புரட்டாசி கடைசி நாள் - மலைமந்திரிபாளையத்தில் ஸ்ரீதேவி பூதேவி சமேத கதிராய பெருமாள் கோவிலில் சிறப்பு பூஜை

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே மலைமந்திரிபாளையத்தில் ஸ்ரீதேவி பூதேவி சமேத கதிராய பெருமாள் திருக்கோவிலில் புரட்டாசி மாத கடைசி சனியை ஒட்டி சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.


திருப்பூர்: 150 ஆண்டுகள் பழமை வாய்ந்த கோயில் சிறப்பு பூஜையில் பங்கேற்ற அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே மலைமந்திரிபாளையத்தில் சுமார் 150 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஸ்ரீதேவி பூதேவி சமேத கதிராய பெருமாள் திருக்கோவில் அமைந்துள்ளது. குழந்தை இல்லாதவர்கள், தொழில் பிரச்சனைகள் உள்ளவர்கள் இக்கோவிலுக்கு வந்து வழிபட்டு சென்றால் 60 நாட்களுக்குள் வேண்டும் வரங்களை நிறைவேற்றி தரும் ஸ்தலமாக இத்திருக்கோவில் விளங்குகிறது.



ஆண்டுதோறும் புரட்டாசி மாதம் சனிக்கிழமை நாட்களில் சிறப்பு பூஜைகள் நடைபெறும் நிலையில் புரட்டாசி மாத கடைசி சனிக்கிழமையான இன்று கதிராய பெருமாளுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

இரவு கோவில் கருவறை மாடத்தில் வைக்கப்பட்டிருந்த பெருமாள் சிலை மற்றும் கன்னிமார் சிலைகளை கீழே இறக்கி சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

அதன் தொடர்ச்சியாக காலை முதல் மூலவர் சிலைகளுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. திருப்பூர், கோவை,மேட்டுப்பாளையம் ஆகிய பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். அனைத்து பக்தர்களுக்கும் கோயில் நிர்வாகத்தின் சார்பில் சிறப்பு அன்னதானம் வழங்கப்பட்டது.

மாலை மீண்டும் பெருமாள் மற்றும் கன்னிமார் சிலைகளுக்கு கபால பூஜை செய்யப்பட்டு திரு வீதி உலாவுடன் விழா நிறைவடைகிறது.

இந்நிகழ்வினை கோவில் கமிட்டி நிர்வாகிகள் செல்வராஜ்,நடராஜன், முருகேசன்,பழனிச்சாமி,வேலுச்சாமி,சிடிசி பழனிச்சாமி, சரவணன் ஆகியோர் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர்.

Newsletter

கோவை மாநகராட்சி 24x7 குடிநீர் திட்டப் பகுதிகளில் சாலை சீரமைப்பு பணிகள் தொடக்கம்: மாநகராட்சி நிர்வாகம் அறிவிப்பு

கோவை மாநகராட்சியில் 24x7 குடிநீர் திட்டப்பணிகள் நடைபெறும் திருச்சி சாலை, மேட்டுப்பாளையம் சாலை, சத்தியமங்கலம் சாலை, அவினா...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் இன்னோவிஷன்-2026 அறிவியல் மற்றும் தொழில்நுட்பப் போட்டிகள் நடைபெற்றன

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் மாணவர்களின் சிந்தனைத்திறன் மற்றும் ஆய்வுநோக்கை ஊக்குவிக்கும் வகையில் இன்னோவிஷன்-2026 அறிவிய...

கோவை வடக்கு மண்டல வளர்ச்சித் திட்டங்களை மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் மற்றும் ஆணையாளர் கட்டா ரவி தேஜா முன்னிலையில் இணைப்பு பா...

கோவை மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் 51 மனுக்கள் பெறப்பட்டன

கோவை மாநகராட்சியில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. ஆணையாளர் க...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரியில் ராகிங் எதிர்ப்பு வார விழா நிறைவு

கோவை நவ இந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஆகஸ்ட் 12 முதல் 18 வரை நடைபெற்ற ராகிங் எதிர்ப...

கோவையில் மாநகராட்சியில் மக்கள் தொகை கணக்கெடுப்பு 61% நிறைவு: விடுபட்ட வீடுகளுக்கு உதவி எண்கள் வெளியீடு

கோவை மாநகராட்சியில் ஆகஸ்ட் 1 முதல் நடைபெறும் மக்கள் தொகை கணக்கெடுப்பு 2027-ன் முதற்கட்ட வீட்டு பட்டியல் பணி 61% நிறைவடைந...