பொள்ளாச்சி-போத்தனூர் வழியாக செல்லும் ரயில்களின் வேகத்தை அதிகரிக்க இன்று சோதனை

பொள்ளாச்சி - போத்தனூர் வழியாக செல்லும் ரயில்களின் வேகத்தை அதிகரிக்க, சோதனை ஓட்டம் இன்று (19ம் தேதி) நடப்பதால், பொதுமக்கள் தண்டவாளத்தின் அருகே செல்ல வேண்டாம் என, ரயில்வே நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.


கோவை: இன்று,காலை, 7:30 மணிக்கு துவங்கி, 10:50 மணி வரை இந்த சோதனை ஓட்டம் மேற்கொள்ளப்படுகிறது. இதில், ரயிலானது, 110 கிலோமீட்டர் வேகத்தில் பயணிக்க உள்ளது.

ரயில்வே தண்டவாளம் உறுதித்தன்மையை அறியவும், ரயிலின் வேகத்தை அதிகரிக்கவும், இன்று திண்டுக்கல்-ஈரோடு ரயில், பொள்ளாச்சி - போத்தனுார் வழியாக சோதனை ஓட்டம் செல்கிறது.

இன்று, காலை, 7:30 மணிக்கு துவங்கி, 10:50 மணி வரை இந்த சோதனை ஓட்டம் மேற்கொள்ளப்படுகிறது. இதில், ரயிலானது, 110 கிலோமீட்டர் வேகத்தில் பயணிக்க உள்ளது.

அதனால், ரயில்வே தண்டவாளம் அருகே உள்ள குடியிருப்பு பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் தண்டவாளத்தின் அருகே செல்ல வேண்டாம். மேலும், தண்டவாளத்தின் அருகே கால்நடைகள் மேய்ப்பது போன்ற செயல்களில் ஈடுபட வேண்டாம் என, ரயில்வே நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

அதிவேகத்தில் ரயில் இயக்கி சோதனை நடத்திய பின், ரயில்களின் வேகத்தை அதிகரிக்க தென்னக ரயில்வே நிர்வாகம் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. இதனால், பொள்ளாச்சி - கோவை ரயிலின் வேகம் விரைவில் அதிகரிக்கப்படும்.

அதேபோன்று, பொள்ளாச்சியில் இருந்து, கோவை, திருப்பூர், சென்னைக்கு கூடுதல் ரயில் இயக்கவும் வாய்ப்புள்ளதாக, ரயில்வே அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்தனர்.

Newsletter

கோவை மாநகராட்சி 24x7 குடிநீர் திட்டப் பகுதிகளில் சாலை சீரமைப்பு பணிகள் தொடக்கம்: மாநகராட்சி நிர்வாகம் அறிவிப்பு

கோவை மாநகராட்சியில் 24x7 குடிநீர் திட்டப்பணிகள் நடைபெறும் திருச்சி சாலை, மேட்டுப்பாளையம் சாலை, சத்தியமங்கலம் சாலை, அவினா...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் இன்னோவிஷன்-2026 அறிவியல் மற்றும் தொழில்நுட்பப் போட்டிகள் நடைபெற்றன

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் மாணவர்களின் சிந்தனைத்திறன் மற்றும் ஆய்வுநோக்கை ஊக்குவிக்கும் வகையில் இன்னோவிஷன்-2026 அறிவிய...

கோவை வடக்கு மண்டல வளர்ச்சித் திட்டங்களை மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் மற்றும் ஆணையாளர் கட்டா ரவி தேஜா முன்னிலையில் இணைப்பு பா...

கோவை மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் 51 மனுக்கள் பெறப்பட்டன

கோவை மாநகராட்சியில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. ஆணையாளர் க...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரியில் ராகிங் எதிர்ப்பு வார விழா நிறைவு

கோவை நவ இந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஆகஸ்ட் 12 முதல் 18 வரை நடைபெற்ற ராகிங் எதிர்ப...

கோவையில் மாநகராட்சியில் மக்கள் தொகை கணக்கெடுப்பு 61% நிறைவு: விடுபட்ட வீடுகளுக்கு உதவி எண்கள் வெளியீடு

கோவை மாநகராட்சியில் ஆகஸ்ட் 1 முதல் நடைபெறும் மக்கள் தொகை கணக்கெடுப்பு 2027-ன் முதற்கட்ட வீட்டு பட்டியல் பணி 61% நிறைவடைந...