கோவையில் சிறப்பு புகைப்படக் கண்காட்சி - கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு ஏற்பாடு

முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு கோவை வஉசி மைதானத்தில் இதழாளர்-கலைஞர் குழுவின் சார்பில் தமிழ் வெல்லும் இதழாளர்-கலைஞர் சிறப்பு புகைப்படக்கண்காட்சி வருகின்ற 18 ஆம் தேதி முதல் ஒரு மாதம் நடைபெறவுள்ளதாக மாவட்ட ஆட்சித்தலைவர் கிராந்தி குமார் பாடி தெரிவித்துள்ளார்.


கோவை: கலைஞர் நூற்றாண்டு விழாவையொட்டி கோவையில் நடைபெறும் புகைப்பட கண்காட்சியை கண்டு களிக்குமாறு மாணவர் மாணவியர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு கோவை வஉசி மைதானத்தில் இதழாளர்-கலைஞர் குழுவின் சார்பில் தமிழ் வெல்லும் இதழாளர்-கலைஞர் சிறப்பு புகைப்படக்கண்காட்சி வருகின்ற 18 ஆம் தேதி முதல் ஒரு மாதம் நடைபெறவுள்ளதாக மாவட்ட ஆட்சித்தலைவர் கிராந்தி குமார் பாடி தெரிவித்துள்ளார்.

இது குறித்த மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள அறிக்கையில் "இதழாளர் கலைஞர் குழுவின் சார்பில் தமிழ் வெல்லும் இதழாளர் கலைஞர் சிறப்பு புகைப்படக்கண்காட்சி வருகின்ற 18.10.2023 புதன்கிழமை அன்று மாலை 5.30 மணியளவில் நடைபெறவுள்ளது.

இப்புகைப்படக்கண்காட்சி 18.10.2023 அன்று முதல் ஒருமாதம் வரை நடைபெறவுள்ளது. இப்புகைப்படக் கண்காட்சியினை வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் முத்துசாமி தலைமையில் தமிழ்வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன், சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடுவாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான், பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் ஆகியோர் முன்னிலையில் பாரதிய வித்யா பவன் மற்றும் குமரகுரு கல்வி நிறுவன தலைவத் கிருஷ்ணராஜ் வாணவராயர் திறந்து வைக்கவுள்ளார்.

மேலும், இதழாளர் கலைஞர் குழுவின் உறுப்பினர்கள், மாவட்ட ஆட்சித்தலைவர், மாநகராட்சி மேயர், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், மாநகராட்சி ஆணையாளர், உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொள்ளவுள்ளனர். மேலும், இப்புகைப்படக் கண்காட்சியில் கலைபண்பாட்டுத் துறை சார்பில் மாலை 4.30 மணிக்கு கிராமிய நையாண்டி மேளம், ஸ்ரீசக்ரா ஜிக்காட்ட கலைக்குழு, ஸ்ரீ கலாலயா அகாடமி - பரதநாட்டியம் ஆகிய கலை நிகழ்ச்சிகளும், இந்துஸ்தான் கல்லூரி மாணவ மாணவியர்களின் சிலம்பாட்டம் நிகழ்ச்சியும் நடைபெறவுள்ளன.

இப்புகைப்படக் கண்காட்சியினை பள்ளி கல்லூரி மாணவ மாணவியர்கள் பார்வையிட்டு பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் புதிய கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களை ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா, தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில் கட்டப்பட்டுவரும் கழிவுநீர் சுத்திகர...

வடவள்ளி உள்ளிட்ட பகுதிகளில் நாளை 8 மணி நேரம் மின்தடை

கோவை எஸ்.என்.பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுவதால், வடவள்ளி உள்ளிட்ட 11 பகுதிகளில் கா...

குறிச்சி பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

குறிச்சி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சிட்கோ குற...

கிணத்துக்கடவு பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

கிணத்துக்கடவு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 முதல் மாலை 5 வரை சுலக்கல், தாம...

கோவையில் அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் - பல்வேறு கோரிக்கைகள் முன்வைப்பு

நீதித்துறையின் சுதந்திரம், சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ் அலுவல் மொழி, இளம் வழக்கறிஞர்களுக்கு உதவித்தொகை உள்ளிட்ட பல்வே...

அமராவதி அணை 50.56 அடி, திருமூர்த்தி அணை 27.75 அடி நீர்மட்டம்

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...