அதிமுக 52 ஆம் ஆண்டு தொடக்க விழா - கோவையில் எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா உருவப்படங்களுக்கு மரியாதை

அதிமுக கட்சி துவங்கப்பட்டு 52 வது ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு கோவை துடியலூர் பேருந்து நிறுத்தம் அருகே புரட்சித் தலைவர் எம்ஜிஆர், புரட்சித்தலைவி ஜெயலலிதாவின் திருஉருவ படங்களுக்கு கோவை புறநகர் வடக்கு மாவட்ட செயலாளரும், கவுண்டம்பாளையம் சட்டமன்ற உறுப்பினருமான அருண்குமார் தலைமையில் கட்சி நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.


கோவை: அதிமுகவின் 52ஆம் ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு, கோவையில் கட்சிக்கொடி, பொதுமக்களுக்கு சட்டமன்ற உறுப்பினர் பி.ஆர்.ஜி.அருண்குமார் இனிப்பு வழங்கினார்.

அதிமுக கட்சி துவங்கப்பட்டு 52 வது ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு கோவை துடியலூர் பேருந்து நிறுத்தம் அருகே புரட்சித் தலைவர் எம்ஜிஆர், புரட்சித்தலைவி ஜெயலலிதாவின் திருஉருவ படங்களுக்கு கோவை புறநகர் வடக்கு மாவட்ட செயலாளர் மற்றும் கவுண்டம்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் பி.ஆர்.ஜி.அருண்குமார் தலைமையில் கட்சி நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.



அதனைத் தொடர்ந்து மாவட்ட செயலாளர் பி.ஆர்.ஜி.அருண்குமார் அதிமுகவின் கட்சி கொடியை ஏற்றி பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினார். அப்போது கட்சி நிர்வாகிகள் எம்.ஜி.ஆர் வாழ்க, அம்மா வாழ்க, எடப்பாடியார் வாழ்க என கோசங்களை எழுப்பினர்.



மேலும் தூய்மை பணியாளர்கள் மற்றும் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சிக்கு துடியலூர் பகுதி செயலாளர் வனிதாமணி முன்னிலை வகித்தனர். இதில் மாநில விவசாய அணி துணை செயலாளர் சின்னவேடம்பட்டி சுப்பையன், ஐ.டி.விங் மண்டல இணை செயலாளர் விக்னேஷ், மருத்துவ அணி மாவட்ட செயலாளர் துரைசாமி, ஐ.டி விங் மாவட்ட செயலாளர் மணிகண்டன், துடியலூர் பகுதி அம்மா பேரவை செயலாளர் கவிச்சந்திரமோகன், வார்டு செயலாளர்கள் சாந்திபூசன், பந்தல்வீடு கே.பிரகாஷ், சுரேஷ்குமார், சுரேஷ்பாபு, அண்ணா தொழில்சங்க பகுதி செயலாளர் வி.ஆர்.முருகேஷ், இளைஞர் அணி பகுதி செயலாளர் ரமேஷ், நிர்வாகிகள் ஐ.டி.ஐ ஜெயராஜ், ராஜகோபால், செல்வராஜ், நந்தகோபால், சண்முகம், மோகன்ராஜ், திரு, ரங்கநாதன், சி.டி.சி செல்வம், ராஜூ, விக்னேஷ், சென்னியப்பன், சிவமூர்த்தி, அண்ணாமலை, சர்க்கரையப்பன் மற்றும் சின்னவேடம்பட்டி பகுதி செயலாளர் மாரிசாமி, கவுண்டம்பாளையம் கிழக்கு பகுதி செயலாளர் வக்கில் ராஜேந்திரன் உட்பட 200க்கும் மேற்பட்ட கட்சி நிர்வாகிகள் திரளாக கலந்துக்கொண்டனர்.

Newsletter

கள்ளிமடை துணை மின் நிலையத்தில் நாளை (14.08.2026) மின்தடை

கள்ளிமடை துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால் காமராஜ்...

சோமையம்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (14.08.2026) மின்தடை அறிவிப்பு

சோமையம்பாளையம் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக ஆகஸ்ட் 14ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வர...

கோவை பீளமேடு வார்டு 27-ல் அங்கன்வாடி மையம், தூய்மைப் பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேட்டில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் அங்கன்வாடி மையம், சாலையோர தூய்மை, குப்பை அகற...

ராகுல் காந்தி தான் 2029 பிரதமர் வேட்பாளர்; தவெகவும் ஏற்றுக்கொள்ளும்: கோவையில் அமைச்சர் ராஜேஷ்குமார்

கோவையில் நடைபெற்ற சர்வதேச சுற்றுலா மாநாட்டில் பேசிய அமைச்சர் ராஜேஷ்குமார், தமிழகத்தில் சுற்றுலாத்துறையை வேகமாக வளர்க்க ப...

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி மாணவர்கள் தேசியக் கொடி விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தினர்

கோயம்புத்தூரில் MY Bharat திட்டத்தின் கீழ் ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி மாணவர்கள் 'ஹர் கர் திரங்கா' விழிப்புணர...

கோவை கல்லூரி மாணவர் கொலை: மேலும் ஒரு மாணவர் கைது; 6 பேருக்கு போலீஸ் வலை

கோவையில் கல்லூரி மாணவர் அமுதன் கொலை வழக்கில் ஏற்கனவே 5 மாணவர்கள் கைது செய்யப்பட்ட நிலையில், மேலும் ஒரு மாணவரை போலீசார் க...