தாராபுரம்-உடுமலை சாலையை அகலப்படுத்த வேண்டும் - பொதுமக்கள் கோரிக்கை

தாராபுரம் - உடுமலை மாநில நெடுஞ்சாலை மிக குறுகலாக உள்ளதால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகிறது. எனவே விபத்துக்களை தவிர்க்க சாலையை அகலப்படுத்த வேண்டும் என வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


திருப்பூர்: மக்களின் நலனை கருத்தில் கொண்டு மாநில தேசிய நெடுஞ்சாலை துறையினர் தாராபுரம்-உடுமலை சாலையை அகலப்படுத்த வேண்டும் என வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தாராபுரத்தில் இருந்து உடுமலைக்கு மாநில நெடுஞ்சாலை உள்ளது. கொண்டரசம்பாளையம், தளவாய்பட்டிணம், செலாம் பாளையம், ஊத்துப் பாளையம், சின்னக்காம்பாளையம் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட ஊர்களுக்கு இந்த சாலை வழியாக செல்ல வேண்டும்.

முக்கியதுவம் வாய்ந்த மாநில நெடுஞ்சாலை தாராபுரத்தில் இருந்து தளவாய்பட்டிணம் வரை சுமார் 10 கி.மீ. மிக குறுகலாக உள்ளது. இந்த சாலையின் இருபுறமும் கல்வி நிறுவனங்கள், வணிக வளாகங்கள் என ஏராளமாக உள்ளது.

இந்நிலையில் தினசரி இதன் வழியாக நூற்றுக்கணக்கான நான்கு சக்கர வாகனங்கள், இருசக்கர வாகனங்கள் என ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. உடுமலை சாலையில் சுமார் 10 கிலோ மீட்டருக்கு மேலாக உள்ள சாலையில் எதிரெதிரே வரும் வாகனங்கள் ஒதுங்க முடியாத அளவுக்கு பாதை குறுகியே உள்ளது. அத்துடன் எதிரே வாகனங்கள் வழியில்லாமல் சில சமயம் ஒன்றோடு ஒன்று மோதிக் கொண்டு விபத்து ஏற்பட்டு வருகிறது.

இந்த சாலையை விரிவுபடுத்த கோரி அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் மாநில நெடுஞ்சாலை துறையினருக்கு பல முறை கோரிக்கை விடுத்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காமல் கிடப்பில் போட்டுள்ளனர். இதனால் தினசரி வாகன விபத்துகளில் சிக்கி உயிர் சேதமும், பொருள் சேதமும் ஏற்பட்டு வருகிறது. இதனை கருத்தில் கொண்டு மாநில தேசிய நெடுஞ்சாலை துறையினர் தாராபுரம்- உடுமலை சாலையை அகலப்படுத்த வேண்டும் என வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

கிணத்துக்கடவு கொலை வழக்கு: சிறுவன் சீர்திருத்தப் பள்ளியில் அடைப்பு; காயமடைந்த மற்றொரு குற்றவாளி மருத்துவமனையில் சிகிச்சை

கிணத்துக்கடவு அருகே இளைஞர் அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட 17 வயது சிறுவன், கோவை சிறுவர் நீதிமன்றத்தி...

கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்கம் நிறைவு

கோவை கற்பகம் நிகர்நிலைப்பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு சார்பில் திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்க நிறைவுவிழா நடைபெற...

கோவை கற்பகம் பொறியியல் கல்லூரி 22-வது பட்டமளிப்பு விழா: 1434 மாணவர்களுக்கு பட்டம்

கோவையில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் 22-வது பட்டமளிப்பு விழா ஆகஸ்ட் 8, 2026 அன்று நடைபெற்றது. 2025 ஆண்டு கல்வி மு...

கோவை மாநகராட்சி குடிநீர் தரத்தை உறுதி செய்ய குளோரின் அளவு ஆய்வு

கோவை மாநகராட்சி அலுவலர்கள் மேல்நிலை நீர்த்தேக்கங்கள் மற்றும் வீடுகளில் விநியோகிக்கப்படும் குடிநீரில் குளோரின் அளவுகளை நே...

கோவை மாநகராட்சி ஆணையர் வடக்கு தெற்கு மண்டல வளர்ச்சி பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் தெற்கு மண்டல பகுதிகளில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணி, டெங்கு கொசு...

கோவை மாநகராட்சி ஆணையர் வளர்ச்சித் திட்டப்பணிகளை நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் பாதாள சாக்கடை, குடிநீர், மழைநீர் வடிகால் கட்டும...