தாராபுரத்தில் தேசிய மக்கள் நீதிமன்றத்தில் ரூ.7 கோடி மதிப்பிலான 87 வழக்குகளுக்கு சமரச தீர்வு

தாராபுரத்தில் நடந்த தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 87 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. இதன் மொத்த மதிப்பு ரூ.7 கோடியே 10 லட்சத்து 72 ஆயிரத்து 175 ஆகும்.


திருப்பூர்: மோட்டார் வாகன வழக்குகள் 18, உரிமையியல் வழக்கு 37, குற்றவியல் சிறு வழக்குகள் 26, காசோலை வழக்கு 3, வங்கி வாராக்கடன் வழக்கு 2, உள்பட மொத்தம் 87 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது.

தேசிய சட்டப்பணிகள் ஆணைக்குழு மற்றும் மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழு ஆணைப்படி, திருப்பூர் மாவட்ட சட்டப்பணிகள் குழவின் உத்தரவுப்படி தாராபுரம் வட்ட சட்டப் பணிகள் குழுவின் சார்பில் தாராபுரம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் சிறப்பு தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது. இதில் வட்ட சட்டப் பணிக்குழு தலைவரும் மற்றும் சார்பு நீதிபதியுமான எம்.தர்மபிரபு தலைமை தாங்கினார். குற்றவியல் நடுவர் எஸ்.பாபு முன்னிலை வகித்தார்.

அப்போது கடந்த 19.5.2022 தேதி சென்னிமலை பகுதியை சேர்ந்த விஜயகுமார் (42), மோட்டார் சைக்கிளில் சென்ற போது குண்டடம் அருகே கார் விபத்தில் இறந்தார். இதுதொடர்பாக அவருடைய மனைவி மற்றும் தாயார் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். இதுதொடர்பாக வழக்கறிஞர் எஸ்.டி.சேகர் வாதாடி வந்தார்.

இதில் விபத்தில் இறந்து போன விஜயகுமாருக்கு ரூ.22 லட்சம் வழங்க நீதிபதி தர்மபிரபு உத்தரவிட்டு அதற்கான ஆணையை மனைவி ஜெகதா மற்றும் தாயார் சின்னம்மாள் ஆகியோருக்கு முகாமில் வழங்கினார்.

இதில் மோட்டார் வாகன வழக்குகள் 18, உரிமையியல் வழக்கு 37, குற்றவியல் சிறு வழக்குகள் 26, காசோலை வழக்கு 3, வங்கி வாராக்கடன் வழக்கு 2, உள்பட மொத்தம் 87 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. இதன் மொத்த மதிப்பு ரூ.7 கோடியே 10 லட்சத்து 72 ஆயிரத்து 175 ஆகும். 325 பயணாளிகள், மக்கள் நீதிமன்றத்தின் மூலம் பயன் பெற்றனர். இதில் வழக்கறிஞர்கள், மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரியில் தொழில்துறை கணிதம் குறித்த தேசிய கருத்தரங்கம் நடைபெற்றது

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தேசிய அறிவியல் அகாடமியுடன் இணைந்து தொழில்துறை...

செல்லப்பம்பாளையம் பகுதியில் நாளை (17.07.2026) மின்தடை அறிவிப்பு

செல்லப்பம்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனா...

எல்லப்பாளையம் பகுதியில் நாளை (17.07.2026) மின்தடை அறிவிப்பு

எல்லப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (ஜூலை 17) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுவத...

எல்லப்பாளையம் பகுதியில் நாளை (17.07.206) மின்தடை அறிவிப்பு

எல்லப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (ஜூலை 17) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுவத...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உய...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் மற்றும் வரத்து விவரம்

கோவை மாவட்டத்தில் ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் ஜூலை 16 நிலவரப்படி நீர்மட்டம் மற்றும் வரத்து விவரங்கள் வெளிய...