கோவை நகரில் அம்பேத்கர் சிலையை அமைக்க கோரி தமிழ் புலிகள் சார்பில் ஆட்சியரிடம் மனு

கோவை நகரில் அம்பேத்கர் சிலையை அமைக்க கோரி தமிழ் புலிகள் கட்சியினர் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.


 கோவை: புதிய தலைமுறை இந்தியாவின் வரலாற்றை எளிதில் அறியும் வகையில் அம்பேத்கர் சிலையை அமைக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.



கோவை நகரில் அம்பேத்கர் சிலையை அமைக்க கோரி தமிழ் புலிகள் கட்சியினர் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.



இதுகுறித்து அவர்கள் அளித்த மனுவில் அம்பேத்கர் சிலை அனைத்து மாவட்டங்களிலும் அரசே அமைத்துக் கொடுத்துள்ள நிலையில் கோவை மாவட்டத்தில் எங்குமே அம்பேத்கர் சிலை அமைக்கப்படவில்லை எனவும் அவரது சிலையை அமைப்பதனால் புதிய தலைமுறை இந்தியாவின் வரலாற்றை எளிதில் அறிய முடியும் எனவும் எனவே அம்பேத்கரின் சிலையை கோவை நகரின் மையப் பகுதியில் அரசாங்கமே அமைக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளனர்.



இந்த மனம் தமிழ் புலிகள் கட்சியின் பொதுச் செயலாளர் இளவேனில் தலைமையில் அளிக்கப்பட்டது. மனு அளிக்க வந்த தமிழ் புலிகள் கட்சியினர் அம்பேத்கர் புகைப்படத்தை கையில் ஏந்தியவாறு அவர்களது கோரிக்கையை வலியுறுத்தினர்.

Newsletter

அறிவியல் திறனறி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா

கோவை மண்டல அறிவியல் மையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அறிவியல் திறனறி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்க...

அன்னூர் அருகே 1,453 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல்; 3 பேர் கைது

அன்னூர் காவல்துறையினர் மேற்கொண்ட வாகன சோதனையில் 1,453 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதுடன...

கோவை நேரு நகரில் டெங்கு கொசுப்புழு: கட்டிட உரிமையாளருக்கு ரூ.50,000 அபராதம்

கோவை மாநகராட்சி சுகாதார குழு நேரு நகர் கட்டிடத்தில் டெங்கு கொசுப்புழுக்கள் கண்டறிந்து உரிமையாளருக்கு ரூ.50,000 அபராதம் வ...

கோவை உடையாம்பாளையம் இராஜவாய்க்காலில் மழைநீர் வடிகால் பணிகள்: மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் உடையாம்பாளையம் இராஜவாய்க்காலில் மழைநீர் தேங்காமல் வடிவதற்கான பணிகள் குறித்து மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணை 36.52 அடியாகவும், திருமூர்த்தி அணை 36.39 அடியாகவும் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. நீர் ப...

கோவையில் ஜேசிபி வாகனங்கள் நிறுத்தி எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள் போராட்டம்

புதிய வாகன விலை, எரிபொருள், உதிரி பாகங்கள், காப்பீடு மற்றும் வரி உயர்வை கண்டித்து கோவை மாவட்ட எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள...