உடுமலை ஏழுமலையான் கோவிலில் அடிப்படை வசதிகள் செய்து தர பக்தர்கள் கோரிக்கை

திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்த ஏழுமலையான் கோவிலில் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுக்குமாறு கோரிக்கை எழுந்துள்ளது


திருப்பூர்: குடிநீர் உட்பட அடிப்படை வசதிகள் இல்லாத காரணத்தினால் ஏழுமலையான் கோவிலுக்கு வரும் பக்தர்கள் அதிருப்தி.

திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்த ஆனைமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட உடுமலை வனச்சரகத்தின் அடர்ந்த வனப்பகுதியில் ஏழுமலையான் கோவில் உள்ளது. மலை அடிவாரத்தில் இருந்து சுமார் 15 கிலோ மீட்டர் உயரத்தில் உள்ள இந்த கோவிலில் மூலவராக ஏழுமலை வெங்கடாசலபதியும் உற்சராக சீனிவாச பெருமாளும் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார்கள்.

அது தவிர கோவில் வளாகத்தில் வேணுகோபாலசாமிக்கு தனி சன்னதியும் அமைந்துள்ளது.

இங்கு வாரந்தோறும் சனிக்கிழமையன்று ஏழுமலையானுக்கு சிறப்பு பூஜை நடைபெற்று வருகிறது.

கோவில் அடர்ந்த வனப்பகுதியில் உள்ளதால் புரட்டாசி மாதத்தில் வருகின்ற சனிக்கிழமைகளில் மட்டுமே பக்தர்கள் சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுகின்றனர். அந்த வகையில் கடந்த மூன்று சனிக்கிழமைகளில் ஏழுமலையானுக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது.

இதில் சுற்றுப்புற கிராமம் மற்றும் அண்டை மாநிலமான கேரளாவைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்து விட்டு சென்றனர்.



ஆனால் அடிப்படை அத்தியாவசிய தேவையான குடிதண்ணீர் வசதி செய்து தரப்படவில்லை. இதனால் பொதுமக்கள் அவதிக்கு உள்ளாகி வந்தனர். மேலும் குடிதண்ணீர் வசதி ஏற்படுத்தித் தருமாறு வேண்டுகோள் விடுத்தனர். ஆனால் அதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படவில்லை இந்த சூழலில் புரட்டாசி மாதத்தின் இறுதி சனிக்கிழமை விழா நடைபெற உள்ளது. இதில் கலந்து கொள்வதற்காக ஏராளமான பக்தர்கள் திரளக் கூடிய வாய்ப்பு உள்ளது.

போதிய மழைப்பொழிவு இல்லாததால் வனப் பகுதியில் உற்பத்தியாகின்ற ஆறுகளிலும் நீர்வரத்து இல்லை. இதனால் தண்ணீர் கிடைப்பது சவாலான விஷயமாகும். எனவே ஏழுமலையான் கோவிலுக்கு வருகை தருகின்ற பொதுமக்கள் நலன் கருதி ஆங்காங்கே தற்காலிக குடிநீர் தொட்டிகள் அமைத்து குடிநீர் வசதி கிடைப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது பொதுமக்கள் எதிர்பார்ப்பாக உள்ளது.

Newsletter

கோவை மாநகராட்சி 24x7 குடிநீர் திட்டப் பகுதிகளில் சாலை சீரமைப்பு பணிகள் தொடக்கம்: மாநகராட்சி நிர்வாகம் அறிவிப்பு

கோவை மாநகராட்சியில் 24x7 குடிநீர் திட்டப்பணிகள் நடைபெறும் திருச்சி சாலை, மேட்டுப்பாளையம் சாலை, சத்தியமங்கலம் சாலை, அவினா...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் இன்னோவிஷன்-2026 அறிவியல் மற்றும் தொழில்நுட்பப் போட்டிகள் நடைபெற்றன

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் மாணவர்களின் சிந்தனைத்திறன் மற்றும் ஆய்வுநோக்கை ஊக்குவிக்கும் வகையில் இன்னோவிஷன்-2026 அறிவிய...

கோவை வடக்கு மண்டல வளர்ச்சித் திட்டங்களை மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் மற்றும் ஆணையாளர் கட்டா ரவி தேஜா முன்னிலையில் இணைப்பு பா...

கோவை மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் 51 மனுக்கள் பெறப்பட்டன

கோவை மாநகராட்சியில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. ஆணையாளர் க...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரியில் ராகிங் எதிர்ப்பு வார விழா நிறைவு

கோவை நவ இந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஆகஸ்ட் 12 முதல் 18 வரை நடைபெற்ற ராகிங் எதிர்ப...

கோவையில் மாநகராட்சியில் மக்கள் தொகை கணக்கெடுப்பு 61% நிறைவு: விடுபட்ட வீடுகளுக்கு உதவி எண்கள் வெளியீடு

கோவை மாநகராட்சியில் ஆகஸ்ட் 1 முதல் நடைபெறும் மக்கள் தொகை கணக்கெடுப்பு 2027-ன் முதற்கட்ட வீட்டு பட்டியல் பணி 61% நிறைவடைந...