பள்ளிக் கல்வித் துறை சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கான இலவச சிறப்பு முகாம்

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் தமிழ்நாடு அரசு பள்ளி கல்வித்துறை மற்றும் மாவட்ட மாற்று திறனாளிகள் நலத்துறையின் சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.


திருப்பூர்: தாராபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற மாற்றுத்திறனாளிகள் முகாமில் ஏராளமானோர் பங்கேற்றனர்.



உதவி திட்ட அலுவலர் அண்ணாதுரை தலைமையில் தாராபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற. இந்த முகாமில் மருத்துவ சான்றிதழ் வழங்குதல் தேசிய அடையாள அட்டை பதிவு செய்தல் மற்றும் புதுப்பித்தல் தனித்துவம் வாய்ந்த தேசிய அடையாள அட்டை பதிவு மற்றும் ஆலோசனை உதவி உபகரணங்களுக்கான பதிவு குழந்தைகள் நல மருத்துவர் ஆலோசனை எலும்பு மூட்டு மருத்துவர் ஆலோசனை மனநல மருத்துவ ஆலோசனை முதலமைச்சர் காப்பீட்டு திட்டத்தில் அறுவை சிகிச்சைக்கான பதிவு உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.



இந்த மருத்துவ முகாமில் சுமார் 300-க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டு பயனடைந்தனர். இந்த முகாமில் மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் ஜெகதீசன் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பாலசுந்தரி வட்டார வளமை மேற்பார்வையாளர் மல்லிகா உள்ளிட்ட அரசு அதிகாரிகள் மருத்துவர்கள் செவிலியர்கள் சிறப்பு ஒருங்கிணைப்பாளர்கள் சிறப்பு பயிற்சியாளர்கள் மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை மாநகராட்சி 24x7 குடிநீர் திட்டப் பகுதிகளில் சாலை சீரமைப்பு பணிகள் தொடக்கம்: மாநகராட்சி நிர்வாகம் அறிவிப்பு

கோவை மாநகராட்சியில் 24x7 குடிநீர் திட்டப்பணிகள் நடைபெறும் திருச்சி சாலை, மேட்டுப்பாளையம் சாலை, சத்தியமங்கலம் சாலை, அவினா...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் இன்னோவிஷன்-2026 அறிவியல் மற்றும் தொழில்நுட்பப் போட்டிகள் நடைபெற்றன

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் மாணவர்களின் சிந்தனைத்திறன் மற்றும் ஆய்வுநோக்கை ஊக்குவிக்கும் வகையில் இன்னோவிஷன்-2026 அறிவிய...

கோவை வடக்கு மண்டல வளர்ச்சித் திட்டங்களை மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் மற்றும் ஆணையாளர் கட்டா ரவி தேஜா முன்னிலையில் இணைப்பு பா...

கோவை மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் 51 மனுக்கள் பெறப்பட்டன

கோவை மாநகராட்சியில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. ஆணையாளர் க...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரியில் ராகிங் எதிர்ப்பு வார விழா நிறைவு

கோவை நவ இந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஆகஸ்ட் 12 முதல் 18 வரை நடைபெற்ற ராகிங் எதிர்ப...

கோவையில் மாநகராட்சியில் மக்கள் தொகை கணக்கெடுப்பு 61% நிறைவு: விடுபட்ட வீடுகளுக்கு உதவி எண்கள் வெளியீடு

கோவை மாநகராட்சியில் ஆகஸ்ட் 1 முதல் நடைபெறும் மக்கள் தொகை கணக்கெடுப்பு 2027-ன் முதற்கட்ட வீட்டு பட்டியல் பணி 61% நிறைவடைந...