உடுமலை திருமூர்த்தி அணையில் இருந்து தண்ணீர் திறப்பு நீட்டிப்பு

உடுமலை திருமூர்த்தி அணையில் இருந்து படுகை நான்காம் மண்டலப் பாசனப் பாலாறு பகுதிகளுக்குட்பட்ட நிலங்களுக்கான பாசனத்திற்கு தண்ணீர் கால நீட்டிப்பு செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.


திருப்பூர்: உடுமலை திருமூர்த்தி அணையில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் கால நீட்டிப்பு செய்ய அரசாணை வெளியீடப்பட்டுள்ளது.



இது தொடர்பாக வெளியிட்ட அரசாணையில்,

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே திருமூர்த்தி அணையிலிருந்து 2023- 2024 ஆம் ஆண்டு பரம்பிக்குளம் ஆழியாறு திட்டத்தில், படுகை நான்காம் மண்டலப் பாசனப் பாலாறு பகுதிகளுக்குட்பட்ட நிலங்களிலுள்ள. நிலையிலுள்ள பயிர்களைக் காப்பாற்றவும் மற்றும் கால்நடைகளின் குடிநீர் தேவைக்காகவும் கூடுதலாக 18.10.2023 முதல் 24.10.2023 முடிய 6 நாட்களுக்கு காலநீட்டிப்பு செய்து, மொத்தம் 410 மில்லியன் கன அடிக்கு மிகாமல் (நீரிழப்பு உட்பட). தண்ணீர் திறந்து விட அரசு ஆணையிட்டுள்ளது.

இதனால், கோயம்புத்தூர் மற்றும் திருப்பூர் மாவட்டங்களிலுள்ள 94068 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும். என தமிழக அரசு விடுத்துள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை: இளைஞர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு கஞ்சா விற்பனை செய்ததாக பல தொடர் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான 22 வயது இளைஞர் மீத...

கோவையில் தேசிய ஜூனியர் ஆண்கள் ஹாக்கி சாம்பியன்ஷிப்: ஜூலை 28 முதல்; 32 மாநில அணிகள் பங்கேற்பு

16வது ஹாக்கி இந்தியா ஜூனியர் ஆண்கள் தேசிய சாம்பியன்ஷிப் போட்டி, ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 8 வரை கோவை ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி...

வெள்ளலூரில் குப்பை தரம் பிரிக்கும் மையத்துக்கு எதிர்ப்பு: பொது மக்கள் சாலை மறியல்

வெள்ளலூரில் குடியிருப்பு பகுதிக்கு அருகே குப்பை தரம் பிரிக்கும் மையம் அமைக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து 100-க்கும்...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் - வார்டு கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு, பூங்கா தூய்மை மற்றும் மர குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்ப...

ரூ.10.69 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் திறப்பு: கோவையில் புதிய விளையாட்டு அரங்குகள், பள்ளி வசதிகளை தொடங்கி வைத்த அமைச்சர் வே.சம்பத்குமார்

கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களில் ரூ.10.69 கோடி மதிப்பிலான பள்ளி கட்டிடங்கள், விளையாட்டு அரங்குகள், அங்கன்வாடி, மகள...

அமராவதி அணை நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 25ஆம் தேதி நிலவரப்படி 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்...