திருப்பூர் மேற்கு மாவட்ட பாமக பொதுக்குழு கூட்டம் குமரலிங்கத்தில் நடைபெற்றது

உடுமலை அடுத்துள்ள குமரலிங்கம் பேரூராட்சி பகுதியில் உடுமலை மடத்துக்குளம் சட்டமன்ற தொகுதிகள் அடங்கிய திருப்பூர் மேற்கு மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சியின் மாவட்ட பொதுக்குழு கூட்டம் மாவட்ட செயலாளர் பழனிச்சாமி தலைமையில் நடைபெற்றது.


திருப்பூர்: பாமகவின் சாதனைகள் மற்றும் கொள்கைகள் குறித்து வீடு வீடாக பொது மக்களுக்கு தெரிவிப்பது, கிராமங்கள் தோறும் பாமக கொடி ஏற்றுவது, திண்ணைப் பிரச்சாரம் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்து உட்பட பல்வேறு தீர்மானங்கள் பாமக பொதுக்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.



திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்துள்ள குமரலிங்கம் பேரூராட்சி பகுதியில் உடுமலை மடத்துக்குளம் சட்டமன்ற தொகுதிகள் அடங்கிய திருப்பூர் மேற்கு மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சியின் மாவட்ட பொதுக்குழு கூட்டம் மாவட்ட செயலாளர் பழனிச்சாமி தலைமையில் நடைபெற்றது.

கூட்டத்தில் மேற்கு மண்டல அமைப்பு செயலாளர் கரூர் பாஸ்கரன் கலந்து கொண்டு கட்சியின் வளர்ச்சி குறித்தும் வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் பாமகவின் சாதனைகள் மற்றும் கொள்கைகள் குறித்து வீடு வீடாக பொது மக்களுக்கு தெரிவிப்பது, திருப்பூர் மேற்கு மாவட்டத்திற்கு உட்பட்ட உடுமலை மடத்துக்குளம் சட்டமன்ற தொகுதிகளில் கிராமங்கள் தோறும் பாமக கொடி ஏற்றுவது, பாமகவின் கொள்கைகளை வீடுதோறும் திண்ணைப் பிரச்சாரம் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்து உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.



முன்னதாக குமரலிங்கம் பேரூராட்சி பகுதியில் பஸ் நிறுத்தும் பகுதியில் பாமக கட்சி கொடியினை மேற்கு மண்டல அமைப்பு செயலாளர் பாஸ்கரன் கொடியேற்றி பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினர் நிகழ்வில் உழவர் பேரியக்க மாவட்ட செயலாளர் பழனிச்சாமி, திருப்பூர் மேற்கு மாவட்ட தலைவர் சிங்காரம், வன்னியர் சங்க மாவட்ட செயலாளர் மின்னல் செந்தில், அமைப்பு செயலாளர் மனோகர், குமரலிங்கம் பேரூராட்சி செயலாளர் மாரிமுத்து உடுமலை கிழக்கு ஒன்றிய செயலாளர் சிவ பாலு, குடிமங்கலம் மேற்கு ஒன்றிய செயலாளர் மகேந்திரன், சமூக ஊடக பேரவை மாவட்ட செயலாளர் கனகராஜ் உட்பட ஒன்றிய பேரூர் நகர பாமக நிர்வாகிகள் நூற்றுக்கு மேற்பட்டோர் திரளாக கலந்து கொண்டனர்.

Newsletter

கிணத்துக்கடவு கொலை வழக்கு: சிறுவன் சீர்திருத்தப் பள்ளியில் அடைப்பு; காயமடைந்த மற்றொரு குற்றவாளி மருத்துவமனையில் சிகிச்சை

கிணத்துக்கடவு அருகே இளைஞர் அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட 17 வயது சிறுவன், கோவை சிறுவர் நீதிமன்றத்தி...

கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்கம் நிறைவு

கோவை கற்பகம் நிகர்நிலைப்பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு சார்பில் திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்க நிறைவுவிழா நடைபெற...

கோவை கற்பகம் பொறியியல் கல்லூரி 22-வது பட்டமளிப்பு விழா: 1434 மாணவர்களுக்கு பட்டம்

கோவையில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் 22-வது பட்டமளிப்பு விழா ஆகஸ்ட் 8, 2026 அன்று நடைபெற்றது. 2025 ஆண்டு கல்வி மு...

கோவை மாநகராட்சி குடிநீர் தரத்தை உறுதி செய்ய குளோரின் அளவு ஆய்வு

கோவை மாநகராட்சி அலுவலர்கள் மேல்நிலை நீர்த்தேக்கங்கள் மற்றும் வீடுகளில் விநியோகிக்கப்படும் குடிநீரில் குளோரின் அளவுகளை நே...

கோவை மாநகராட்சி ஆணையர் வடக்கு தெற்கு மண்டல வளர்ச்சி பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் தெற்கு மண்டல பகுதிகளில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணி, டெங்கு கொசு...

கோவை மாநகராட்சி ஆணையர் வளர்ச்சித் திட்டப்பணிகளை நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் பாதாள சாக்கடை, குடிநீர், மழைநீர் வடிகால் கட்டும...