சில்லறை பிரச்சனைக்கு தீர்வு காணும் வகையில் ஆவின் ரூ.10 பால் பாக்கெட் அறிமுகம்

பொதுமக்களுக்கு நிலவும் சில்லரை பிரச்னைக்கு தீர்வு காண, 10 ரூபாய்க்கு, 200 மில்லி ஆவின் பால் பாக்கெட் கோயம்புத்தூரில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.


கோவை: பொதுமக்கள் கோரிக்கையை ஏற்று பத்து ரூபாய்க்கு பால் பாக்கெட்டை அறிமுகப்படுத்திய ஆவின் நிர்வாகம்

கோயம்புத்துார் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம் (ஆவின்) மூலம், நாளொன்றுக்கு, 1.5 லட்சம் லிட்டர் முதல், 2 லட்சம் லிட்டர் வரை பால் விற்கப்படுகிறது. ஊதா, பச்சை, ஆரஞ்ச் என பல வண்ணங்களில் பால் பாக்கெட்டுகள் விற்கப்படுகின்றன.

பாலில் உள்ள கொழுப்புச்சத்து மற்றும் இதர சத்துகளுக்கு ஏற்ப, விலை வித்தியாசம் இருக்கிறது.'ஆவின் டிலைட்' என்ற பால் வகை, 250 மி.லி., பாக்கெட் ரூ.11.50க்கு விற்கப்பட்டு வந்தது. கடைகளில், 50 காசுகள் கூடுதலாக வைத்து, ரூ.12க்கு விற்கப்படுவதாக, ஆவின் நிர்வாகத்துக்கு தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் இருந்தன. சில்லரை பிரச்னை எழுவதாக, ஏஜன்ட்டுகள் மழுப்பினர். பொதுமக்களிடம் ஏற்பட்டுள்ள அதிருப்தியை போக்க, 200 மி.லி., பாக்கெட் தயாரித்து, 10 ரூபாய் என, விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இந்த பால் பாக்கெட் சந்தையில் அறிமுகப்படுத்தப்படுகிறது. ஆவின் அதிகாரிகள் கூறுகையில், '250 மி.லி., பால் பாக்கெட் ரூ.11.50க்கு விற்கப்பட்டது; 12 ரூபாய் வசூலித்ததாக புகார் எழுந்தது. இதற்கு தீர்வு காண, 10 ரூபாய் பாக்கெட் அறிமுகப்படுத்துகிறோம்.

இனி, சில்லரை பிரச்னை எழாது. 50 மில்லி குறைத்து, 200 மி.லி, பாக்கெட் தயாரிக்கப்பட்டுள்ளது. பாலில் உள்ள சத்துக்கள் குறைக்கப்படவில்லை. மாதாந்திர அட்டைதாரர்களுக்கு ரூ.9.60க்கு வழங்கப்படும். இந்த மாதத்துக்கு கூடுதலாக செலுத்திய தொகை, அவர்களது கணக்கில் வரவு வைக்கப்படும்' என்றனர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...