மடத்துக்குளம் அருகே கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு ரேக்ளா பந்தயம் - சீறி பாயந்த காளைகள்

மடத்துக்குளம் அருகே நடைபெற்ற ரேக்ளா பந்தயத்தை திருப்பூர் தெற்கு மாவட்ட அவைத்தலைவரும், மடத்துக்குளம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான ஜெயராமகிருஷ்ணன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.


திருப்பூர்: மடத்துக்குளம் அருகே நடைபெற்ற ரேக்ளா பந்தயத்தில் காளைகள் சீறிப்பாய்ந்தன.



மடத்துக்குளம் அருகே உள்ள துங்காவியில் மடத்துக்குளம் மேற்கு ஒன்றிய திமுக மற்றும் திருப்பூர் தெற்கு மாவட்ட வர்த்தக அணி இணைந்து மாட்டு வண்டி பந்தயம் எனப்படும் ரேக்ளா பந்தயத்தினை திருப்பூர் தெற்கு மாவட்ட அவைத் தலைவர் மடத்துக்குளம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஜெயராமகிருஷ்ணன் கொடி அசைத்து துவக்கி வைத்தார்.



பொள்ளாச்சி தாராபுரம் ஒட்டன்சத்திரம் திருப்பூர் பகுதியில் இருந்து 500க்கும் மேற்பட்ட இரட்டை மாட்டு வண்டிகள் கலந்து கொண்டன.



குறிப்பிட்ட இலக்கை குறுகிய நேரத்தில் சென்றடையும் காளைகளின் உரிமையாளர்களுக்கு தங்க நாணயங்களும் கோப்பைகளும் பரிசாக வழங்கபட்டது.

இந்நிகழ்ச்சியில் மடத்துக்குளம் மேற்கு ஒன்றிய கழக செயலாளர் கே.ஈஸ்வரசாமி, மடத்துக்குளம் கிழக்கு ஒன்றிய கழக செயலாளர் எம்.ஏ.சாகுல் அமீது, ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர்கள் நா.பாலசெந்தில், கு.சாமிதுரை மடத்துக்குளம் மேற்கு ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் த.கௌதம்ராஜ் உட்பட திமுக நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டு கொண்டனர்.

Newsletter

திமுக தேர்தல் அறிக்கையில் மின்சார கோரிக்கைகள் இல்லை: மறுசுழற்சி ஜவுளி கூட்டமைப்பு ஏமாற்றம்

திமுக தேர்தல் அறிக்கையில் மின்கட்டணம் குறைப்பு, நிலை கட்டணம் குறைப்பு உள்ளிட்ட மின்சாரத்துறை கோரிக்கைகள் இடம்பெறாதது மறு...

சூரிய ஒளி மின் உற்பத்தி திட்டங்களுக்கு ஊக்கமளிப்பு மற்றும் மானியம்: அதிமுக தேர்தல் அறிக்கையை தொழில்துறை வரவேற்பு

Coimbatore: சூரிய ஒளி மின் உற்பத்தி திட்டங்களுக்கு ஊக்கமளிப்பு மற்றும் மானியம் வழங்குவது தொடர்பான அதிமுக தேர்தல் அறிக்கை...

சாதனைகளை கூறி வெற்றி பெறுவேன்; யாரையும் குறைத்து மதிப்பிடவில்லை - செந்தில் பாலாஜி

கோவை தெற்கு தொகுதியில் DMK வேட்பாளர் செந்தில் பாலாஜி தேர்தல் பணி குழு அலுவலகத்தை காந்திபுரத்தில் திறந்து வைத்தார். எதிரண...

கோவையை உலகத் தர நகரமாக மாற்ற கருத்தரங்கம்

கோவை நவஇந்தியாவில் ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் “கோயம்புத்தூரை உலகத் தர நகரமாக மாற்றுவோம்” கருத்தரங...

மகாவீர் ஜெயந்தி: மார்ச் 31ல் இறைச்சி விற்பனைக்கு தடை - கோயம்புத்தூர் மாநகராட்சி அறிவிப்பு

மகாவீர் ஜெயந்தி விழாவையொட்டி மார்ச் 31, 2026 அன்று கோயம்புத்தூர் மாநகராட்சி பகுதியில் அனைத்து விதமான இறைச்சி விற்பனை மற்...

கவுண்டம்பாளையம் தொகுதியில் NTK வேட்பாளர் கலாமணி ஜெகநாதன் வேட்புமனு தாக்கல்

கோவை கவுண்டம்பாளையம் சட்டமன்றத் தொகுதியில் நாம் தமிழர் கட்சி வேட்பாளராக கலாமணி ஜெகநாதன் இன்று வேட்புமனுவை தாக்கல் செய்தா...