கோவையில் வரும் 19 ஆம் தேதி மாபெரும் தமிழ் கனவு நிகழ்ச்சி

கோவை எஸ்.என்.எஸ் தொழில்நுட்ப கல்லூரியில் வரும் 19 ஆம் தேதி மாபெரும் தமிழ்க் கனவு நிகழ்ச்சி நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சித் தலைவர் கிராந்திகுமார் தெரிவித்துள்ளார்.


கோவை: தமிழ் கனவு நிகழ்ச்சியில் "ஈதல் இசைபட வாழ்தல்” என்னும் பொருண்மையில் எழுத்தாளர் நந்தலாலா, சொற்பொழிவாளர், கருத்துகளை எடுத்துரைக்க உள்ளார்.

கோவை எஸ்.என்.எஸ் தொழில்நுட்ப கல்லூரியில் வரும் 19 ஆம் தேதி மாபெரும் தமிழ்க் கனவு நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இது குறித்து மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

கோயம்புத்தூர் மாவட்டத்தில் நான்காவது நிகழ்வாக வரும் 19.10.2023 அன்று காலை 09.00 மணிக்கு எஸ்.என்.எஸ் தொழில்நுட்ப (Dr. SNS College of Technology) கல்லூரியில் நடைபெறும் மாபெரும் தமிழ்க் கனவு நிகழ்ச்சியில் ஈதல் இசைபட வாழ்தல் என்னும் பொருண்மையில் எழுத்தாளர். திருமிகு நந்தலாலா, சொற்பொழிவாளர், அவர்கள் கருத்துகளை எடுத்துரைக்க வருகைதரவுள்ளார். இந்நிகழ்ச்சியில் பங்கேற்கும் மாணவர்களுக்கு உயர்கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வழிகாட்டி, தமிழ்ப் பெருமிதம் ஆகிய இரு கையேடுகள் வழங்கப்படவுள்ளது.

மேலும், மாணவர்களுக்கு உதவும் வகையில் புத்தகக்காட்சி, 'நான் முதல்வன், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி, மாவட்டத் தொழில் மையம். தாட்கோ, வங்கிக் கடனுதவி ஆலோசனை, சுய உதவிக் குழுவினரின் தயாரிப்புகள் போன்ற அரங்குகள் அமைக்கப்படவுள்ளன என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

நொய்யலில் கழிவுநீர் கலப்பு: தொழிற்சாலைகள் மட்டுமல்ல, மாநகராட்சி - மாவட்ட நிர்வாகமும் காரணம் - பாமக மனு

சுத்திகரிக்கப்படாத கழிவுநீர் நொய்யல் ஆற்றில் கலப்பதை தடுக்க வலியுறுத்தி, பாமக நிர்வாகிகள் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்த...

மின்சார நிலை கட்டணத்தை குறைக்க வேண்டும்: தமிழக அரசுக்கு கோவை தொழில் அமைப்புகளின் கூட்டமைப்பு கோரிக்கை

மின்சார நிலை கட்டண உயர்வால் குறு மற்றும் சிறு தொழில்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள கோவை தொழில் அமைப்புக...

உதயநிதி ஸ்டாலின், முஸ்தபா மீது நடவடிக்கை கோரி கோவையில் சக்தி சேனா கட்சி மனு

சனாதனம் குறித்து பேசிய கருத்துகள் மத உணர்வுகளை புண்படுத்துவதாக குற்றம்சாட்டி, உதயநிதி ஸ்டாலின் மற்றும் தவெக முஸ்தபா மீது...

கோவையில் கனமழை: பழமையான வேப்பமரம் முறிந்து விழுந்து கார், வீடு, மின்கம்பம் சேதம்

கோவை துடியலூர் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த காற்றுடன் பெய்த கனமழையால் அப்பநாயக்கன்பாளையத்தில் சுமார் 200 ஆண்டுகள் பழமைய...

கோவை, திருப்பூர் மின்தடை பிரச்சனைக்கு தனி கவனம் தேவை - முதல்வருக்கு ‘காட்மா’ அமைப்பு கோரிக்கை

கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் நிலவிவரும்  மின்தடை காரணமாக தொழில்துறை கடுமையாக பாதிக்கப்படுவதாக தெரிவித்துள்ள ‘கா...

கோவை பீளமேடு 27-வது வார்டில் ரேஷன் கடை மற்றும் தூய்மைப் பணிகள் கவுன்சிலர் ஆய்வு

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம், சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 27-வது வார்டு பகுதிகளில் பல்வேறு மக்கள் ந...