தங்க நகை சேமிப்பு திட்டத்தில் 10 முதல் 15 சதவீதம் தள்ளுபடி - தனிஷ்க் ஜுவல்லரி அறிவிப்பு

சேமிப்பு திட்டத்தின் கீழ் நகை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு சிறப்பு சலுகை என தனிஷ்க் தென்னிந்திய மண்டலத்தின் தலைமை அதிகாரி கோவையில் அறிவித்துள்ளார்.


கோவை: கோவையில் புதிதாக திறக்கப்பட்ட இரண்டு கிளைகளிலும் நகை வாங்குபவர்களுக்கு நகை,வைரம் மதிப்பிற்கு ஏற்ப தங்க நாணயங்கள் இலவசமாக வழங்கப்படும் என தனிஷ்க் அறிவித்துள்ளது.

கோவை ஒப்பணக்கார வீதி மற்றும் மேட்டுப்பாளையம் சாலையில் தனிஷ்க் ஜுவல்லரி திறப்பு விழா நடைபெற்றது. இரண்டு கிளைகளை டைட்டன் குழுமத்தின் நிர்வாக இயக்குனர் வெங்கட்ராமன் திறந்து வைத்தார்.



அதில் சிறப்பு விருந்தினராக தென்னிந்திய மண்டலத்தின் தலைமை அதிகாரி சரத் மற்றும் தென்னிந்திய மண்டலத்தின் மேலாளர் நரசிம்மன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இரண்டு கிளைகளின் உரிமையாளர் அசோக் மற்றும் செல்வம் உடன் இருந்தனர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய தென்னிந்திய மண்டலத்தின் தலைமை அதிகாரி சரத் கூறியதாவது.

தமிழ்நாட்டில் மொத்தம் 55 தனிஷ்க் கிளைகள் இருப்பதாகவும் அதில் கோவை மாவட்டத்தில் 4 கிளைகள் இருப்பதாக தெரிவித்தார்.

டாட்டா மற்றும் டைட்டன் நிறுவனத்தின் குழுவை சேர்ந்தது தான் தனிஷ்க் நிறுவனம் என்றும் புதிய வரவுகளாக தரோஹர் & காக்கத்தியா தங்க நகை கலெக்ஷன்களை அறிமுகம் செய்து உள்ளதாக கூறினார்.

குறிப்பாக திருமண கலெக்ஷன் மற்றும் கலர் கற்கள் கொண்ட நகைகள் என ஒவ்வொரு கிளைகளிலும் சுமார் 4000"க்கும் மேற்பட்ட டிசைன்கள் இருப்பதாக தெரிவித்தார்.

கோவையில் புதிதாக திறக்கப்பட்ட இரண்டு கிளைகளிலும் நகை வாங்குபவர்களுக்கு நகை,வைரம் மதிப்பிற்கு ஏற்ப தங்க நாணயங்கள் இலவசமாக வழங்கப்படும் என்று கூறினார்.

தங்க நகைகளில் தயாரிப்புக்கு ஏற்றது போல சலுகைகள் வழங்க இருப்பதாகவும் அனைத்து நகைகளுக்கும் எக்ஸ்சேஞ்ச் செய்ய இருப்பதாக கூறினார்.

தங்க நகை சேமிப்பு திட்டத்தில் சேருபவர்களுக்கு 10"முதல்"15 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படும். பொதுவாக அனைத்து நோய்களுக்கும் செய்கூலி சேதாரம் உண்டு ஆனால் சேமிப்பு திட்டத்தின் கீழ் நகை வாங்கினால் அதற்கு சிறப்பு சலுகை இருப்பதாக கூறினார். தனிஷ்க் நிறுவனத்திற்கு 10,000"க்கு மேற்பட்டோர் கைவினை மூலமாக தங்க நகைகளை செய்து வருகின்றனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 75 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் ந...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ச்சியான மழை பெய்து வருவத...

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...