100 நாள் வேலை திட்டத்தை 200 நாட்களாக உயர்த்த கோரிக்கை- கோவை அருகே பெண்கள் போராட்டம்

பெரியநாயக்கன்பாளையம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட சோமயம்பாளையம் ஊராட்சி மன்ற அலுவலகம் முன்பு நடத்த ஆர்ப்பாட்டத்தில் நிலுவையில் உள்ள 4 மாத ஊதியத்தை வழங்க வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பினர்.


கோவை: கோவை அருகே பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 100 நாள் வேலை திட்டத்தில் பணிபுரியும் பெண்கள் போராட்டம் நடத்தினர்.



கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட சோமயம்பாளையம் ஊராட்சி மன்ற அலுவலகம் முன்பு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் பணிபுரியக்கூடிய தொழிலாளர்களுக்கு நான்கு மாதமாக சம்பளம் வழங்காமல் காலதாமதம் செய்து கொண்டிருப்பதை கண்டித்தும் 100 நாள் வேலையை 200 நாளாக அமல்படுத்த கோரியும் கோவை மாவட்ட விவசாய தொழிலாளர் சங்கத்தின் சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கே வி தனபால் தலைமை தாங்கினார்.



கோவை மாவட்ட விவசாய தொழிலாளர் சங்கத்தின் துணைத் தலைவர் தோழர் ஆர் செல்வராஜ், பொதுத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் தோழர் R. கேசவ மணி அவர்களும் பெரியநாயக்கன்பாளையம் ஒன்றியத்தின் கட்சி செயலாளர் மோகன்ராஜ் மற்றும் ஒன்றிய குழு உறுப்பினர்கள் தோழர் ஏ. ஆர்.துரைசாமி சுப்பிரமணியம் , கோகுல் கிருஷ்ணன் மற்றும் 77 விவசாயம் பெண் தொழிலாளர் தோழர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவையில் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு மனித சங்கிலி: மாவட்ட ஆட்சியர் பங்கேற்பு

கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் நடைபெற்ற போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு மனித சங்கிலி நிகழ்ச்சியில் பங்கேற்ற மாவட்ட ஆட்சியர...

கோவையில் போலி இறப்பு, வாரிசு சான்றிதழ்கள் மூலம் ரூ.32 கோடி சொத்துக்களை அபகரிக்க முயற்சி: 9 பேர் மீது வழக்குப்பதிவு

கோவை மசக்காளிபாளையத்தில் தனியார் நிறுவன மேலாளருக்குச் சொந்தமான நிலம் உள்ளிட்ட ரூ.32 கோடி மதிப்பிலான சொத்துக்களை போலி இறப...

விநாயகர் சதுர்த்தி: கடந்த ஆண்டு 1.5 லட்சம் சிலைகள் பிரதிஷ்டை; இந்தாண்டு எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் - காடேஸ்வரா சுப்பிரமணியம்

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம், கடந்த ஆண்டை விட இந்தாண்டு தம...

கோவை மாநகராட்சி சொத்துவரி வசூலில் ₹38.43 கோடி கூடுதல் வசூல்

கோவை மாநகராட்சி 2026-27ஆம் நிதியாண்டில் சொத்துவரி வசூலில் சென்ற ஆண்டை விட ₹38.43 கோடி கூடுதலாக வசூலித்துள்ளது. நடப்பு கே...

இன்ஸ்டாகிராம் காதலுக்கு எதிர்ப்பு?: பல்லடம் அருகே வீடு புகுந்து தாய் - மகள் வெட்டிக் கொலை

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே பச்சாபாளையம் பகுதியில் வீடு புகுந்து தாய் மற்றும் மகளை அரிவாளால் வெட்டிக் கொலை செய்யப்...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் 32வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது

கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் 32வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இளநிலை மற்றும் முதுநில...