பண்டிகை நாட்களை முன்னிட்டு கோவையில் இருந்து 220 கூடுதல் சிறப்பு பேருந்துகள் இயக்கம்

பண்டிகை நாட்களை முன்னிட்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் கோவை லிட், சார்பில் கோவையிலிருந்து மதுரை, திருச்சி ஆகிய ஊர்களுக்கு 220 பேருந்துகள் இயக்கப்படும் என மேலாண் இயக்குநர் ஜோசப் டயஸ் தெரிவித்துள்ளார்.


கோவை: வருகின்ற 20.10.2023 முதல் தற்போது இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக வார இறுதி நாட்கள், ஆயுத பூஜை. சரஸ்வதி பூஜை மற்றும் விஜய தசமி ஆகிய விடுமுறை நாட்கள் தொடர்ந்து வருவதால் கோவையிலிருந்து சேலம், உதகை மதுரை, திருச்சி, தேனி, திண்டுக்கல் ஆகிய ஊர்களுக்கு 220 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் கோவை லிட், சார்பில் கோவையிலிருந்து மதுரை, திருச்சி ஆகிய ஊர்களுக்கு 220 பேருந்துகள் இயக்கப்படும் என மேலாண் இயக்குநர் ஜோசப் டயஸ் தெரிவித்துள்ளார்.

இது குறித்தான அறிக்கையில்,தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் கோவை லிட். சார்பில் வருகின்ற 20.10.2023 முதல் தற்போது இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக வார இறுதி நாட்கள், ஆயுத பூஜை. சரஸ்வதி பூஜை மற்றும் விஜய தசமி ஆகிய விடுமுறை நாட்கள் தொடர்ந்து வருவதால் கோவையிலிருந்து சேலம், உதகை மதுரை, திருச்சி, தேனி, திண்டுக்கல் ஆகிய ஊர்களுக்கு 220 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

கோவை-காந்திபுரத்திலிருந்து சேலத்திற்கு 70 பேருந்துகள், உதகைக்கு 20 பேருந்துகள், சிங்காநல்லூரிலிருந்து மதுரைக்கு 50 பேருந்துகள், திருச்சிக்கு 50 பேருந்துகள், தேனிக்கு 20 பேருந்துகள், திண்டுக்கல்லுக்கு 10 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும். மேலும் தேவைப்படும் போது கூடுதலாக பொது மக்களின் தேவைக்கேற்ப பேருந்துகள் இயக்கப்படும்.

மேலும் விடுமுறை முடிந்த பிறகு பொதுமக்கள் மீண்டும் அவரவர் ஊர்களிலிருந்து திரும்பி வர ஏதுவான வகையில் மேற்படி ஊர்களுக்கு பயணிகளின் தேவைக்கேற்ப பேருந்துகள் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

மருதமலை முருகன் கோவிலில் ஒரே மாதத்தில் ரூ.78 லட்சம் காணிக்கை வசூல்

கோவை மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடைபெற்ற மாதாந்திர உண்டியல் கணக்கெடுப்பில் ரூ.78 லட்சத்து 1 ஆயிரத்து 439 வசூலான...

பேரூர் பட்டீஸ்வரர் கோயில், கோனியம்மன் கோயிலில் வெயிலில் இருந்து பக்தர்களை பாதுகாக்க சிறப்பு ஏற்பாடு

கோவை மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில், பேரூர் பட்டீஸ்வரர், கோனியம்மன், மருதமலை முருகன் கோயில்கள் உள்...

மே தினத்தன்று கோவையில் அனைத்து மதுக்கடைகளும் மூடல்: மாவட்ட ஆட்சியர் உத்தரவு

மே 1ஆம் தேதி தொழிலாளர் தினத்தை மதுவிலக்கு நாளாக அறிவித்து கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மதுக்கடைகள், பார்கள், நட்ச...

தொண்டாமுத்தூர் பாக்கு தோட்டத்தில் மாயமான காட்டெருமை: வனத்துறையினர் தீவிர தேடுதல்

கோவை கெம்பனூர் பகுதியில் 6 மாதங்களாக சுற்றித்திரிந்த காட்டெருமை, தொண்டாமுத்தூர்-மாதம்பட்டி சாலையில் உள்ள பாக்கு தோட்டத்த...

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு 35-வது வெடிகுண்டு மிரட்டல்

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு இன்று காலை இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்தது. வெடிகுண்டு கண்டறியும் குழுவினர...

கோவை அரசு மருத்துவமனையில் ஹீட் ஸ்ட்ரோக் சிகிச்சைக்கு சிறப்பு பிரிவு

கோவையில் வெப்பநிலை 38 டிகிரி செல்சியஸ் எட்டியதால், ஹீட் ஸ்ட்ரோக் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால் அரசு மருத்துவமனையி...