வட்டமலைபாளையம் ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் மாணவர்களுக்கு வழிகாட்டுதல் நிகழ்ச்சி

கோவை மாவட்டம் துடியலூரை அடுத்த வட்டமலைபாளையம் ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில்12ம் வகுப்பு முடித்ததும் என்ன படிக்கலாம் என்ற தலைப்பில் வழிக்காட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது.


கோவை: என்ன படிக்கலாம் என்ற வழிக்காட்டுதல் நிகழ்ச்சியில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் இருந்து 1500க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் பங்கேற்றனர்.

கோவை, துடியலூரை அடுத்த வட்டமலைபாளையம் ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில், பள்ளி மாணவருக்கான உயர் கல்வி பயிலுதல் பற்றிய வழிகாட்டி நிகழ்ச்சி கல்லூரி கலையரங்கத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வர் என்.ஆர் அலமேலு அனைவரையும் வரவேற்றார். தொழில்நுட்ப கல்விக்கான அகில இந்திய கவுன்சிலின் ஐடியா லேப் மற்றும் இன்ஸ்டிடியூஷன் இன்னோவேஷன் கவுன்சில் மூலம் ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற பள்ளி மாணவர்களுக்கான திறன் மேம்பாட்டு மற்றும் உயர் கல்வி பயிலுதல் பற்றிய வழிகாட்டி நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக எதிர்கால தொழில் மற்றும் கல்வி வழிகாட்டல் நிபுணர் மற்றும் ஆய்வாளர் அஸ்வின் கலந்து கொண்டார்.



அவர் பேசும் போது, உயர்கல்வியின் மகத்துவத்தையும், பெண்கல்வியின் மகத்துவத்தையும் எடுத்துரைத்தார். மாணவ, மாணவியர்கள் பன்னிரெண்டாம் வகுப்பு முடிந்தவுடன் தங்களின் எதிர்கால கல்வி குறித்து எவ்வாறு திட்டமிடல் வேண்டும் எனவும், என்.ஐ.டி ஐ.ஐ,எஸ்.சி, ஐ.ஐ.டி மற்றும் பல்வேறு கல்வி நிறுவனங்கள், மற்றும் பல்கலைக்கழகங்களுக்கு எவ்வாறு மாணவர்கள் தேர்ச்சி பெற வேண்டும் என விளக்கக்காட்சி மூலம் விரிவாக எடுத்து கூறினார்.

படிப்பதற்கு மனம் ஆசை பட வேண்டும் என்பதனையும் அதற்கு பணம் ஒரு பொருட்டல்ல என்பதை மனதில் கொண்டு அரசு பள்ளி மாணவ மாணவியர்கள் எவ்வாறு இக்காலகட்டத்தில் சாதிக்கின்றனர் என்பதனையும் புள்ளிவிவரத்துடன் விளக்கியது மாணவர்களுக்கு பயனுள்ளதாக அமைந்தது. சுமார் 1500க்கும் மேற்பட்ட அரசு பள்ளி மற்றும் தனியார் பள்ளி மாணவ மாணவர்கள் கலந்து கொண்ட இந்நிகழ்ச்சியில், கல்லூரியின், விளையாட்டுத்துறை, ஆங்கில இலக்கிய சமூகம், தமிழ் மன்றம், ஐடியா லேப், ரோபோடிக்ஸ் அண்ட் ஆட்டோமேஷன், ஏரோ மாடலிங் என பல்வேறு குழுக்கள் நடத்திய செயல்பாடு அடிப்படையிலான கற்றல் மூலம் மாணவர்கள் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர்.

சிறப்பாக திறமைகளையும் வெளிப்படுத்திய மாணவ மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. விழாவை, கல்லூரியின் தகவல் தொழில் நுட்பத்துறை தலைவர் செந்தமிழ் செல்வி, நாட்டு நலப்பணி திட்ட தலைவர் கேசவசாமி ஆகியோர் ஏற்பாடு செய்திருந்தனர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...