அவிநாசி அருகே சர்வதேச பின்னலாடை கண்காட்சி இன்று தொடக்கம்.

அவிநாசியை அடுத்த அணைப்புதூரில் உள்ள இந்திய பின்னலாடை கண்காட்சி சங்கம் (IKFA) வளாகத்தில், அச்சங்கத்தின் சார்பில் 50-வது சர்வதேச பின்னலாடை கண்காட்சி இன்று தொடங்கியது.


திருப்பூர்: இன்று தொடங்கியுள்ள சர்வதேச பின்னலாடை கண்காட்சியில் ஆடை அலங்கார ஃபேஷன் ஷோவும் நடத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.



திருப்பூர் மாவட்டம் அவிநாசியை அடுத்த அணைப்புதூரில் உள்ள இந்திய பின்னலாடை கண்காட்சி சங்கம் (IKFA) வளாகத்தில், அச்சங்கத்தின் சார்பில் 50-வது சர்வதேச பின்னலாடை கண்காட்சி இன்று தொடங்கியது. வருகிற 14 ஆம் தேதி வரை இக் கண்காட்சி நடைபெற உள்ளது.



ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் (A.E.P.C.), திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கம், சென்னை கைத்தறி ஆயத்த ஆடை மற்றும் ஏற்றுமதியாளர்கள் சங்கம் உள்ளிட்டவை பங்களிப்புடன் நடைபெறும் இக்கண்காட்சியில், உலக அளவிலான வர்த்தகர்களின் தற்போதைய தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.



14 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் 70-க்கும் மேற்ப்பட்ட அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளது. சென்னை, திருப்பூர், கோவை, சேலம், ஈரோடு, கரூர் மற்றும் கொல்கத்தா பகுதிகளைச் சேர்ந்தவர்களும் குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த வர்த்தகர்கள் தங்களது நிறுவனத்தின் தயாரிப்புகளை காட்சிப்படுத்தியுள்ளனர்.

இந்தக் கண்காட்சியை அரேபிய நாடுகள், அமெரிக்கா, உருகுவே, தென் அமெரிக்கா, கொலம்பியா, இங்கிலாந்து, இத்தாலி, கனடா, மொரீசியஸ், ஆஸ்திரேலியா, வங்காளதேசம், சீனா, தெற்கு ஆப்பிரிக்கா, ஜெர்மனி, போன்ற பல்வேறு நாடுகளைச் சேர்ந்த வர்த்தக முகவர்கள் பார்வையிட்டு தங்களது தேவைகளை தேர்வு செய்கின்றனர்.

இக்கண்காட்சியில் ஆடை அலங்கார ஃபேஷன் ஷோவும் நடத்தப்படுகிறது. அதில் தற்போதைய சந்தையில் பெரும்பான்மை இடம் பெற்ற ஆடைகள், நவீனமாக வடிவமைக்கப்பட்ட ஆடைகளான விளையாட்டு ஆடைகள், ஆக்டிவ் ஆடைகள் ஆகியவை முக்கியமாக இடம் பெறயுள்ளது.

செயற்கை நூலிலே ஆடைகள் தயாரிப்பை திருப்பூர் ஏற்றுமதியாளர்களுக்கு ஊக்குவிக்கும் வகையில் செயற்கை நூலிழை துணிகள் தயாரிப்பு நிறுவனத்தினர் அரங்கு அமைத்துள்ளனர். அந்த துணிகளின் ஆடை தயாரிப்பு குறித்து கருத்து அரங்கமும் நடைபெற உள்ளது.



கண்காட்சியில், சிறப்பு எத்திக்கல் பயிற்சி நிறுவன முதன்மை இயக்குனர் பீட்டர் மெக் அலிஸ்டர் பங்கேற்கிறார். ஏ.இ.பி.சி. தலைவர் நரேந்திர கோயங்கா, பியோ தலைவரும் ஐ. ஏ. கே. எஃப். ஏ. தலைவருமான சக்திவேல், திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க தலைவர் சுப்பிரமணியம் உள்ளிட்டவர்கள் பங்கேற்று சிறப்புரையாற்றினர்.

Newsletter

உலக செவிலியர் தினம்: திருப்பூரில் விழிப்புணர்வு பேரணி

திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மெழுகுவர்த்தி ஏந்தி செவிலியர்கள் உறுதிமொழி ஏற்று விழிப்புணர்வு பேரணிய...

திருப்பத்தூர் TVK எம்.எல்.ஏ. சீனிவாச செதுபதி நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்க Madras High Court தடை

திருப்பத்தூர் தொகுதியில் இரண்டு இடங்களில் ஒரே பெயர் இருப்பதால் DMK முன்னாள் அமைச்சர் K.R. பெரியகருப்பன் தாக்கல் செய்த மன...

வால்பாறையில் பயங்கர விபத்து: கார் மோதி பெண் படுகாயம்

கோவை மாவட்டம் வால்பாறையில் கட்டுப்பாட்டை இழந்த கார் நடந்து சென்ற பெண் மீது மோதி தூக்கி வீசிய சம்பவம் நடந்துள்ளது. படுகாய...

வால்பாறையில் கட்டுப்பாட்டை இழந்த கார் நடந்து சென்ற பெண் மீது மோதி தூக்கி வீசிய பதைபதைப்பு சம்பவம்

கோவை மாவட்டம் வால்பாறையில் கட்டுப்பாட்டை இழந்த கார் நடந்து சென்ற பெண் மீது மோதி தூக்கி வீசிய சம்பவம் நடந்துள்ளது. சிசிடி...

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...