திருப்பூரில் ஏழை மக்கள் பயன் பெறும் வகையில் இலவச சட்ட உதவி மையம் திறப்பு

பல்லடம் அருகே இயங்கி வரும் கே.எம்.சி சட்ட கல்லூரியில் இன்று மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு உடன் இணைந்து இலவச சட்ட உதவி மையம் திறப்பு விழா நடைபெற்றது.


திருப்பூர்: திருப்பூர் மாவட்ட அமர்வு நீதிமன்ற முதன்மை நீதிபதி ஸ்வர்ணம்.ஜே.நடராஜன் கலந்துகொண்டு இலவச சட்ட உதவி மையத்தினை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே இயங்கி வரும் கே.எம்.சி சட்ட கல்லூரியில் இன்று மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு உடன் இணைந்து துவங்கப்பட்டுள்ள இலவச சட்ட உதவி மையம் திறப்பு விழா நடைபெற்றது.

இந்நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக திருப்பூர் மாவட்ட அமர்வு நீதிமன்ற முதன்மை நீதிபதி ஸ்வர்ணம்.ஜே.நடராஜன் அவர்கள் கலந்துகொண்டு இலவச சட்ட உதவி மையத்தினை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.

ஏழை மக்கள் பயன் பெறும் வகையிலும், அவர்களுக்கான சட்ட உதவிகளை இலவசமாக வழங்கும் வகையிலும் இந்த மையம் திறக்கப்பட்டுள்ளது. மேலும் கேஎம்சி சட்டக் கல்லூரியின் தாளாளர் த அருணா ஸ்ரீதேவி, கல்லூரி முதல்வர் சவுந்தரபாண்டியன், சட்டக் கல்லூரி மாணவர்கள் மற்றும் சட்டக் கல்லூரி பேராசிரியர்கள் இந்நிகழ்வில் கலந்து கொண்டு குத்து விளக்கு ஏற்றி நிகழ்வினை தொடங்கி வைத்தனர்.



இதைத் தொடர்ந்து மாவட்ட முதன்மை நீதிபதி ஸ்வர்ணம்.ஜே.நடராஜன் மாணவர்களிடம் உரையாற்றினார். அப்போது அவர் பேசியாதவது, திருப்பூர் மாவட்டத்தில் முதல்முறையாக தொடங்கப்பட்டுள்ள இந்த சட்டக் கல்லூரியில் ஏழை மக்களுக்கு உதவும் வகையில் மாவட்டத்திலேயே முதல் முறையாக சட்ட உதவி மையம் தொடங்கப்பட்டுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. இலவச சட்ட உதவி மையத்தின் மூலம் மாணவர்கள் மக்களுக்கு எப்படி உதவலாம் என்பது குறித்து விளக்கமாக எடுத்துரைத்தார்.



மேலும் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள ஏழை எளிய மக்கள் எந்த நேரத்தில் வேண்டுமானாலும் தங்கள் கல்லூரியில் திறக்கப்பட்டுள்ள இலவச சட்ட உதவி மையத்தை அணுகலாம் என கல்லூரி நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

வேளாண் இளங்கலைப் பட்டப்படிப்பு, டிப்ளமோ சேர்க்கை: துணைக் கலந்தாய்வுக்கு விண்ணப்பிக்க கூடுதல் அவகாசம்

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் மற்றும் அண்ணாமலைப் பல்கலைக்கழக வேளாண்மைப் பிரிவின் 2026-27 பட்டப்படிப்பு மற்றும் பட்ட...

Coimbatore to Hold Rally on Settling Disputes Through Mediation

As part of the nationwide initiative, the District Mediation Centre will organise an awareness rally on September 9, to...

கல்வி, ஆராய்ச்சியில் நெறிமுறைகளில் சமரசம் கூடாது: பாரதியார் பல்கலை ஆசிரியர் தின விழாவில் வலியுறுத்தல்

தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப ஆசிரியர்கள் தங்களைத் தகவமைத்துக் கொள்ளும் அதேவேளையில், கல்வித் தரம், ஆராய்ச்சி நேர்மை, ஒழு...

Teachers’ Day Celebration at Bharathiar University Highlights Role of Technology and Ethics

The evolving role of educators and the importance of ethics, research integrity and social responsibility in higher educ...

ரத்தினபுரியில் வீட்டின் முன் விளையாடிய குழந்தை நிலத்தடி தண்ணீர் தொட்டியில் மூழ்கி உயிரிழப்பு

கோவை ரத்தினபுரி வ.உ.சி. நகரில் ஒரு வயது ஆண் குழந்தை வீட்டின் முன்பு விளையாடும்போது சரியாக மூடப்படாத நிலத்தடி தண்ணீர் தொட...

Toddler Dies After Accidental Fall into Water Sump in Coimbatore

Dhanvanth, a one-year-old child, died after he allegedly fell into an underground water sump near his house in Rathinapu...