தாராபுரத்தில் தூய்மை பணியாளர்கள் மேம்பாட்டு திட்டம் விளக்கக் கூட்டம்

நகர மன்ற தலைவர் பாபு கண்ணன் தலைமையில் தாராபுரம் தூய்மை பணியாளர்கள் மேம்பாட்டு திட்டத்திற்கான விளக்கக் கூட்டம் தாராபுரத்தில் நடைபெற்றது.


திருப்பூர்: தூய்மை பணியாளர்களுக்கு அரசின் நலத்திட்டங்கள் உரிய நேரத்தில் சென்றடையவும், அவர்களின் வாழ்வாதார உரிமைகள் பாதுகாக்கப்படவும் உரிய நடவடிக்கை அரசால் மேற்கொள்ளப்பட உள்ளதாக நகர மன்றத் தலைவர் பாபு கண்ணன் தெரிவித்தார்.



திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் தூய்மை பணியாளர்கள் மேம்பாட்டு திட்டத்திற்கான விளக்கக் கூட்டம் தாராபுரத்தில் நடைபெற்றது. தாராபுரம் நகராட்சி ஜவகர் நகர் பகுதியில் நடைபெற்ற கூட்டத்திற்கு நகர மன்ற தலைவர் பாபு கண்ணன் தலைமை வகித்தார். நகராட்சி ஆணையாளர் பாரி ஜான் முன்னிலை வைத்தார்.



தலைவர் பாபு கண்ணன் பேசியதாவது, முதல்வர் மு.க. ஸ்டாலின் உத்தரவின் படி தூய்மை பணியாளர்கள் மேம்பாட்டு திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. தாராபுரம் நகராட்சி பகுதியில் உள்ள தனியார் உணவகங்கள், தொழிற்சாலைகள், வணிக நிறுவனங்கள், தனி நபர்களின் இல்லங்கள், ஒலித்தவைகளில் பணியாற்றும் தூய்மை பணியாளர்களின் விவரங்கள் சேகரிக்கப்படுவான அவர்களுக்கு அரசின் நலத்திட்டங்கள் உரிய நேரத்தில் சென்றடையவும் அவர்களின் வாழ்வாதார உரிமைகள் பாதுகாக்கப்படவும் உரிய நடவடிக்கை அரசால் மேற்கொள்ளப்பட உள்ளது.

இந்த கூட்டத்தில் நகர் மன்ற உறுப்பினர்கள் தனலட்சுமி ஐயப்பன் ஷாலினி நகராட்சி சுகாதார அலுவலர் மணிகண்டன் சுகாதார ஆய்வாளர் செல்வகுமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை மாநகராட்சி 24x7 குடிநீர் திட்டப் பகுதிகளில் சாலை சீரமைப்பு பணிகள் தொடக்கம்: மாநகராட்சி நிர்வாகம் அறிவிப்பு

கோவை மாநகராட்சியில் 24x7 குடிநீர் திட்டப்பணிகள் நடைபெறும் திருச்சி சாலை, மேட்டுப்பாளையம் சாலை, சத்தியமங்கலம் சாலை, அவினா...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் இன்னோவிஷன்-2026 அறிவியல் மற்றும் தொழில்நுட்பப் போட்டிகள் நடைபெற்றன

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் மாணவர்களின் சிந்தனைத்திறன் மற்றும் ஆய்வுநோக்கை ஊக்குவிக்கும் வகையில் இன்னோவிஷன்-2026 அறிவிய...

கோவை வடக்கு மண்டல வளர்ச்சித் திட்டங்களை மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் மற்றும் ஆணையாளர் கட்டா ரவி தேஜா முன்னிலையில் இணைப்பு பா...

கோவை மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் 51 மனுக்கள் பெறப்பட்டன

கோவை மாநகராட்சியில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. ஆணையாளர் க...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரியில் ராகிங் எதிர்ப்பு வார விழா நிறைவு

கோவை நவ இந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஆகஸ்ட் 12 முதல் 18 வரை நடைபெற்ற ராகிங் எதிர்ப...

கோவையில் மாநகராட்சியில் மக்கள் தொகை கணக்கெடுப்பு 61% நிறைவு: விடுபட்ட வீடுகளுக்கு உதவி எண்கள் வெளியீடு

கோவை மாநகராட்சியில் ஆகஸ்ட் 1 முதல் நடைபெறும் மக்கள் தொகை கணக்கெடுப்பு 2027-ன் முதற்கட்ட வீட்டு பட்டியல் பணி 61% நிறைவடைந...