வட்டமலைபாளையம் ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் மாணவர்களுக்கு வழிகாட்டுதல் நிகழ்ச்சி

கோவை மாவட்டம் துடியலூரை அடுத்த வட்டமலைபாளையம் ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில்12ம் வகுப்பு முடித்ததும் என்ன படிக்கலாம் என்ற தலைப்பில் வழிக்காட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது.


கோவை: என்ன படிக்கலாம் என்ற வழிக்காட்டுதல் நிகழ்ச்சியில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் இருந்து 1500க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் பங்கேற்றனர்.

கோவை, துடியலூரை அடுத்த வட்டமலைபாளையம் ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில், பள்ளி மாணவருக்கான உயர் கல்வி பயிலுதல் பற்றிய வழிகாட்டி நிகழ்ச்சி கல்லூரி கலையரங்கத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வர் என்.ஆர் அலமேலு அனைவரையும் வரவேற்றார். தொழில்நுட்ப கல்விக்கான அகில இந்திய கவுன்சிலின் ஐடியா லேப் மற்றும் இன்ஸ்டிடியூஷன் இன்னோவேஷன் கவுன்சில் மூலம் ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற பள்ளி மாணவர்களுக்கான திறன் மேம்பாட்டு மற்றும் உயர் கல்வி பயிலுதல் பற்றிய வழிகாட்டி நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக எதிர்கால தொழில் மற்றும் கல்வி வழிகாட்டல் நிபுணர் மற்றும் ஆய்வாளர் அஸ்வின் கலந்து கொண்டார்.



அவர் பேசும் போது, உயர்கல்வியின் மகத்துவத்தையும், பெண்கல்வியின் மகத்துவத்தையும் எடுத்துரைத்தார். மாணவ, மாணவியர்கள் பன்னிரெண்டாம் வகுப்பு முடிந்தவுடன் தங்களின் எதிர்கால கல்வி குறித்து எவ்வாறு திட்டமிடல் வேண்டும் எனவும், என்.ஐ.டி ஐ.ஐ,எஸ்.சி, ஐ.ஐ.டி மற்றும் பல்வேறு கல்வி நிறுவனங்கள், மற்றும் பல்கலைக்கழகங்களுக்கு எவ்வாறு மாணவர்கள் தேர்ச்சி பெற வேண்டும் என விளக்கக்காட்சி மூலம் விரிவாக எடுத்து கூறினார்.

படிப்பதற்கு மனம் ஆசை பட வேண்டும் என்பதனையும் அதற்கு பணம் ஒரு பொருட்டல்ல என்பதை மனதில் கொண்டு அரசு பள்ளி மாணவ மாணவியர்கள் எவ்வாறு இக்காலகட்டத்தில் சாதிக்கின்றனர் என்பதனையும் புள்ளிவிவரத்துடன் விளக்கியது மாணவர்களுக்கு பயனுள்ளதாக அமைந்தது. சுமார் 1500க்கும் மேற்பட்ட அரசு பள்ளி மற்றும் தனியார் பள்ளி மாணவ மாணவர்கள் கலந்து கொண்ட இந்நிகழ்ச்சியில், கல்லூரியின், விளையாட்டுத்துறை, ஆங்கில இலக்கிய சமூகம், தமிழ் மன்றம், ஐடியா லேப், ரோபோடிக்ஸ் அண்ட் ஆட்டோமேஷன், ஏரோ மாடலிங் என பல்வேறு குழுக்கள் நடத்திய செயல்பாடு அடிப்படையிலான கற்றல் மூலம் மாணவர்கள் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர்.

சிறப்பாக திறமைகளையும் வெளிப்படுத்திய மாணவ மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. விழாவை, கல்லூரியின் தகவல் தொழில் நுட்பத்துறை தலைவர் செந்தமிழ் செல்வி, நாட்டு நலப்பணி திட்ட தலைவர் கேசவசாமி ஆகியோர் ஏற்பாடு செய்திருந்தனர்.

Newsletter

எதிர்க்கட்சியாக மக்களின் நலனுக்காக தொடர்ந்து திமுக போராடும் – முதல்வர் மு.க. ஸ்டாலின்

தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து, திமுக தலைவர் முக ஸ்டாலின்  வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்களுக்காக சிறப்பாக ஆளும் கட்சியாக...

கோவையில் 5 தொகுதிகளில் த.வெ.க முன்னிலை – ஜி.சி.டி முன்பு பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!

கோவை மாவட்டத்தில் 5 தொகுதிகளில் தமிழக வெற்றிக் கழகம் முன்னிலை பெற்ற நிலையில், ஓட்டுகள் எண்ணப்படும் ஜி.சி.டி கல்லூரி வளாக...

தமிழக அரசியலில் புதிய திருப்பம்: தவெக முன்னிலை, மூத்த கட்சிகள் பின்னடைவு

தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளில் காலை 9 மணி நிலவரப்படி தவெக 38 இடங்களில் முன்னிலையில் உள்ளது. முதல் முறையாக தேர...

Tomorrow’s Counting at GCT to Begin with Postal Ballots at 8 AM

Vote counting for all 10 constituencies in Coimbatore district will be held at the Government College of Technology (GCT...

139th Kandhuri Urs Festival in Udumalpet Marked by Prayers and Feast

The 139th annual Kandhuri Urs festival at Mureedu Baba Dargah in Udumalpet was marked by special prayers, spiritual disc...

உடுமலையில் 139வது உரூஸ் கந்தூரி விழா: சிறப்பு பிரார்த்தனை, அன்னதானம்

உடுமலையில் முரீது பாபா தர்காவில் நடைபெற்ற 139வது ஆண்டு உரூஸ் கந்தூரி விழாவில் சிறப்பு பிரார்த்தனை, ஆன்மீக உரைகள் மற்றும்...