உடுமலையில் பள்ளி மாணவ மாணவியருக்கு சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அமராவதி நகர் அரசு பள்ளியில் காவல்துறை சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.


திருப்பூர்: சாலை பாதுகாப்பு பற்றிய அறிவுரைகளையும் மற்றும் அதன் விதிமுறைகளையும் பள்ளி மாணவர்களுக்கு காவல்துறையினர் விளக்கினர்.



திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை வட்டத்திற்கு உட்பட்ட அமராவதி நகர் அரசு உயர்நிலைப்பள்ளியில் மாணவ மாணவியருக்கு அமராவதி நகர் காவல் துறை மற்றும் எண்ணம் போல் வாழ்க்கை அறக்கட்டளை இணைந்துசாலைப் பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியை அப்பள்ளியின் தலைமை ஆசிரியர் (பொறுப்பு) M.S.மணிகண்டன் தலைமை தாங்கினார்.



இதில் சிறப்பு விருந்தினராக அமராவதி நகர் காவல்துறை உதவி ஆய்வாளர் சண்முக மூர்த்தி கலந்து கொண்டு சாலை பாதுகாப்பு பற்றிய அறிவுரைகளையும் மற்றும் அதன் விதிமுறைகளையும் எடுத்துரைத்தார். எண்ணம் போல் வாழ்க்கை அறக்கட்டளையின் நிறுவனர் முனைவர் S.A.I நெல்சன் அவர்கள் கலந்து கொண்டு சாலைப் பாதுகாப்பில் என் பங்கு என்ற தலைப்பில் கருத்துகளை எடுத்துரைத்தார்.



இதில் மாணவர்களுக்கு சாலைப் பாதுகாப்பு பற்றிய கட்டுரை மற்றும் ஓவியப்போட்டி நடைபெற்றது அப்பள்ளியின் மாணவ மாணவிகள் இதில் பங்கு பெற்றார்கள். இந்நிகழ்வில் பள்ளியின் ஆசிரியர்கள் கலந்துகொண்டனர்

Newsletter

கோவை மாநகராட்சி 24x7 குடிநீர் திட்டப் பகுதிகளில் சாலை சீரமைப்பு பணிகள் தொடக்கம்: மாநகராட்சி நிர்வாகம் அறிவிப்பு

கோவை மாநகராட்சியில் 24x7 குடிநீர் திட்டப்பணிகள் நடைபெறும் திருச்சி சாலை, மேட்டுப்பாளையம் சாலை, சத்தியமங்கலம் சாலை, அவினா...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் இன்னோவிஷன்-2026 அறிவியல் மற்றும் தொழில்நுட்பப் போட்டிகள் நடைபெற்றன

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் மாணவர்களின் சிந்தனைத்திறன் மற்றும் ஆய்வுநோக்கை ஊக்குவிக்கும் வகையில் இன்னோவிஷன்-2026 அறிவிய...

கோவை வடக்கு மண்டல வளர்ச்சித் திட்டங்களை மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் மற்றும் ஆணையாளர் கட்டா ரவி தேஜா முன்னிலையில் இணைப்பு பா...

கோவை மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் 51 மனுக்கள் பெறப்பட்டன

கோவை மாநகராட்சியில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. ஆணையாளர் க...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரியில் ராகிங் எதிர்ப்பு வார விழா நிறைவு

கோவை நவ இந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஆகஸ்ட் 12 முதல் 18 வரை நடைபெற்ற ராகிங் எதிர்ப...

கோவையில் மாநகராட்சியில் மக்கள் தொகை கணக்கெடுப்பு 61% நிறைவு: விடுபட்ட வீடுகளுக்கு உதவி எண்கள் வெளியீடு

கோவை மாநகராட்சியில் ஆகஸ்ட் 1 முதல் நடைபெறும் மக்கள் தொகை கணக்கெடுப்பு 2027-ன் முதற்கட்ட வீட்டு பட்டியல் பணி 61% நிறைவடைந...