மடத்துக்குளம் அருகே கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு ரேக்ளா பந்தயம் - சீறி பாயந்த காளைகள்

மடத்துக்குளம் அருகே நடைபெற்ற ரேக்ளா பந்தயத்தை திருப்பூர் தெற்கு மாவட்ட அவைத்தலைவரும், மடத்துக்குளம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான ஜெயராமகிருஷ்ணன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.


திருப்பூர்: மடத்துக்குளம் அருகே நடைபெற்ற ரேக்ளா பந்தயத்தில் காளைகள் சீறிப்பாய்ந்தன.



மடத்துக்குளம் அருகே உள்ள துங்காவியில் மடத்துக்குளம் மேற்கு ஒன்றிய திமுக மற்றும் திருப்பூர் தெற்கு மாவட்ட வர்த்தக அணி இணைந்து மாட்டு வண்டி பந்தயம் எனப்படும் ரேக்ளா பந்தயத்தினை திருப்பூர் தெற்கு மாவட்ட அவைத் தலைவர் மடத்துக்குளம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஜெயராமகிருஷ்ணன் கொடி அசைத்து துவக்கி வைத்தார்.



பொள்ளாச்சி தாராபுரம் ஒட்டன்சத்திரம் திருப்பூர் பகுதியில் இருந்து 500க்கும் மேற்பட்ட இரட்டை மாட்டு வண்டிகள் கலந்து கொண்டன.



குறிப்பிட்ட இலக்கை குறுகிய நேரத்தில் சென்றடையும் காளைகளின் உரிமையாளர்களுக்கு தங்க நாணயங்களும் கோப்பைகளும் பரிசாக வழங்கபட்டது.

இந்நிகழ்ச்சியில் மடத்துக்குளம் மேற்கு ஒன்றிய கழக செயலாளர் கே.ஈஸ்வரசாமி, மடத்துக்குளம் கிழக்கு ஒன்றிய கழக செயலாளர் எம்.ஏ.சாகுல் அமீது, ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர்கள் நா.பாலசெந்தில், கு.சாமிதுரை மடத்துக்குளம் மேற்கு ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் த.கௌதம்ராஜ் உட்பட திமுக நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டு கொண்டனர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...