அதிமுக 52 ஆம் ஆண்டு தொடக்க விழா - கோவையில் எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா உருவப்படங்களுக்கு மரியாதை

அதிமுக கட்சி துவங்கப்பட்டு 52 வது ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு கோவை துடியலூர் பேருந்து நிறுத்தம் அருகே புரட்சித் தலைவர் எம்ஜிஆர், புரட்சித்தலைவி ஜெயலலிதாவின் திருஉருவ படங்களுக்கு கோவை புறநகர் வடக்கு மாவட்ட செயலாளரும், கவுண்டம்பாளையம் சட்டமன்ற உறுப்பினருமான அருண்குமார் தலைமையில் கட்சி நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.


கோவை: அதிமுகவின் 52ஆம் ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு, கோவையில் கட்சிக்கொடி, பொதுமக்களுக்கு சட்டமன்ற உறுப்பினர் பி.ஆர்.ஜி.அருண்குமார் இனிப்பு வழங்கினார்.

அதிமுக கட்சி துவங்கப்பட்டு 52 வது ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு கோவை துடியலூர் பேருந்து நிறுத்தம் அருகே புரட்சித் தலைவர் எம்ஜிஆர், புரட்சித்தலைவி ஜெயலலிதாவின் திருஉருவ படங்களுக்கு கோவை புறநகர் வடக்கு மாவட்ட செயலாளர் மற்றும் கவுண்டம்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் பி.ஆர்.ஜி.அருண்குமார் தலைமையில் கட்சி நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.



அதனைத் தொடர்ந்து மாவட்ட செயலாளர் பி.ஆர்.ஜி.அருண்குமார் அதிமுகவின் கட்சி கொடியை ஏற்றி பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினார். அப்போது கட்சி நிர்வாகிகள் எம்.ஜி.ஆர் வாழ்க, அம்மா வாழ்க, எடப்பாடியார் வாழ்க என கோசங்களை எழுப்பினர்.



மேலும் தூய்மை பணியாளர்கள் மற்றும் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சிக்கு துடியலூர் பகுதி செயலாளர் வனிதாமணி முன்னிலை வகித்தனர். இதில் மாநில விவசாய அணி துணை செயலாளர் சின்னவேடம்பட்டி சுப்பையன், ஐ.டி.விங் மண்டல இணை செயலாளர் விக்னேஷ், மருத்துவ அணி மாவட்ட செயலாளர் துரைசாமி, ஐ.டி விங் மாவட்ட செயலாளர் மணிகண்டன், துடியலூர் பகுதி அம்மா பேரவை செயலாளர் கவிச்சந்திரமோகன், வார்டு செயலாளர்கள் சாந்திபூசன், பந்தல்வீடு கே.பிரகாஷ், சுரேஷ்குமார், சுரேஷ்பாபு, அண்ணா தொழில்சங்க பகுதி செயலாளர் வி.ஆர்.முருகேஷ், இளைஞர் அணி பகுதி செயலாளர் ரமேஷ், நிர்வாகிகள் ஐ.டி.ஐ ஜெயராஜ், ராஜகோபால், செல்வராஜ், நந்தகோபால், சண்முகம், மோகன்ராஜ், திரு, ரங்கநாதன், சி.டி.சி செல்வம், ராஜூ, விக்னேஷ், சென்னியப்பன், சிவமூர்த்தி, அண்ணாமலை, சர்க்கரையப்பன் மற்றும் சின்னவேடம்பட்டி பகுதி செயலாளர் மாரிசாமி, கவுண்டம்பாளையம் கிழக்கு பகுதி செயலாளர் வக்கில் ராஜேந்திரன் உட்பட 200க்கும் மேற்பட்ட கட்சி நிர்வாகிகள் திரளாக கலந்துக்கொண்டனர்.

Newsletter

கோவை மாநகராட்சியில் தூய்மைப் பணியாளர்களுக்கான சிறப்பு முகாம்

கோவை மாநகராட்சி ஆர்.எஸ்.புரம் கலையரங்கில் தூய்மைப் பணியாளர்களுக்கான அரசு சேவைகள் சிறப்பு முகாம் நடைபெற்றது. மேயர் கா.ரங்...

வாடகை நிலுவைக்கு கோவை மாநகராட்சி கடைகளுக்கு சீல்: ரூ.24.63 லட்சம் வசூல்

கோவை மாநகராட்சி வணிக வளாகங்களில் வாடகை செலுத்தாத 10 கடைகள் சீல் வைக்கப்பட்டன. மொத்தம் ரூ.54.38 லட்சம் நிலுவையில், ரூ.24....

கோயம்புத்தூரில் 24 மணி நேர குடிநீர் திட்டப் பணிகளுக்கான தளங்களை மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூரில் SUEZ நிறுவனத்தின் 24 மணி நேர குடிநீர் திட்டத்திற்கான குழாய் அமைப்பு இடங்களையும் சாக்கடைப் பணி தளங்களையும...

பதுவம்பள்ளி துணை மின் நிலையத்தில் நாளை (24.07.2026) பராமரிப்பு பணி - பல பகுதிகளில் மின்தடை

பதுவம்பள்ளி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால் பது...

கோவை ரேஸ்கோர்ஸ் துணை மின் நிலையத்தில் நாளை  (24.07.2026) மின்தடை

கோவை ரேஸ்கோர்ஸ் துணை மின் நிலையத்தில் ஜூலை 24 அன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவ...

கோவை பீளமேடு பகுதியில் நூலகம் மற்றும் சாக்கடை பராமரிப்பு பணிகளை ஆய்வு செய்த வார்டு கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் முழு நேர கிளை நூலகம், சாக்கடை அடைப்பு சரிசெய்தல் மற்றும் துப்புரவு பணிக...