கோவையில் வரும் 19 ஆம் தேதி மாபெரும் தமிழ் கனவு நிகழ்ச்சி

கோவை எஸ்.என்.எஸ் தொழில்நுட்ப கல்லூரியில் வரும் 19 ஆம் தேதி மாபெரும் தமிழ்க் கனவு நிகழ்ச்சி நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சித் தலைவர் கிராந்திகுமார் தெரிவித்துள்ளார்.


கோவை: தமிழ் கனவு நிகழ்ச்சியில் "ஈதல் இசைபட வாழ்தல்” என்னும் பொருண்மையில் எழுத்தாளர் நந்தலாலா, சொற்பொழிவாளர், கருத்துகளை எடுத்துரைக்க உள்ளார்.

கோவை எஸ்.என்.எஸ் தொழில்நுட்ப கல்லூரியில் வரும் 19 ஆம் தேதி மாபெரும் தமிழ்க் கனவு நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இது குறித்து மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

கோயம்புத்தூர் மாவட்டத்தில் நான்காவது நிகழ்வாக வரும் 19.10.2023 அன்று காலை 09.00 மணிக்கு எஸ்.என்.எஸ் தொழில்நுட்ப (Dr. SNS College of Technology) கல்லூரியில் நடைபெறும் மாபெரும் தமிழ்க் கனவு நிகழ்ச்சியில் ஈதல் இசைபட வாழ்தல் என்னும் பொருண்மையில் எழுத்தாளர். திருமிகு நந்தலாலா, சொற்பொழிவாளர், அவர்கள் கருத்துகளை எடுத்துரைக்க வருகைதரவுள்ளார். இந்நிகழ்ச்சியில் பங்கேற்கும் மாணவர்களுக்கு உயர்கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வழிகாட்டி, தமிழ்ப் பெருமிதம் ஆகிய இரு கையேடுகள் வழங்கப்படவுள்ளது.

மேலும், மாணவர்களுக்கு உதவும் வகையில் புத்தகக்காட்சி, 'நான் முதல்வன், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி, மாவட்டத் தொழில் மையம். தாட்கோ, வங்கிக் கடனுதவி ஆலோசனை, சுய உதவிக் குழுவினரின் தயாரிப்புகள் போன்ற அரங்குகள் அமைக்கப்படவுள்ளன என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

“நாங்கள் கட்சிக்காக வாக்கு கேட்கவில்லை; அடுத்த தலைமுறைக்காக வாக்கு கேட்கிறோம்” – கோவையில் சுப. வீரபாண்டியன் விமர்சனம்

கோவை தெற்கு சட்டமன்றத் தொகுதியில் செந்தில் பாலாஜியை ஆதரித்து, திராவிடர் இயக்க தமிழர் பேரவை பொதுச்செயலாளர் சுப. வீரபாண்டி...

சிங்காநல்லூர் தொகுதி: மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர் ஸ்ரீநிதி மோகனுக்கு ஆவாரம்பாளையத்தில் வாக்கு சேகரிப்பு

சிங்காநல்லூர் தொகுதியில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர் ஸ்ரீநிதி மோகனுக்கு ஆதரவாக ஆவாரம்பாளையம் பகுதியில் தீவிர...

சூலூர்: “சொந்தக் குடும்பத்தினரையே சந்திப்பதில்லை; இதில் எங்களை எப்படி சந்திப்பார் என்று நம்புவது”- தவெக வெட்பாளரிடம் பெண்கள் சரமாரி கேள்வி.

சூலூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கண்ணம்பாளையம் வாரச்சந்தையில், தவெக வேட்பாளர் என்.எம். சுகுமார் பிரச்சாரத்தின் போது, விஜ...

தாராபுரம்: “கொங்கு மண்டலம் புறக்கணிப்பு; 5 ஆண்டுகளாக திராவிட மாடல் ஆட்சியில் ஒரு பிரச்சனைக்கும் தீர்வு இல்லை” – அர்ஜுன் சம்பத் குற்றச்சாட்டு

தாராபுரம் சட்டமன்ற தொகுதியில் அதிமுக வேட்பாளர் சத்தியபாமாவுக்கு ஆதரவாக இந்து மக்கள் கட்சி மாநில தலைவர் அர்ஜுன் சம்பத் பி...

கோவை: மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்கு பதிவு பணிகள் தொடக்கம்

கோவையில் உள்ள 10 சட்டமன்ற தொகுதிகளில், இந்த பணிக்காக 160-க்கும் மேற்பட்ட குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், 9000-க்கும...

கோவையில் மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்குப் பதிவு பணிகள் தொடக்கம்

கோவையில் தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்குப் பதிவு பணிகள் இன்று...