இ - பைலிங் நடைமுறையை ஒத்திவைக்க கோரி உடுமலையில் வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்

பயிற்சி பெற்ற ஊழியர்களை நீதிமன்றத்தில் நியமனம் செய்ய வலியுறுத்தியும் இ-பைலிங் நடைமுறையை ஒத்திவைக்க கோரியும் உடுமலையில் வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.


திருப்பூர்: வழக்குகளை தாக்கல் செய்வதற்கு இ-பைலிங் நடைமுறை கொண்டு வருவதற்கு வழக்கறிஞர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

உடுமலை கச்சேரி வீதியில் உள்ள சார்பு நீதிமன்ற வளாகத்தில் சார்பு, மாவட்ட உரிமையியல் நீதிமன்றம், குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் எண் 2, மாவட்ட கூடுதல் 4-வது நீதிமன்றம் செயல்பட்டு வருகிறது. அது தவிர உடுமலை தாசில்தார் அலுவலக வளாகத்தில் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் எண் 1 செயல்பட்டு வருகிறது. இந்த சூழலில் நீதிமன்றங்களில் வழக்குகளை தாக்கல் செய்வதற்கு இ- பைலிங் நடைமுறை அமல்படுத்தப்பட்டது.

அந்த முடிவினை எதிர்த்தும், இ-பைலிங் நடைமுறையை 6 மாதகாலம் ஒத்திவைக்க கோரியும், அதற்குள் பயிற்சி பெற்ற ஊழியர்களை நீதிமன்றத்தில் நியமனம் செய்ய வலியுறுத்தியும் உடுமலை வக்கீல் சங்கத்தின் சார்பில் நீதிமன்ற நுழைவு வாயில் முன்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் வக்கீல் சங்கத்தலைவர் மனோகரன், செயலாளர் ராஜேந்திரன், பொருளாளர் பிரபாகரன், துணைத் தலைவர் சிவராமன் உள்ளிட்ட செயற்குழு உறுப்பினர்கள், மூத்த, இளம் வக்கீல்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

திமுக தேர்தல் அறிக்கையில் மின்சார கோரிக்கைகள் இல்லை: மறுசுழற்சி ஜவுளி கூட்டமைப்பு ஏமாற்றம்

திமுக தேர்தல் அறிக்கையில் மின்கட்டணம் குறைப்பு, நிலை கட்டணம் குறைப்பு உள்ளிட்ட மின்சாரத்துறை கோரிக்கைகள் இடம்பெறாதது மறு...

சூரிய ஒளி மின் உற்பத்தி திட்டங்களுக்கு ஊக்கமளிப்பு மற்றும் மானியம்: அதிமுக தேர்தல் அறிக்கையை தொழில்துறை வரவேற்பு

Coimbatore: சூரிய ஒளி மின் உற்பத்தி திட்டங்களுக்கு ஊக்கமளிப்பு மற்றும் மானியம் வழங்குவது தொடர்பான அதிமுக தேர்தல் அறிக்கை...

சாதனைகளை கூறி வெற்றி பெறுவேன்; யாரையும் குறைத்து மதிப்பிடவில்லை - செந்தில் பாலாஜி

கோவை தெற்கு தொகுதியில் DMK வேட்பாளர் செந்தில் பாலாஜி தேர்தல் பணி குழு அலுவலகத்தை காந்திபுரத்தில் திறந்து வைத்தார். எதிரண...

கோவையை உலகத் தர நகரமாக மாற்ற கருத்தரங்கம்

கோவை நவஇந்தியாவில் ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் “கோயம்புத்தூரை உலகத் தர நகரமாக மாற்றுவோம்” கருத்தரங...

மகாவீர் ஜெயந்தி: மார்ச் 31ல் இறைச்சி விற்பனைக்கு தடை - கோயம்புத்தூர் மாநகராட்சி அறிவிப்பு

மகாவீர் ஜெயந்தி விழாவையொட்டி மார்ச் 31, 2026 அன்று கோயம்புத்தூர் மாநகராட்சி பகுதியில் அனைத்து விதமான இறைச்சி விற்பனை மற்...

கவுண்டம்பாளையம் தொகுதியில் NTK வேட்பாளர் கலாமணி ஜெகநாதன் வேட்புமனு தாக்கல்

கோவை கவுண்டம்பாளையம் சட்டமன்றத் தொகுதியில் நாம் தமிழர் கட்சி வேட்பாளராக கலாமணி ஜெகநாதன் இன்று வேட்புமனுவை தாக்கல் செய்தா...