பல்லடத்தில் இரண்டு அரசுப் பேருந்துகள் மோதி விபத்து - குழந்தை உட்பட 10 பேர் காயம்

பல்லடம் அறிஞர் அண்ணா பேருந்து நிலையத்தில் இரண்டு அரசு பேருந்துகள் மோதி விபத்துக்குள்ளானதில், பத்து பயணிகள் காயமடைந்தனர். அவர்கள் அனைவரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.


திருப்பூர்: பொள்ளாச்சியில் இருந்து புறப்பட்ட பேருந்தின் ஓட்டுநர் விபத்து ஏற்படுத்தும் வகையில் பேருந்து வேகமாக இயக்கி வந்ததே விபத்திற்கு காரணம் என பேருந்தில் பயணித்த பயணிகள் புகார் தெரிவித்துள்ளனர்.



பொள்ளாச்சியில் இருந்து தேனி நோக்கி பல்லடம் வழியாக வந்த அரசு பேருந்தும், கோவையில் இருந்து மதுரை நோக்கி சென்ற அரசு பேருந்தும் ஓட்டுனரின் கவனக்குறைவால் பேருந்து நிலையம் முன்பு சாலையை கடக்க முயன்ற போது மோதி விபத்துக்குள்ளானது.

பேருந்தில் பயணித்த பயணிகள் சிறு காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.



தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பல்லடம் காவல்துறையினர் காயமடைந்த பயணிகளை ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.



பேருந்து நிலையம் முன்பு நிகழ்ந்த இந்த விபத்தால் திருச்சி கோவை தேசிய நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

விபத்தில் சிக்கிய பேருந்துகளை காவல்துறையினர் அப்புறப்படுத்தி வருகின்றனர். மேலும் இந்த விபத்து குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சிறு காயங்களுடன் குழந்தைகள் உட்பட 10 பயணிகள் பல்லடம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.



பொள்ளாச்சியில் இருந்து வந்த ஓட்டுநர் விபத்து ஏற்படுத்தும் வகையில் பேருந்து வேகமாக இயக்கி வந்ததே விபத்திற்கு காரணம் என பேருந்தில் பயணித்த பயணிகள் தெரிவித்துள்ளனர்.

Newsletter

அவிநாசி: ‘ரோடு ஷோ’ மூலம் எல்.முருகனுக்கு ஆதரவு திரட்டிய மத்திய பிரதேச முதல்வர் மோகன் யாதவ்..!

திருப்பூர் மாவட்டம் அவிநாசி தொகுதியில் பாஜக வேட்பாளர் எல்.முருகனை ஆதரித்து மத்திய பிரதேச முதலமைச்சர் மோகன் யாதவ், ரோடு ஷ...

கிணத்துக்கடவில் செந்தில் வேல் பரப்புரை - சபரி கார்த்திகேயனுக்கு வாக்கு சேகரித்தார்..!

கிணத்துக்கடவு தொகுதியில் திமுக வேட்பாளர் கே.வி.கே.எஸ். சபரி கார்த்திகேயனை ஆதரித்து பத்திரிக்கையாளரும் தமிழ்கேள்வி யூடியூ...

கோவை மக்கள் ஏப்ரல் 23ஆம் தேதி செந்தில் பாலாஜியின் முகத்திரையை கிழிப்பார்கள்: அண்ணாமலை

கோவை வடக்கு தொகுதியில் பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்ட அண்ணாமலை, திமுக மீது...

வால்பாறை வளர்ச்சிக்கு அதிமுக வாக்குறுதி: வேட்பாளர் லட்சுமண சிங் பல்வேறு அறிவிப்புகள்..!

வால்பாறை சட்டமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர் லட்சுமண சிங், தேர்தலை முன்னிட்டு சுற்றுலா, விவசாயம், தொழில், கல்வி மற்றும் அ...

மூலப்பொருள் விலை உயர்வு: அவசர கால கடன் உதவி வழங்க ரிசர்வ் வங்கி அதிகாரிகளிடம் தொழில்துறையினர் வலியுறுத்தல்

மூலப்பொருட்கள் விலை உயர்வால் ஏற்பட்ட நெருக்கடியை எதிர்கொள்ள கோவையில் நடந்த கலந்துரையாடல் கூட்டத்தில் தொழில்துறையினர் ரிச...

கிணத்துக்கடவில் இறுதிகட்ட பிரச்சாரம்: வீடு வீடாக வாக்கு சேகரித்த திமுக வேட்பாளர் KVKS சபரி கார்த்திகேயன்

கிணத்துக்கடவு தொகுதியில் திமுக வேட்பாளர் KVKS சபரி கார்த்திகேயன், செட்டிபாளையம் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வீடு வீட...