பள்ளிக் கல்வித் துறை சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கான இலவச சிறப்பு முகாம்

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் தமிழ்நாடு அரசு பள்ளி கல்வித்துறை மற்றும் மாவட்ட மாற்று திறனாளிகள் நலத்துறையின் சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.


திருப்பூர்: தாராபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற மாற்றுத்திறனாளிகள் முகாமில் ஏராளமானோர் பங்கேற்றனர்.



உதவி திட்ட அலுவலர் அண்ணாதுரை தலைமையில் தாராபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற. இந்த முகாமில் மருத்துவ சான்றிதழ் வழங்குதல் தேசிய அடையாள அட்டை பதிவு செய்தல் மற்றும் புதுப்பித்தல் தனித்துவம் வாய்ந்த தேசிய அடையாள அட்டை பதிவு மற்றும் ஆலோசனை உதவி உபகரணங்களுக்கான பதிவு குழந்தைகள் நல மருத்துவர் ஆலோசனை எலும்பு மூட்டு மருத்துவர் ஆலோசனை மனநல மருத்துவ ஆலோசனை முதலமைச்சர் காப்பீட்டு திட்டத்தில் அறுவை சிகிச்சைக்கான பதிவு உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.



இந்த மருத்துவ முகாமில் சுமார் 300-க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டு பயனடைந்தனர். இந்த முகாமில் மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் ஜெகதீசன் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பாலசுந்தரி வட்டார வளமை மேற்பார்வையாளர் மல்லிகா உள்ளிட்ட அரசு அதிகாரிகள் மருத்துவர்கள் செவிலியர்கள் சிறப்பு ஒருங்கிணைப்பாளர்கள் சிறப்பு பயிற்சியாளர்கள் மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவையில் அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் மாதிரி வாக்குப்பதிவு நடைபெற்றது

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்குகிறது. கோவை மாவட்டத்தில் 10 தொகுதிகளில்...

கோவையில் வாக்குப்பதிவு தொடக்கம்: உற்சாகமாக வாக்களிக்கும் மக்கள்

தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026 வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் கோவை மாவட்டம் முழுவதும் அமைதியான சூழலில் தொடங்கியது....

கோவையில் 3,563 வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு

கோவை மாவட்டத்தில் நாளைய சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக 3,563 வாக்குப்பதிவு நிலையங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திர...

பொள்ளாச்சியில் 281 வாக்குச்சாவடிகளுக்கு பலத்த பாதுகாப்புடன் வாக்கு இயந்திரங்கள் அனுப்பும் பணி தீவிரம்

நாளை நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, பொள்ளாச்சி தொகுதியில் உள்ள 281 வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்கு இ...

பல ஆண்டுகளாக அடிப்படை வசதிகள் இல்லை: தேர்தலை புறக்கணிக்க நெறையூர் கிராம மக்கள் முடிவு

குடிநீர், சாலை, போக்குவரத்து, நியாய விலைக்கடை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் பல ஆண்டுகளாக வழங்கப்படாததால், திருப்பூர் மாவட்ட...

அவிநாசி: ‘ரோடு ஷோ’ மூலம் எல்.முருகனுக்கு ஆதரவு திரட்டிய மத்திய பிரதேச முதல்வர் மோகன் யாதவ்..!

திருப்பூர் மாவட்டம் அவிநாசி தொகுதியில் பாஜக வேட்பாளர் எல்.முருகனை ஆதரித்து மத்திய பிரதேச முதலமைச்சர் மோகன் யாதவ், ரோடு ஷ...