குண்டடம் அருகே மனைவியை அடித்து உதைத்து கொலை மிரட்டல் விடுத்த கணவர் கைது

குண்டடம் அருகே உள்ள எரகாம்பட்டியில் அடித்து உதைத்து கொலை மிரட்டல் விடுப்பதாக மனைவி அளித்த புகாரின் பேரில் அவரது கணவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.


திருப்பூர்: கணவன் கொடுமைப்படுத்துவதாக போலீசில் புகார் அளிக்க சென்றபோது காரின் கண்ணாடிகளை உடைத்த கணவரை போலீசார் கைது செய்தனர்.

திருப்பூர் மாவட்டம் குண்டடம் அருகே உள்ள எரகாம்பட்டியை சேர்ந்தவர் சுரேஷ்குமார் (வயது 44). இவரது மனைவி சந்தியா. இந்த நிலையில் நேற்று முன்தினம் சந்தியாவை அவருடைய கணவர் சுரேஷ்குமார் அடித்து உதைத்து கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதை தொடர்ந்து போலீசில் புகார் கொடுக்க காரில் குண்டடம் சென்று ஒரு பேக்கரி முன்பு காரை நிறுத்தி விட்டு போலீஸ் நிலையத்திற்கு சந்தியா சென்றார்.

அப்போது அங்கு வந்த சுரேஷ்குமார் காரின் கண்ணாடிகளை உடைத்துவிட்டார். இதையடுத்து சந்தியா அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் சுரேஷ்குமாரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் புதிய கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களை ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா, தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில் கட்டப்பட்டுவரும் கழிவுநீர் சுத்திகர...

வடவள்ளி உள்ளிட்ட பகுதிகளில் நாளை 8 மணி நேரம் மின்தடை

கோவை எஸ்.என்.பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுவதால், வடவள்ளி உள்ளிட்ட 11 பகுதிகளில் கா...

குறிச்சி பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

குறிச்சி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சிட்கோ குற...

கிணத்துக்கடவு பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

கிணத்துக்கடவு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 முதல் மாலை 5 வரை சுலக்கல், தாம...

கோவையில் அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் - பல்வேறு கோரிக்கைகள் முன்வைப்பு

நீதித்துறையின் சுதந்திரம், சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ் அலுவல் மொழி, இளம் வழக்கறிஞர்களுக்கு உதவித்தொகை உள்ளிட்ட பல்வே...

அமராவதி அணை 50.56 அடி, திருமூர்த்தி அணை 27.75 அடி நீர்மட்டம்

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...