்கள்.

கோவை மாவட்டம் வால்பாறை பகுதிக்கு பல்வேறு இடங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் வருகின்றனர் ஆற்றில் குளித்து மகிழ்ந்து விளையாடி செல்கின்றனர். இந்நிலையில் கோவை சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த கிணத்துக்கடவு தனியார் கல்லூரியில் படிக்கும் 10 மாணவர்கள் இரண்டு சக்கர வாகனத்தில் வால்பாறையை சுற்றி பார்க்க வந்துள்ளனர்.

பல்வேறு இடங்களுக்கு சென்று சுற்றி பார்த்துவிட்டு சோலையார் எஸ்டேட் செல்லும் வழியில் உள்ள நல்ல காத்து ஆற்றில் குளித்து விளையாடினர். அதில் ஐந்து பேர்கள் தண்ணீரில் இறங்கி குளித்து கொண்டிருக்கும் பொழுது ஒருவர் நீரில் சிக்கி உள்ளார். அவரை காப்பாற்ற முயன்ற போது ஒருவர் பின் ஒருவராக தண்ணீருக்குள் மூழ்கி உள்ளனர். இதை கரையில் இருந்து பார்த்த ஐந்து நண்பர்கள் காப்பாற்ற முயன்றுள்ளனர்.



அப்பொழுது அவர் வழியாக பொதுமக்கள் பார்த்து காவல்துறைக்கும் தீயணைப்பு துறைக்கும் தகவல் தெரிவித்து காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை செய்து தீயணைப்பு துறையினர் தண்ணீரில் இறங்கி மூழ்கி உயிரிழந்த சரத், அஜய், ரபேல், தனுஷ், வினித் ஆகிய ஐந்து பேர்களின் உடலை மீட்டு வால்பாறை அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக வைத்துள்ளனர்.



சுற்றுலா வந்த இடத்தில் தண்ணீரில் மூழ்கி ஐந்து பேர் இறந்தது இப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

நீலாம்பூர் அச்சங்குளத்தில் 35 வயது வாலிபர் சடலமாக மீட்பு; போலீசார் தீவிர விசாரணை

கோவை நீலாம்பூர் அச்சங்குளம் பகுதியில் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் ரத்தக் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம்...

மாதம்பட்டி சாலையில் விபத்து: பைக் மீது மோதிவிட்டு மின்னல் வேகத்தில் தப்பிய கார்..! வைரல்

கோவை மாதம்பட்டி அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற வாலிபர் மீது அதிவேக கார் மோதிவிட்டு நிற்காமல் தப்பிச் சென்ற சம்பவம் பரபர...

நாடு திரும்பிய சோழர் செப்பேடு: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பாராட்டு தெரிவிக்காதது “திட்டமிட்ட அலட்சியம்” – வானதி சீனிவாசன்

நாகப்பட்டினம் ஆனைமங்கலம் சோழர் கால செப்பேடுகள் நெதர்லாந்திலிருந்து இந்தியாவிற்கு திரும்பியுள்ள நிலையில், பிரதமர் நரேந்தி...

நாடு திரும்பிய சோழர் செப்பேடு: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பாராட்டு தெரிவிக்காதது “திட்டமிட்ட அலட்சியம்” – வானதி சீனிவாசன்

நாகப்பட்டினம் ஆனைமங்கலம் சோழர் கால செப்பேடுகள் நெதர்லாந்திலிருந்து இந்தியாவிற்கு திரும்பியுள்ள நிலையில், பிரதமர் நரேந்தி...

கோவை பீளமேடு வார்டில் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோவை சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் சாலையோர குப்பை அகற்றல், சாக்கடை மண் சுத்தம், சாக்கடை அடைப்பு சரிசெ...

ஊட்டியில் 128-வது மலர் கண்காட்சி தொடக்கம்: 50 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

நீலகிரி மாவட்டம் ஊட்டியில் 128-வது மலர் கண்காட்சி இன்று (மே 18) தொடங்கி மே 28 வரை நடைபெறுகிறது. சுற்றுலாப் பயணிகளின் வசத...