உடுமலை அருகே 25 லட்சம் மதிப்பில் நலத்திட்டங்களுக்கு பூமி புஜை - அமைச்சர் சாமிநாதன் பங்கேற்பு

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே பயணிகள் நிழற்குடை, சுகாதார வளாகம் உள்ளிட்ட பணிகளுக்கான பூமிபூஜை அமைச்சர் சாமிநாதன் முன்னிலையில் போடப்பட்டது.


திருப்பூர்: உடுமலையில் தார்சாலை அமைக்கும் பணிக்கு நடைபெற்ற பூமிபூஜை நிகழ்வில் அமைச்சர் சாமிநாதன் பங்கேற்றார்.

திருப்பூர் மாவட்டம் உடுமலை சட்டமன்ற தொகுதி குடிமங்கலம் ஒன்றியம் ராமச்சந்திராபுரம் ஊராட்சிக்குட்பட்ட அணிக்கடவு கிராமத்தில் 7 லட்சம் மதிப்பீட்டில் பயணிகள் நிழற்கூரை மற்றும் 6. 50 லட்சம் மதிப்பில் சுகாதார வளாகம் , மற்றும் 10.30 லட்சம் மதிப்பில் தார் சாலை அமைக்கும் பணிகளுக்காக பூமி பூஜை போடப்பட்டு பணிகள் துவங்கப்பட்டன.

இந்த நிகழ்வில் தமிழக செய்தி துறை தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன் மற்றும் திருப்பூர் மாவட்ட ஆட்சித் தலைவர் கிறிஸ்துராஜ், வருவாய் கோட்டாட்சியர் ஜஸ்வந்த் கண்ணன், வட்டாட்சியர் சுந்தரம், குடிமங்கலம் வடக்கு ஒன்றிய செயலாளர் அனிக்கடவு கிரி ஒன்றிய குழு உறுப்பினர் கவிதா கிரி ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை மாநகராட்சி 24x7 குடிநீர் திட்டப் பகுதிகளில் சாலை சீரமைப்பு பணிகள் தொடக்கம்: மாநகராட்சி நிர்வாகம் அறிவிப்பு

கோவை மாநகராட்சியில் 24x7 குடிநீர் திட்டப்பணிகள் நடைபெறும் திருச்சி சாலை, மேட்டுப்பாளையம் சாலை, சத்தியமங்கலம் சாலை, அவினா...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் இன்னோவிஷன்-2026 அறிவியல் மற்றும் தொழில்நுட்பப் போட்டிகள் நடைபெற்றன

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் மாணவர்களின் சிந்தனைத்திறன் மற்றும் ஆய்வுநோக்கை ஊக்குவிக்கும் வகையில் இன்னோவிஷன்-2026 அறிவிய...

கோவை வடக்கு மண்டல வளர்ச்சித் திட்டங்களை மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் மற்றும் ஆணையாளர் கட்டா ரவி தேஜா முன்னிலையில் இணைப்பு பா...

கோவை மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் 51 மனுக்கள் பெறப்பட்டன

கோவை மாநகராட்சியில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. ஆணையாளர் க...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரியில் ராகிங் எதிர்ப்பு வார விழா நிறைவு

கோவை நவ இந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஆகஸ்ட் 12 முதல் 18 வரை நடைபெற்ற ராகிங் எதிர்ப...

கோவையில் மாநகராட்சியில் மக்கள் தொகை கணக்கெடுப்பு 61% நிறைவு: விடுபட்ட வீடுகளுக்கு உதவி எண்கள் வெளியீடு

கோவை மாநகராட்சியில் ஆகஸ்ட் 1 முதல் நடைபெறும் மக்கள் தொகை கணக்கெடுப்பு 2027-ன் முதற்கட்ட வீட்டு பட்டியல் பணி 61% நிறைவடைந...