லாட்டரி மார்டின் மீது குறி வைத்து வருமானவரித் துறை ரெய்டு ஏன்? - மார்ட்டினின் மனைவி விளக்கம்

தொழிலதிபர் மார்டின் வீட்டில் வருமானவரித்துறை சோதனை நடத்தியதில் ஆவணங்கள் எதுவும் கைப்பற்றவில்லை என அவரது மனைவி லீமா ரோஸ் மார்ட்டின் கோவையில் பேசியுள்ளார்.


கோவை: லாட்டரி மார்டின் மீதுகுறி வைத்து வருமானவரித் துறை ரெய்டு ஏன்? என அவரது மனைவி விளக்கம் அளித்துள்ளார்.

கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டை வரவேற்கும் விதமாக கோவையில் ஆயிரம் கிலோ கேக் எடை தயாராகி வருகிறது.

கிறிஸ்துமஸிற்கு இன்னும் சில நாட்கள் உள்ள நிலையில் தமிழகத்தில் உள்ள பல்வேறு நட்சத்திர விடுதிகளில் பிளம் கேக் தயாரிக்கும் பணி துவங்கி உள்ளது.

இதன் ஒரு பகுதியாக கோவை சாய்பாபா காலனி ஹாஸ் 6ஹோட்டலில் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டை வரவேற்கும் விதமாக "1000" கிலோ கேக் மிக்சிங் திருவிழா நடைபெற்றது.



இதில் கேக் தயாரிக்க தேவையான முந்திரி, உலர் திராட்சை, அத்திப்பழம், பாதாம், வால்நட் உள்ளிட்ட 20 வகையான உலர் பழங்கள் மற்றும் ஒயின் உள்ளிட்ட பழ ரசங்களை ஊற்றி கலந்து 1000 கிலோ தயாரிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் சமூக ஆர்வலர் லீமா ரோஸ் மார்ட்டின் மற்றும் பெண்கள், ஹோட்டல் ஊழியர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் ஊழியர்கள் உட்பட பலர்கலந்து கொண்டனர்.

பின்னர் இது குறித்து பேசிய லீமா மார்டின்,



ஒவ்வொரு ஆண்டும் இந்த நிகழ்ச்சியை குடும்ப விழாவாக கொண்டாடுவதாகவும் இந்த ஆண்டு1000"கிலோ கேக் தயாரிப்பதற்கான உலர் பழங்கள் கலவை பணிகளை அனைவரும் இணைந்து செய்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தியதாக தெரிவித்தனர்.

மேலும் தொழிலதிபர் மார்ட்டின் அலுவலகத்தில் நடைபெற்ற வருமானத்துறை சோதனை குறித்து பேசிய அவரது மனைவி லீமா ரோஸ் மார்டின், வருமான வரித்துறை அதிகாரிகள் கல்கத்தா பகுதியில் இருந்து திடீர் என வந்தார்கள் எனவும்

இன்று காலை சோதனை முடிவடைந்தது என்றார்.

மேலும் தேர்தல் வருகின்றது என்பதால் தவறான செய்தி அவர்களுக்கு சென்றுள்ளது எனவும் அதனால் வந்து உள்ளார்கள் எனவும் டாக்குமெண்ட்ஸ் எதையும் எடுத்துச் செல்லவில்லை என்றார். மேலும் கோவை நகரப் பகுதிகளில் கேமரா பொருத்துவதற்காக 7 கோடியே 7 லட்சத்தி 82 ஆயிரம் ரூபாய் மதிப்பில் நகரத்தைச் சுற்றி 240 கிலோ மீட்டர் சுற்றளவில் கேமராக்கள் பொறிப்பதற்கு கோவை மாநகராட்சிக்கு ரோட்டரி கிளப் சார்பாக நிதி வழங்கப்பட உள்ளது என தெரிவித்தார்.

Newsletter

கோவை மாநகராட்சி 24x7 குடிநீர் திட்டப் பகுதிகளில் சாலை சீரமைப்பு பணிகள் தொடக்கம்: மாநகராட்சி நிர்வாகம் அறிவிப்பு

கோவை மாநகராட்சியில் 24x7 குடிநீர் திட்டப்பணிகள் நடைபெறும் திருச்சி சாலை, மேட்டுப்பாளையம் சாலை, சத்தியமங்கலம் சாலை, அவினா...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் இன்னோவிஷன்-2026 அறிவியல் மற்றும் தொழில்நுட்பப் போட்டிகள் நடைபெற்றன

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் மாணவர்களின் சிந்தனைத்திறன் மற்றும் ஆய்வுநோக்கை ஊக்குவிக்கும் வகையில் இன்னோவிஷன்-2026 அறிவிய...

கோவை வடக்கு மண்டல வளர்ச்சித் திட்டங்களை மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் மற்றும் ஆணையாளர் கட்டா ரவி தேஜா முன்னிலையில் இணைப்பு பா...

கோவை மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் 51 மனுக்கள் பெறப்பட்டன

கோவை மாநகராட்சியில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. ஆணையாளர் க...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரியில் ராகிங் எதிர்ப்பு வார விழா நிறைவு

கோவை நவ இந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஆகஸ்ட் 12 முதல் 18 வரை நடைபெற்ற ராகிங் எதிர்ப...

கோவையில் மாநகராட்சியில் மக்கள் தொகை கணக்கெடுப்பு 61% நிறைவு: விடுபட்ட வீடுகளுக்கு உதவி எண்கள் வெளியீடு

கோவை மாநகராட்சியில் ஆகஸ்ட் 1 முதல் நடைபெறும் மக்கள் தொகை கணக்கெடுப்பு 2027-ன் முதற்கட்ட வீட்டு பட்டியல் பணி 61% நிறைவடைந...