தொழிலாளர்களுக்கு தீபாவளி போனஸ் வேண்டும் - HMS கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

கட்டுமான மற்றும் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு தீபாவளி போனஸ் வழங்குவது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு இந்து மஸ்தூர் சபா(HMS) சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.


கோவை: கட்டுமான மற்றும் அமைப்பு சாரா தொழிலாளர்களில் வாரியத்தில் பதிவு செய்த அனைவருக்கும் தீபாவளி போனஸ் 7 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும் என்று இந்து மஸ்தூர் சபா சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.



கட்டுமான மற்றும் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு தீபாவளி போனஸ் வழங்குவது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு இந்து மஸ்தூர் சபா(HMS) சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.



இந்த ஆர்ப்பாட்டத்தில், "கட்டுமான மற்றும் அமைப்பு சாரா தொழிலாளர்களில் வாரியத்தில் பதிவு செய்த அனைவருக்கும் தீபாவளி போனஸ் 7 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும், பதிவு செய்து புதுப்பிக்கப்படாத தொழிலாளர்களுக்கும் புதிதாக சேரக்கூடிய தொழிலாளர்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தி வாரியத்தின் பயன்கள் அடைந்திடவும், வயதான காலத்தில் சமூக பாதுகாப்பு கிடைத்திடும் வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும், வீடு கட்ட மானியம் பெறுவதற்கான நடைமுறையை எளிமையாக்க வேண்டும், அனைத்து நல வாரியங்களும் ஒரே மாதிரியான இணையதள நடைமுறையை பின்பற்ற நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.



இந்த கவன எதிர்பார்ப்பாட்டத்தில் HMS மாநில செயலாளர் இராஜாமணி, மாநில செயற்குழு உறுப்பினர் பழனிச்சாமி உட்பட 150க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு அவர்களது கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சி பொதுஇடங்களில் ஆக்கிரமிப்புகளை அகற்ற ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிரபாகரன், பொதுஇடங்கள், பூங்காக்கள் மற்றும் சாலைகளில் கட்டுமான நிறுவனங்கள்...

கோவை விமான நிலைய வளாகத்தில் குடிநீர், கழிப்பிடம் பராமரிப்பில் அலட்சியம் - பயணிகள் புகார்

கோவை சர்வதேச விமான நிலைய நுழைவாயில் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள குடிநீர் இயந்திரம் மற்றும் கழிப்பிடங்கள் முறையாக பராமரிக்...

தவெக ஆதரவு: எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் பதவி பறிப்பு!

தவெகாவுக்கு ஆதரவு அளித்த அதிமுக நிர்வாகிகள் மற்றும் எம்.எல்.ஏக்கள் மீது கட்சித் தலைமையகம் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளதாக...

குறிச்சி அணைக்கட்டு கால்வாயில் தூர்வாரும் பணிகளை ஆட்சியர் ஆய்வு

Coimbatore மாவட்ட ஆட்சியர் பவன் குமார் க.கிரியனப்பவர் மற்றும் மாநகராட்சி ஆணையாளர்  மா சிவகுரு பிரபாகரன் குறிச்சி அணைக்கட...

குறிச்சி குளத்திற்கு நீர் எடுத்துச் செல்லும் கால்வாய் தூர்வாரும் பணிகளை ஆய்வு செய்த ஆட்சியர் பவன் குமார் கிரியப்பனார்

கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் பவன் குமார் கிரியப்பனார், மாநகராட்சி ஆணையாளர்  மா. சிவகுரு பிரபாகரன் ஆகியோர் குறிச்சி அணைக...

TVK-AIADMK Alliance Will Disappoint Voters Who Voted Against Corruption: Congress Leader Ganapathy Sivakumar

Ganapathy Sivakumar, State General Secretary of the Tamil Nadu Congress Committee, has cautioned that reports suggesting...