உடுமலை திருமூர்த்தி அணை காண்டூர் கால்வாயில் தண்ணீர் திருடப்படுவதாக காவல் நிலையத்தில் புகார்

திருப்பூர் மாவட்டம் உடுமலை திருமூர்த்தி அணை காண்டூர் கால்வாயில் தண்ணீர் திருடுவோரின் இணைப்பு துண்டித்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


திருப்பூர்: தண்ணீர் திருட்டில் ஈடுபடுவர்களை கண்காணிக்க போலீஸ் மூலம் ரோந்து பணியை தீவிரப்படுத்த பொதுமக்களும் விவசாயிகளும் வேண்டுகோள்.

திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்த திருமூர்த்தி அணை மூலமாக பரம்பிக்குளம் ஆழியார் பாசன திட்டத்தின் கீழ் 3 லட்சத்துக்கு 76 ஆயிரத்து 152 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகிறது. அணைக்கு மேற்கு தொடர்ச்சிமலை பகுதிகளில் உற்பத்தியாகின்ற ஆறுகள் ஓடைகள் மற்றும் பிஏபி தொகுப்பு அணைகளில் இருந்து காண்டூர் கால்வாய் மூலம் பெறப்படும் தண்ணீர் நீராதாரமாக உள்ளது. திருமூர்த்தி அணையின் நீர்பிடிப்பு பகுதியில் போதிய மழை இல்லாததால் காண்டூர் கால்வாய் மூலமாக தண்ணீர் கொண்டு வரப்பட்டு 4-ம் மண்டல பாசனத்திற்கு கடந்த மாதம் 20-ம் தேதி முதல் தண்ணீர் விநியோகம் நடைபெற்று வருகிறது.

இந்த சூழலில் காண்டூர் கால்வாயில் வரும் தண்ணீரை அருகில் உள்ள விவசாய நிலங்களுக்கு முறையற்ற வகையில் குழாய் மற்றும் மோட்டார் அமைத்து திருடுவதாக பொதுப்பணித்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதன் பேரில் திருமூர்த்தி அணை மற்றும் சீர்மட்ட கால்வாய் பிரிவு உதவிப் பொறியாளர் மாரிமுத்து தலைமையிலான அதிகாரிகள் தண்ணீர் திருட்டை தடுக்கும் வகையில் கடந்த 6-ம் தேதி ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது பிளாஸ்டிக் குழாய் மூலமாக காண்டூர் கால்வாயில் தண்ணீர் திருடப்பட்டது கண்டறியப்பட்டது. அதைத் தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில் திருமூர்த்தி நகர் கிராமத்தைச் சேர்ந்த நாகராஜ் என்பவர் தண்ணீர் திருடியது தெரிய வந்தது. அதைத் தொடர்ந்து திருட்டுக்கு பயன்படுத்திய குழாய் பறிமுதல் செய்யப்பட்டது.

மேலும் இது குறித்து காவல்துறையில் நாகராஜ் மீது புகார் அளிக்கப்பட்டது. அதே போன்று கடந்த 7-ம் தேதி வளையபாளையத்திற்கு செல்லும் வரத்து கால்வாயில் தண்ணீர் திருட்டு நடைபெறுவதாக தகவல் கிடைத்தது. அதன் பேரில் பொதுப்பணித்துறை அதிகாரியினர் அங்கு ஆய்வு மேற்கொண்டனர். அப்போது பிளாஸ்டிக் குழாய் அமைத்து தண்ணீர் திருட்டு நடைபெறுவது கண்டறியப்பட்டது.



அதன் பேரில் நடைபெற்ற விசாரணையில் நாகராஜ், செல்வராஜ், காந்திமதி, கஞ்சிமலை ஆகியோர் தண்ணீர் திருட்டில் ஈடுபடுவது தெரிய வந்தது.



அதன் பேரில் உதவி பொறியாளர் மாரிமுத்து தளி போலீசில் புகார் அளித்துள்ளார். இது குறித்து போலீசார் விசாரித்து வருகிறார்கள். மேலும் தண்ணீர் திருட்டில் ஈடுபடுவர்களை கண்காணிக்க போலீஸ் மூலம் ரோந்து பணியை மேற்கொள்ளவும், மேலும் ரோந்து பணிக்கு செல்லும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் மற்றும் பணியாளர்களுக்கு பாதுகாப்பு வழங்கிடவும் அதிகாரிகள் தரப்பில் மனு அளிக்கப்பட்டு உள்ளது.

Newsletter

சாலையில் கிடந்த ₹5.64 லட்சத்தை காவல்துறையிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனருக்கு பாராட்டு

திருப்பூர் வளம் பாலம் பகுதியில் சாலையில் கிடந்த ₹5.64 லட்சம் பணத்தை ஆட்டோ ஓட்டுனர் மதன் மற்றும் அவரது உறவினர் பிரபு ஆகிய...

KG Hospital Introduces CUVIS Joint Robotic Knee Replacement System, Promising Improved Recovery Outcomes

Coimbatore’s KG Hospital has launched the advanced CUVIS Joint Robotic Knee Replacement System, marking a major step for...

நீண்டநாள் கோரிக்கைகள்: அமைச்சரிடம் மனு அளித்த டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட நீண்டநாள் கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர்...

கோவை பீளமேடு பகுதிகளில் பல்வேறு தூய்மைப் பணிகள், கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி, வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் தலைமையில் குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள...

கவுண்டம்பாளையம் மேல்நிலை நீர்த்தேக்கத்தில் மாநகராட்சி ஆணையாளர் நேரடி ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மேற்கு மண்டல வார்டு எண்.33ல் உள்ள கவுண்டம்பாளையம் மேல்நிலை நீர்த்தேக்கத்தில் ஆணையர் மா.சிவகுரு...

Black Ribbons, Walkout: Farmers Allege CM Failed to Keep Poll Promise on Crop Loan Waiver

Members of the Tamil Nadu Vivasaayigal Paadhukaapu Amaippu attended the farmers’ grievance redressal meeting in Tiruppur...