பல்லடம் அருகே கோவிலுக்கு வந்தவரின் ஆம்னி வாகனம் திருட்டு - காரை திருடி செல்லும் சிசிடிவி வெளியீடு

பல்லடம் அருகே அவிநாசிபாளையத்தில் பெருமாள் கோவிலுக்கு வந்தவரின் ஆம்னி வாகனம் திருடி செல்லும் சிசிடிவி காட்சி வெளியாக பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


திருப்பூர்: சிசிடிவி காட்சிகளை வைத்து ஆம்னி வாகனத்தை திருடி சென்ற நபர் குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கோவை மாவட்டம் செஞ்சேரிமலை பகுதியை சேர்ந்தவர் சதீஷ்குமார். விவசாயியான இவர் நேற்று அவிநாசிபாளையத்தில் உள்ள ராமசாமி பெருமாள் திருக்கோவிலில் நடைபெற்ற புரட்டாசி கடைசி சனிக்கிழமை சிறப்பு பூஜைக்கு தனது குடும்பத்துடன் ஆம்னி வாகனத்தில் வந்துள்ளார். திருச்சி கோவை தேசிய நெடுஞ்சாலையில் தனது ஆம்னி வாகனத்தை நிறுத்திவிட்டு சாமி தரிசனம் செய்ய கோவிலுக்குள் சென்று விட்டு மீண்டும் வெளியே வந்து பார்த்தபோது ஆம்னி வாகனம் காணாமல் போனதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.



சம்பவம் குறித்து சதீஷ்குமார் அவிநாசிபாளையம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் திருச்சி கோவை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சிசிடிவி பதிவுகளை வைத்து ஆம்னி வாகனத்தை திருடி சென்ற நபர் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் தனியார் உணவகத்தில் இருந்த சிசிடிவி கேமராவில் சதீஷ்குமாரின் காரை யாரோ ஒரு நபர் சின்னூர் பிரிவு சாலையில் ஓட்டிச் செல்லும் சிசிடிவி காட்சிகள் தற்பொழுது வெளியாகி உள்ளது.



சிசிடிவி காட்சிகளை வைத்து ஆம்னி வாகனத்தை திருடி சென்ற நபர் குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கோவை பீளமேடு 27-வது வார்டில் சுகாதார மையம் மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டல வார்டு 27 பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் சுகாதார மையம், குப்பை ச...

கனமழை எச்சரிக்கை: பரளிக்காடு சூழல் சுற்றுலா தற்காலிகமாக மூடல்

காரமடை வனச்சரகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பரளிக்காடு சூழல் சுற்றுலா மையம், வானிலை ஆய்வு மையம் விடுத்த கனமழை எச்சரிக்கையை...

கோயம்புத்தூர் மாநகராட்சி பொதுஇடங்களில் ஆக்கிரமிப்புகளை அகற்ற ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிரபாகரன், பொதுஇடங்கள், பூங்காக்கள் மற்றும் சாலைகளில் கட்டுமான நிறுவனங்கள்...

கோவை விமான நிலைய வளாகத்தில் குடிநீர், கழிப்பிடம் பராமரிப்பில் அலட்சியம் - பயணிகள் புகார்

கோவை சர்வதேச விமான நிலைய நுழைவாயில் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள குடிநீர் இயந்திரம் மற்றும் கழிப்பிடங்கள் முறையாக பராமரிக்...

தவெக ஆதரவு: எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் பதவி பறிப்பு!

தவெகாவுக்கு ஆதரவு அளித்த அதிமுக நிர்வாகிகள் மற்றும் எம்.எல்.ஏக்கள் மீது கட்சித் தலைமையகம் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளதாக...

குறிச்சி அணைக்கட்டு கால்வாயில் தூர்வாரும் பணிகளை ஆட்சியர் ஆய்வு

Coimbatore மாவட்ட ஆட்சியர் பவன் குமார் க.கிரியனப்பவர் மற்றும் மாநகராட்சி ஆணையாளர்  மா சிவகுரு பிரபாகரன் குறிச்சி அணைக்கட...