அதிமுக 52 ஆம் ஆண்டு தொடக்க விழா - கோவையில் எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா உருவப்படங்களுக்கு மரியாதை

அதிமுக கட்சி துவங்கப்பட்டு 52 வது ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு கோவை துடியலூர் பேருந்து நிறுத்தம் அருகே புரட்சித் தலைவர் எம்ஜிஆர், புரட்சித்தலைவி ஜெயலலிதாவின் திருஉருவ படங்களுக்கு கோவை புறநகர் வடக்கு மாவட்ட செயலாளரும், கவுண்டம்பாளையம் சட்டமன்ற உறுப்பினருமான அருண்குமார் தலைமையில் கட்சி நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.


கோவை: அதிமுகவின் 52ஆம் ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு, கோவையில் கட்சிக்கொடி, பொதுமக்களுக்கு சட்டமன்ற உறுப்பினர் பி.ஆர்.ஜி.அருண்குமார் இனிப்பு வழங்கினார்.

அதிமுக கட்சி துவங்கப்பட்டு 52 வது ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு கோவை துடியலூர் பேருந்து நிறுத்தம் அருகே புரட்சித் தலைவர் எம்ஜிஆர், புரட்சித்தலைவி ஜெயலலிதாவின் திருஉருவ படங்களுக்கு கோவை புறநகர் வடக்கு மாவட்ட செயலாளர் மற்றும் கவுண்டம்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் பி.ஆர்.ஜி.அருண்குமார் தலைமையில் கட்சி நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.



அதனைத் தொடர்ந்து மாவட்ட செயலாளர் பி.ஆர்.ஜி.அருண்குமார் அதிமுகவின் கட்சி கொடியை ஏற்றி பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினார். அப்போது கட்சி நிர்வாகிகள் எம்.ஜி.ஆர் வாழ்க, அம்மா வாழ்க, எடப்பாடியார் வாழ்க என கோசங்களை எழுப்பினர்.



மேலும் தூய்மை பணியாளர்கள் மற்றும் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சிக்கு துடியலூர் பகுதி செயலாளர் வனிதாமணி முன்னிலை வகித்தனர். இதில் மாநில விவசாய அணி துணை செயலாளர் சின்னவேடம்பட்டி சுப்பையன், ஐ.டி.விங் மண்டல இணை செயலாளர் விக்னேஷ், மருத்துவ அணி மாவட்ட செயலாளர் துரைசாமி, ஐ.டி விங் மாவட்ட செயலாளர் மணிகண்டன், துடியலூர் பகுதி அம்மா பேரவை செயலாளர் கவிச்சந்திரமோகன், வார்டு செயலாளர்கள் சாந்திபூசன், பந்தல்வீடு கே.பிரகாஷ், சுரேஷ்குமார், சுரேஷ்பாபு, அண்ணா தொழில்சங்க பகுதி செயலாளர் வி.ஆர்.முருகேஷ், இளைஞர் அணி பகுதி செயலாளர் ரமேஷ், நிர்வாகிகள் ஐ.டி.ஐ ஜெயராஜ், ராஜகோபால், செல்வராஜ், நந்தகோபால், சண்முகம், மோகன்ராஜ், திரு, ரங்கநாதன், சி.டி.சி செல்வம், ராஜூ, விக்னேஷ், சென்னியப்பன், சிவமூர்த்தி, அண்ணாமலை, சர்க்கரையப்பன் மற்றும் சின்னவேடம்பட்டி பகுதி செயலாளர் மாரிசாமி, கவுண்டம்பாளையம் கிழக்கு பகுதி செயலாளர் வக்கில் ராஜேந்திரன் உட்பட 200க்கும் மேற்பட்ட கட்சி நிர்வாகிகள் திரளாக கலந்துக்கொண்டனர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...