தொழிலதிபர் மார்ட்டின் வீட்டில் 5வது நாளாக வருமானத்துறை சோதனை - அவரது ஆதரவாளர்கள் கண்டனம்

கோவையில் லாட்டரி விற்பனை அதிபர் மார்ட்டின் வீட்டில் வருமானத்துறை அதிகாரிகள் தொடர்ந்து ஐந்தாவது நாளாக சோதனை மேற்கொண்டு வரும் நிலையில், அவரது அலுவலகத்தில் பணிபுரியும் நூற்றுக்கும் மேற்பட்டோர், மார்ட்டின் வீட்டின் முன்பு குவிந்து எதிர்ப்பு தெரிவித்தனர்.


கோவை: தொடர் சோதனையில் மார்ட்டின் வீட்டிலும், தலைமை அலுவலகத்திலும் எதுவும் கிடைக்க பெறாத நிலையில், மீண்டும் மீண்டும் சோதனை செய்வதா என மார்ட்டின் ஆதரவாளர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.



கோவையில் லாட்டரி விற்பனை அதிபர் மார்ட்டின் வீட்டில் வருமானத்துறை அதிகாரிகள் தொடர்ந்து ஐந்தாவது நாளாக சோதனை மேற்கொண்டு வரும் நிலையில் வருமானத்துறை அதிகாரிகள் ஏந்த முகாந்திரம் இல்லாமல் தொடர் சோதனை செய்து வருவதாக கூறி அவரது வீட்டின் முன்பு அவரின் அலுவலகத்தில் வேலை செய்யும் பணியாளர்கள் 100 க்கும் மேற்பட்ட பெண்கள் மற்றும் உறவினர்கள் முழக்கங்களை எழுப்பினர்.

கோவை கவுண்டம்பாளையம் பகுதியில் உள்ள லாட்டரி அதிபர் மார்ட்டின் இல்லத்தில் கடந்த 4 நாட்களாக நடைபெற்று வந்த வருமானவரித்துறையினரின் சோதனை நடத்தி வருகின்றனர்.



இதற்கு கண்டனம் தெரிவித்து, அவரது வீட்டின் முன்பு மார்டின் அலுவலகத்தில் வேலை செய்யும் பணியாளர்கள் மற்றும் உறவினர்கள் குவிந்தனர்.

நான்கு நாட்களுக்கும் மேலாக வருமான வரித்துறையினர் நடத்தி சோதனையில் மார்ட்டின் வீட்டிலும், தலைமை அலுவலகத்திலும் எதுவும் கிடைக்க பெறாத தகவலின் அடிப்படையில் எந்த ஒரு முகாந்திரமும் இன்றி தொடர் சோதனையில் ஈடுபடுவதற்கு அவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. கோவை லாட்டரி விற்பனை அதிபர் மார்ட்டின் வீட்டில் தொடர்ந்து ஐந்தாவது இன்றும் வருமானத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவையில் ஓய்வு பெற்ற தாசில்தாரிடம் தீவிரவாத தடுப்புப் பிரிவு போலீஸ் என்ற பெயரில் ரூ.45.50 லட்சம் டிஜிட்டல் மோசடி

கோவை சீரநாயக்கன்பாளையத்தை சேர்ந்த ஓய்வு பெற்ற தாசில்தார் குணசேகரன் (70) லக்னோ தீவிரவாத தடுப்புப் பிரிவு போலீஸ் என்று கூற...

கோவை கவுண்டம்பாளையம் தொகுதி: தவெக வேட்பாளர் கனிமொழி தீவிர வாக்கு சேகரிப்பு

கோவை கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதி தவெக வேட்பாளர் கனிமொழி நரசிம்மநாயக்கன்பாளையம் பகுதியில் கடைகள், பெட்ரோல் பங்குகளுக்...

கோவை கழிவுநீர் தொட்டியில் விழுந்த இரு ஒப்பந்த ஊழியர்களை மீட்க தீவிர முயற்சி

கோவை சாய்பாபா காலனியில் கழிவுநீர் உந்து நிலையத்தில் மோட்டார் பழுது பார்க்க இறங்கிய இரு மாநகராட்சி ஒப்பந்த ஊழியர்கள் 40 அ...

SNR சன்ஸ் அறக்கட்டளை CEO C.V. ராம்குமாருக்கு மதிப்பு மிக்க தொழில் சேவை விருது

Rotary Club of Coimbatore Millennium மற்றும் Ramakrishna Matric Higher Secondary School Interact Club இணைந்து SNR சன்ஸ்...

கோவை-குவைத் இடையே நேரடி விமான சேவை ஏப்ரல் இறுதியில் தொடக்கம்

கோவை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து குவைத் நாட்டிற்கு Jazeera ஏர்லைன்ஸ் நிறுவனம் சார்பில் ஏப்ரல் இறுதியில் நேரடி விமா...

கவுண்டம்பாளையம் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக சூர்யா பிரகாஷ் அறிவிப்பு

கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் 2026 தமிழக சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியின் கீழ் போட்டியிடும் காங்கிரஸ் க...