மாநில அளவிலான தடகள போட்டி - தாராபுரம் லயன்ஸ் மெட்ரிக் பள்ளி மாணவர்கள் தகுதி

திருப்பூர் மாவட்டத்தில் பள்ளி கல்வித்துறை சார்பில் நடைபெற்ற போட்டியில் தாராபுரம் லயன்ஸ் பள்ளி மாணவர்கள் வெற்றி பெற்றனர்


திருப்பூர்: தமிழக பள்ளிக் கல்வித்துறை சார்பில் நடைபெற்ற தடகள போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்கள் மாநில அளவிலான போட்டிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

திருப்பூர் மாவட்டம் பள்ளி கல்வித்துறை சார்பில் அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்களுக்கான தடகளப் போட்டி பல்லடம் அரசு மேல்நிலைப் பள்ளியில் பள்ளியில் நடைபெற்றது.

அதில் பல்லடத்தில் நடைபெற்ற தடகளப் போட்டியில் தாராபுரம் லயன்ஸ் மெட்ரிக்குலேசன் மேல்நிலைப் பள்ளி சார்பில் 5 மாணவர்கள் கலந்து கொண்டனர்.

அதில் மாணவர் அன்புச் செல்வன் ஈட்டி எறிதல் போட்டியில் 44.38 மீட்டர் தூரம் எறிந்து 2-வது இடமும், மாணவர் தர்ஷன் 1.65 மீட்டர் உயரம் தாண்டி மாவட்ட அளவில் முதலிடம் பெற்றார். இரண்டு போட்டியில் வெற்றி பெற்ற அன்பு செல்வன் மற்றும் தர்ஷன் ஆகிய இருவரும் மாநில அளவில் தடகளப் போட்டிகளில் விளையாட தகுதி பெற்றுள்ளனர். இவர்கள் இருவரை பள்ளி தாளாளர் டாக்டர் தங்கராஜ், பள்ளி முதல்வர் மற்றும் ஆசிரியர்கள், சகமாணவர்கள் பாராட்டு தெரிவித்தனர்.

Newsletter

கோவை மாநகராட்சி 24x7 குடிநீர் திட்டப் பகுதிகளில் சாலை சீரமைப்பு பணிகள் தொடக்கம்: மாநகராட்சி நிர்வாகம் அறிவிப்பு

கோவை மாநகராட்சியில் 24x7 குடிநீர் திட்டப்பணிகள் நடைபெறும் திருச்சி சாலை, மேட்டுப்பாளையம் சாலை, சத்தியமங்கலம் சாலை, அவினா...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் இன்னோவிஷன்-2026 அறிவியல் மற்றும் தொழில்நுட்பப் போட்டிகள் நடைபெற்றன

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் மாணவர்களின் சிந்தனைத்திறன் மற்றும் ஆய்வுநோக்கை ஊக்குவிக்கும் வகையில் இன்னோவிஷன்-2026 அறிவிய...

கோவை வடக்கு மண்டல வளர்ச்சித் திட்டங்களை மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் மற்றும் ஆணையாளர் கட்டா ரவி தேஜா முன்னிலையில் இணைப்பு பா...

கோவை மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் 51 மனுக்கள் பெறப்பட்டன

கோவை மாநகராட்சியில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. ஆணையாளர் க...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரியில் ராகிங் எதிர்ப்பு வார விழா நிறைவு

கோவை நவ இந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஆகஸ்ட் 12 முதல் 18 வரை நடைபெற்ற ராகிங் எதிர்ப...

கோவையில் மாநகராட்சியில் மக்கள் தொகை கணக்கெடுப்பு 61% நிறைவு: விடுபட்ட வீடுகளுக்கு உதவி எண்கள் வெளியீடு

கோவை மாநகராட்சியில் ஆகஸ்ட் 1 முதல் நடைபெறும் மக்கள் தொகை கணக்கெடுப்பு 2027-ன் முதற்கட்ட வீட்டு பட்டியல் பணி 61% நிறைவடைந...