வால்பாறையில் திமுக சார்பில் தமிழ்நாடு மோட்டார் வாகன ஓட்டுனர்கள் சங்கம் ஆலோசனை கூட்டம்

திமுக சார்பில் வால்பாறையில் நடைபெற்ற தமிழ்நாடு மோட்டார் வாகன ஓட்டுனர்கள் சங்கம் ஆலோசனை கூட்டத்தில்,வாகனம் நிறுத்தும் இடம் வழங்க வேண்டும் கோரிக்கை விடுக்கப்பட்டது.


கோவை: சங்க உறுப்பினர்களுக்கு உரிய நடவடிக்கை பாதுகாப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என்று தமிழ்நாடு மோட்டார் வாகன ஓட்டுனர்கள் சங்கம் ஆலோசனை கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.



கோவை மாவட்டம் வால்பாறையில் திமுக சார்பாக தமிழ்நாடு மோட்டார் வாகன ஓட்டுநர் முன்னேற்ற சங்கம் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் மாநில பொதுச் செயலாளர் அருணகிரிநாதன், செயலாளர் ராம், துணைத் தலைவர் ராஜா மற்றும் வால்பாறை lpf சங்கம் வினோத் மற்றும் சவுந்திரபண்டியன் ஆகியோர்கள் கலந்து கொண்டனர்.



வால்பாறையில் உள்ள ஆட்டோ, கார், வேன், லாரி ஓட்டுநர்கள் திமுக சார்பாக தொழிற்சங்கங்களில் இணைந்து ஓட்டுனர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் நலத்திட்ட உதவிகள் வெளி மாநிலங்களில் சென்றால் ஏற்படும் பிரச்சனைகளை தவிர்ப்பதற்கு உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் மேலும் உறுப்பினர் அட்டை பெற்று அவர்களுக்கு தேவையான நல வாரியத்தின் மூலம் உதவிகளும் காப்பீடு திட்டங்களும் மருத்துவகாப்பீடு திட்டங்களும் செயல்படுத்தப்படுவோம் என்றும், வால்பாறை பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது, மேலும் வால்பாறையில் வாகனங்களை நிறுத்த அதற்கு இடமில்லாமல் உள்ளதால் வாகனங்கள் சாலை ஓரங்களில் நிறுத்தினால் காவல்துறையினர் அபராதம் விதித்து வருகின்றனர்.

வால்பாறையில் வாகனம் நிறுத்தும் இடம் வழங்க வேண்டும் என்று வட்டாரப் போக்குவரத்து அலுவலரிடம் கோரிக்கை மனு ஒன்று வைத்தனர். சங்க உறுப்பினர்களுக்கு உரிய நடவடிக்கை பாதுகாப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என்று சங்க ஆலோசனைக் கூட்டத்தில் தெரிவித்தனர். மேலும் இக்கூட்டத்திற்கு சிறப்பு விருந்தினராக வால்பாறை நகரச் செயலாளர் சுதாகர் நாலாவது வார்டு உறுப்பினர் ஜே பாஸ்கர் பாஸ்கர் எஸ் ஆர் எஸ் சுரேஷ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

அன்னூர் அருகே 147 மது பாட்டில்களை பதுக்கி வைத்திருந்த முதியவர் கைது.

கோவை மாவட்டம் அன்னூர் அருகே அனுமதியின்றி மது விற்பனைக்காக 147 மது பாட்டில்கள் பதுக்கி வைத்திருந்த 62 வயது முதியவரை போலீச...

கோவையில் மீன் பிடிக்கச் சென்ற 13 வயது மாணவன் கொலை; சக மாணவர்கள் 2 பேர் கைது

கோவை இருகூர் அருகே வாய்க்காலில் மீன் பிடிக்கச் சென்ற 7ஆம் வகுப்பு மாணவன், சக மாணவர்களால் மதுபாட்டிலால் தாக்கிக் கொலை செய...

Sri Ramakrishna மருத்துவமனையின் இரண்டு நாள் சுகாதார விழிப்புணர்வு கண்காட்சி Brookfield மாலில் தொடக்கம்

உலக ஆஸ்துமா தினம் மற்றும் உலக செரிமான ஆரோக்கிய தினத்தை முன்னிட்டு, Coimbatore Sri Ramakrishna மருத்துவமனை சார்பில் Brook...

“டாஸ்மாக் கடையை மூடுங்கள்” – கோவையில் பெண்கள், குழந்தைகள் திடீர் முற்றுகை போராட்டம்

கோவை: இருகூரில் இருந்து அத்தப்பகவுண்டன்புதூர் செல்லும் சாலையில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் மதுக்கடையை மூட வலியுறுத்தி 50-...

“நான் தான் எல்லாம்” எண்ணத்தில் எடப்பாடி செயல்படுகிறார்: செங்கோட்டையன்

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், எடப்பாடி பழனிசாமியின் தற்போதைய நிலைப்பாடுகள் எம்....

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...