எம்.ஜி.ஆர் சத்துணவு திட்டம் - கோவையில் 4 பள்ளி சத்துணவு மையங்களுக்கு ISO தரச்சான்று

புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் சத்துணவு திட்டத்தின் கீழ் சிறப்பாக செயல்பட்டு வரும் 4 பள்ளி சத்துணவு மையங்களுக்கு ISO தரச்சான்றுகளை கோவை மாவட்ட ஆட்சித்தலைவர் கிராந்திகுமார் பாடி வழங்கினார்.


கோவை: கோவை மாவட்டத்தில் 4 பள்ளி சத்துணவு மையங்களுக்கு தரச்சான்றிதழ்களை கோவை மாவட்ட ஆட்சியர் வழங்கி கவுரவித்தார்.

புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் சத்துணவு திட்டத்தின் கீழ் சிறப்பாக செயல்பட்டுவரும் 4 பள்ளி சத்துணவு மையங்களுக்கு ISO தரச்சான்றுகளை மாவட்ட ஆட்சித்தலைவர் கிராந்திகுமார் பாடி வழங்கினார்.



கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற இந்நிகழ்வின்போது ISO உதவியாளர் (சத்துணவு) (பொ) வியாஸ்கர், உதவி கணக்கு அலுவலர் சந்திரபிரியா, தரச்சான்று இயக்குநர் கார்த்திக்கேயன் உட்பட அலுவலர்கள் உடனிருந்தனர்.

அதன்படி கோயம்புத்தூர் மாவட்டம், சுல்தான்பேட்டை ஊராட்சி ஒன்றியம் செஞ்சேரி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, மலையடிபாளையம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி, கிணத்துக்கிடவு ஊராட்சி ஒன்றியம் கோதவாடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, பொள்ளாச்சி நகராட்சி துவக்கப்பள்ளி ஆகிய 4 பள்ளி சத்துணவு மையங்களுக்கு ISO தரச்சான்றுகள் வழங்கப்பட்டுள்ளன.

Newsletter

அறிவியல் திறனறி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா

கோவை மண்டல அறிவியல் மையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அறிவியல் திறனறி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்க...

அன்னூர் அருகே 1,453 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல்; 3 பேர் கைது

அன்னூர் காவல்துறையினர் மேற்கொண்ட வாகன சோதனையில் 1,453 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதுடன...

கோவை நேரு நகரில் டெங்கு கொசுப்புழு: கட்டிட உரிமையாளருக்கு ரூ.50,000 அபராதம்

கோவை மாநகராட்சி சுகாதார குழு நேரு நகர் கட்டிடத்தில் டெங்கு கொசுப்புழுக்கள் கண்டறிந்து உரிமையாளருக்கு ரூ.50,000 அபராதம் வ...

கோவை உடையாம்பாளையம் இராஜவாய்க்காலில் மழைநீர் வடிகால் பணிகள்: மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் உடையாம்பாளையம் இராஜவாய்க்காலில் மழைநீர் தேங்காமல் வடிவதற்கான பணிகள் குறித்து மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணை 36.52 அடியாகவும், திருமூர்த்தி அணை 36.39 அடியாகவும் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. நீர் ப...

கோவையில் ஜேசிபி வாகனங்கள் நிறுத்தி எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள் போராட்டம்

புதிய வாகன விலை, எரிபொருள், உதிரி பாகங்கள், காப்பீடு மற்றும் வரி உயர்வை கண்டித்து கோவை மாவட்ட எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள...