தாராபுரம் நகர அ.தி.மு.க. சார்பில் வாக்குசாவடி முகவர் ஆலோசனைக் கூட்டம் - சி.மகேந்திரன் எம்.எல்.ஏ பங்கேற்பு

தாராபுரம் நகர அ.தி.மு.க. சார்பில் வாக்குசாவடி முகவர் ஆலோசனைக் கூட்டத்தில் வருகின்ற நாடாளுமன்ற தேர்தலையொட்டி தற்போது ஒவ்வொரு வாக்கு சாவடி வாரியாக இளைஞர் மற்றும் இளம் பெண்களை குறிப்பாக 18 வயது நிரம்பிய இளைஞர்களை கட்சி உறுப்பினர்களாக சேர்க்க வேண்டும் என்று சட்டமன்ற உறுப்பினர் சி.மகேந்திரன் தெரிவித்தார்.


திருப்பூர்: தாராபுரம் நகர அ.தி.மு.க. சார்பில் வாக்குசாவடி முகவர் ஆலோசனைக் கூட்டத்தில் சட்டமன்ற உறுப்பினர் சி.மகேந்திரன் கலந்துகொண்டு, தேர்தலில் எவ்வாறு பணியாற்ற வேண்டும் என்று நிர்வாகிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.



தாராபுரம் நகர அ.தி.மு.க. சார்பில் இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறை மகளிர் வாக்குசாவடி முகவருக்கான ஆலோசனை கூட்டத்துக்கு நகர செயலாளர் சி.ராஜேந்திரன் தலைமை தாங்கினார். மாவட்ட பொருளாளர் சின்னப்பன் என்ற பழனிசாமி, ஒன்றிய செயலாளர்கள் பாலு என்ற பாலகுமாரன், கே.செல்வகுமார், ரமேஷ், மாவட்ட மகளிர் அணி தலைவர் ரேவதிகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.



அப்போது திருப்பூர் புறநகர் கிழக்கு மாவட்ட செயலாளர் மற்றும் மடத்துக்குளம் சி.மகேந்திரன் எம்.எல்.ஏ. பேசுகையில் வருகின்ற நாடாளுமன்ற தேர்தலையொட்டி தற்போது ஒவ்வொரு வாக்கு சாவடி வாரியாக இளைஞர் மற்றும் இளம் பெண்களை குறிப்பாக 18 வயது நிரம்பிய இளைஞர்களை கட்சி உறுப்பினர்களாக சேர்க்க வேண்டும் என்றார்.



இதில் மாவட்ட கவுன்சிலர் பானுமதி கருணாகரன், மாவட்ட பிரதிநிதி கோல்டன் ராஜ், மாவட்ட அமைப்பு சாரா தொழிலாளர் அணி செயலாளர் பங்கு மகேஷ்குமார், மாவட்ட மகளிர் அணி இணை செயலாளர் கவுரிசித்ரா முருகேசன், முன்னாள் நகர கவுன்சிலர் அரசகுமார், குளத்துபாளையம் பேரூராட்சி செயலாளர் பைப் ரவிச்சந்திரன், நகர இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறை செயலாளர் கே.ஆர்.சதீஷ்குமார் உள்பட பலர்கலந்து கொண்டனர்.

Newsletter

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

பம்ப்செட் ஜிஎஸ்டி வரி 5 சதவீதமாக குறைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் - பம்ப் உற்பத்தியாளர்கள் கோரிக்கை

கோவையில் பம்ப் உற்பத்தியாளர்கள் சங்கம், மோட்டார் பம்ப்செட் பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரியை 18 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமா...

அரசாணை இருந்தும் தலைவர்களின் புகைப்படங்களை  புறக்கணிப்பதா? - மறுமலர்ச்சி மக்கள் இயக்கம் சார்பில் மனு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா மற்றும் டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் ஆகியோரின் புகைப்படங்...

கவுண்டம்பாளையம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினராக கனிமொழி சந்தோஷ் பதவியேற்பு

தமிழக சட்டப்பேரவையின் 17-வது கூட்டத்தொடரில் கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் தவெக சார்பில் வெற்றி பெற்ற கனிமொழி...

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புதிய முதல்வர் விஜய் புகைப்படங்கள் நிறுவப்பட்டன

தமிழகத்தின் 13வது முதல்வராக பொறுப்பேற்ற விஜய், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பழைய புகைப்படங்கள் அகற்றப்பட்டு புதிய ம...