மேட்டுப்பாளையம் அருகே பேக்கரி வியாபாரியிடம் பைக் திருடிய வாலிபர் கைது

மேட்டுப்பாளையம் அருகே பெத்திக்குட்டை பகுதியில் பேக்கரி கடை வியாபரியிடம் பைக் திருடிய நபரை போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.


கோவை: பேக்கரி வியாபரியிடம் பைக் திருடிய நபரை சிசிடிவி காட்சி மூலம் போலீசார் கைது செய்தனர்.

மேட்டுப்பாளையம் அருகே பெத்திக்குட்டை பகுதியை சேர்ந்தவர் கந்தசாமி (வயது 50). இவர் இதே பகுதியில் பேக்கரி கடை வைத்து நடத்தி வருகிறார். இவர் கடந்த 16-ந்தேதி கடை முன்பு இருசக்கர வாகனத்தை நிறுத்தி வைத்து இருந்தார். அப்போது யாரோ மர்ம நபர்கள் திருடி சென்றுவிட்டனர். இதுதொடர்பாக சிறுமுகை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

இதன் ஒருபகுதியாக அங்கிருந்த சி.சி.டி.வி கண்காணிப்பு காமிராவில் போலீசார் ஆய்வு செய்து பார்த்தனர். இதில் அடையாளம் தெரியாத ஒருவர் கந்தசாமியின் மோட்டார் சைக்கிளை திருடிச்செல்வது தெரியவந்தது. இந்த நிலையில் சிறுமுகை போலீஸார் அந்த பகுதியில் வாகன சோதனை நடத்தினர்.

அப்போது அங்கு வந்த ஒருவர் போலீசாரை கண்டதும் தப்பி ஓடினார். அவரை போலீசார் சுற்றி வளைத்து பிடித்துகாவல் நிலையம் அழைத்துச்சென்று விசாரணை நடத்தினர். இதில் அவர் ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலத்தை சேர்ந்த ரமேஷ் (35) என்பது தெரியவந்தது.

மேலும் அவரிடம் கந்தசாமியின் இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது. தொடர்ந்து ரமேஷை கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...