வால்பாறை அருகே கபாலி யானையிடம் கலாட்டா செய்த கேரளா சுற்றுலா பயணி கைது

கோவை மாவட்டம் வால்பாறை அருகே கபாலி என்று அழைக்கப்படும் காட்டு யானையை தொந்தரவு செய்த சுற்றுலா பயணியை கேரளா வனத்துறையினர் கைது செய்தனர்.


கோவை: யானையின் அருகே சென்று நடனமாடி வீடியோ எடுத்து சேட்டையில் ஈடுபட்ட சபீர் என்ற நபரை கேரளா வனத்துறையினர் கைது செய்தனர்.

கோவை மாவட்டம் வால்பாறை அருகே கபாலி என்று அழைக்கப்படும் காட்டு யானையை தொந்தரவு செய்த சுற்றுலா பயணியை கேரளா வனத்துறையினர் கைது செய்தனர். திருசூர் மாவட்டம் சாலக்குடியில் இருந்து வால்பாறை செல்லும் ரோட்டில் யானைகள் தனித்தனியாக கூட்டம் கூட்டமாக முகாமிட்டு உள்ளது.

சாலக்குடி பகுதியில் அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சி அமைந்துள்ளதால் சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வால்பாறையில் இருந்து காட்டு வழியாக செல்கின்றனர்.



அதிரப்பள்ளி ரோட்டில் கடந்த ஒரு வாரமாக கபாலி என அழைக்கப்படும் ஒற்றை யானை சுற்றுலா வாகனங்களை தொந்தரவு செய்யும் சம்பவம் அடிக்கடி நடந்து வருகிறது.

இந்நிலையில் கேரள மாநிலம் கைப்பமங்கலம் என்ற பகுதியை சேர்ந்த சபீர் வயது 38 என்பவர் வால்பாறைக்கு சுற்றுலா வந்தார். அதன்பின் அதிரப்பள்ளியில் இருந்து சாலக்குடி நோக்கி சென்றார். அப்போது அம்பலப்பாறை ரோட்டில் அருகில் கபாலி யானை வழக்கம் போல் நின்றுள்ளது. சுதாரித்துக் கொண்ட சுற்றுலா பயணிகள் வாகனங்களை பாதுகாப்பாக பின்நோக்கி நகரத்தினர்.



அப்போது சபீர் யானையின் அருகே சென்று நடனமாடி வீடியோ எடுத்து சேட்டையில் ஈடுபட்டுள்ளார். யானை சாலையில் நின்ற வாகனத்தை சேதப்படுத்தியது. வாகனத்தில் இருந்தவர்கள் அருகில் நின்ற பேருந்துக்கு சென்று தப்பினர்.

அந்த சம்பவத்தை கேரளா அரசு பஸ்ஸில் பயணம் செய்த பயணி ஒருவர் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவு விட்டார்.



இதனை தொடர்ந்து கேரளா வனத்துறையினர் கபாலி யானையை தொந்தரவு செய்து சுற்றுலா பயணிகளை அச்சுறுத்தல் செய்ததால் கேரளா வனத்துறையினர் சபீரை கைது செய்தனர்.

Newsletter

புதிய தமிழக அரசுக்கு வாழ்த்து தெரிவித்த கோவை மண்டல திருக்கோவில்கள் பரம்பரை அறங்காவலர்கள் சங்கம்..!

புதியதாக பொறுப்பேற்றுள்ள தமிழக முதல்வர் ஜோசப் விஜய் தலைமையிலான அரசுக்கு கோவை மண்டல திருக்கோவில்கள் பரம்பரை அறங்காவலர்கள்...

SSLC தேர்வு முடிவுகள் 2026: கொங்கு மண்டலத்தில் 97.09 சதவீதம் தேர்ச்சி விகிதத்துடன் கோவை முதலிடம்..!

தமிழகத்தில் நடைபெற்ற 2026 எஸ்.எஸ்.எல்.சி பொதுத்தேர்வு முடிவுகளில் புதுக்கோட்டை, சிவகங்கை, தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்கள் மாந...

கோவையில் 1,500-க்கும் மேற்பட்ட மருந்தகங்கள் அடைப்பு; பொதுமக்கள் அவதி..!

ஆன்லைன் மருந்து விற்பனைக்கு தடை விதிக்க வேண்டும், கார்ப்பரேட் நிறுவனங்களின் தள்ளுபடி விற்பனையை கட்டுப்படுத்த வேண்டும் உள...

மீண்டும் இ-மெயில் மூலம் கலெக்டர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்..! – மர்ம நபரை பிடிக்க போலீசார் தீவிரம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மீண்டும் இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்ததை தொடர்ந்து, மெட்டல் டிடெக்டர் கருவ...

உயர் இரத்த அழுத்தம்: GKNM மருத்துவமனையில் மூன்று நாள் விழிப்புணர்வு முகாம்

உலக உயர் இரத்த அழுத்த நாளை முன்னிட்டு GKNM Hospital மருத்துவமனையில் மே 18 முதல் 20 வரை விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற...

கோவை அருகே சாராயம் காய்ச்சிய 2 பேர் கைது; 20 லிட்டர் கள்ளச்சாராயம் பறிமுதல்..!

கருமத்தம்பட்டி அருகே சாராயம் காய்ச்சியதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் போலீசார் நடத்திய சோதனையில், 2 பேர் கைது செய்யப்பட...