தாராபுரம் நகர அ.தி.மு.க. சார்பில் வாக்குசாவடி முகவர் ஆலோசனைக் கூட்டம் - சி.மகேந்திரன் எம்.எல்.ஏ பங்கேற்பு

தாராபுரம் நகர அ.தி.மு.க. சார்பில் வாக்குசாவடி முகவர் ஆலோசனைக் கூட்டத்தில் வருகின்ற நாடாளுமன்ற தேர்தலையொட்டி தற்போது ஒவ்வொரு வாக்கு சாவடி வாரியாக இளைஞர் மற்றும் இளம் பெண்களை குறிப்பாக 18 வயது நிரம்பிய இளைஞர்களை கட்சி உறுப்பினர்களாக சேர்க்க வேண்டும் என்று சட்டமன்ற உறுப்பினர் சி.மகேந்திரன் தெரிவித்தார்.


திருப்பூர்: தாராபுரம் நகர அ.தி.மு.க. சார்பில் வாக்குசாவடி முகவர் ஆலோசனைக் கூட்டத்தில் சட்டமன்ற உறுப்பினர் சி.மகேந்திரன் கலந்துகொண்டு, தேர்தலில் எவ்வாறு பணியாற்ற வேண்டும் என்று நிர்வாகிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.



தாராபுரம் நகர அ.தி.மு.க. சார்பில் இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறை மகளிர் வாக்குசாவடி முகவருக்கான ஆலோசனை கூட்டத்துக்கு நகர செயலாளர் சி.ராஜேந்திரன் தலைமை தாங்கினார். மாவட்ட பொருளாளர் சின்னப்பன் என்ற பழனிசாமி, ஒன்றிய செயலாளர்கள் பாலு என்ற பாலகுமாரன், கே.செல்வகுமார், ரமேஷ், மாவட்ட மகளிர் அணி தலைவர் ரேவதிகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.



அப்போது திருப்பூர் புறநகர் கிழக்கு மாவட்ட செயலாளர் மற்றும் மடத்துக்குளம் சி.மகேந்திரன் எம்.எல்.ஏ. பேசுகையில் வருகின்ற நாடாளுமன்ற தேர்தலையொட்டி தற்போது ஒவ்வொரு வாக்கு சாவடி வாரியாக இளைஞர் மற்றும் இளம் பெண்களை குறிப்பாக 18 வயது நிரம்பிய இளைஞர்களை கட்சி உறுப்பினர்களாக சேர்க்க வேண்டும் என்றார்.



இதில் மாவட்ட கவுன்சிலர் பானுமதி கருணாகரன், மாவட்ட பிரதிநிதி கோல்டன் ராஜ், மாவட்ட அமைப்பு சாரா தொழிலாளர் அணி செயலாளர் பங்கு மகேஷ்குமார், மாவட்ட மகளிர் அணி இணை செயலாளர் கவுரிசித்ரா முருகேசன், முன்னாள் நகர கவுன்சிலர் அரசகுமார், குளத்துபாளையம் பேரூராட்சி செயலாளர் பைப் ரவிச்சந்திரன், நகர இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறை செயலாளர் கே.ஆர்.சதீஷ்குமார் உள்பட பலர்கலந்து கொண்டனர்.

Newsletter

கிணத்துக்கடவு கொலை வழக்கு: சிறுவன் சீர்திருத்தப் பள்ளியில் அடைப்பு; காயமடைந்த மற்றொரு குற்றவாளி மருத்துவமனையில் சிகிச்சை

கிணத்துக்கடவு அருகே இளைஞர் அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட 17 வயது சிறுவன், கோவை சிறுவர் நீதிமன்றத்தி...

கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்கம் நிறைவு

கோவை கற்பகம் நிகர்நிலைப்பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு சார்பில் திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்க நிறைவுவிழா நடைபெற...

கோவை கற்பகம் பொறியியல் கல்லூரி 22-வது பட்டமளிப்பு விழா: 1434 மாணவர்களுக்கு பட்டம்

கோவையில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் 22-வது பட்டமளிப்பு விழா ஆகஸ்ட் 8, 2026 அன்று நடைபெற்றது. 2025 ஆண்டு கல்வி மு...

கோவை மாநகராட்சி குடிநீர் தரத்தை உறுதி செய்ய குளோரின் அளவு ஆய்வு

கோவை மாநகராட்சி அலுவலர்கள் மேல்நிலை நீர்த்தேக்கங்கள் மற்றும் வீடுகளில் விநியோகிக்கப்படும் குடிநீரில் குளோரின் அளவுகளை நே...

கோவை மாநகராட்சி ஆணையர் வடக்கு தெற்கு மண்டல வளர்ச்சி பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் தெற்கு மண்டல பகுதிகளில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணி, டெங்கு கொசு...

கோவை மாநகராட்சி ஆணையர் வளர்ச்சித் திட்டப்பணிகளை நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் பாதாள சாக்கடை, குடிநீர், மழைநீர் வடிகால் கட்டும...