திருப்பூர் மேற்கு மாவட்ட பாமக பொதுக்குழு கூட்டம் குமரலிங்கத்தில் நடைபெற்றது

உடுமலை அடுத்துள்ள குமரலிங்கம் பேரூராட்சி பகுதியில் உடுமலை மடத்துக்குளம் சட்டமன்ற தொகுதிகள் அடங்கிய திருப்பூர் மேற்கு மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சியின் மாவட்ட பொதுக்குழு கூட்டம் மாவட்ட செயலாளர் பழனிச்சாமி தலைமையில் நடைபெற்றது.


திருப்பூர்: பாமகவின் சாதனைகள் மற்றும் கொள்கைகள் குறித்து வீடு வீடாக பொது மக்களுக்கு தெரிவிப்பது, கிராமங்கள் தோறும் பாமக கொடி ஏற்றுவது, திண்ணைப் பிரச்சாரம் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்து உட்பட பல்வேறு தீர்மானங்கள் பாமக பொதுக்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.



திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்துள்ள குமரலிங்கம் பேரூராட்சி பகுதியில் உடுமலை மடத்துக்குளம் சட்டமன்ற தொகுதிகள் அடங்கிய திருப்பூர் மேற்கு மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சியின் மாவட்ட பொதுக்குழு கூட்டம் மாவட்ட செயலாளர் பழனிச்சாமி தலைமையில் நடைபெற்றது.

கூட்டத்தில் மேற்கு மண்டல அமைப்பு செயலாளர் கரூர் பாஸ்கரன் கலந்து கொண்டு கட்சியின் வளர்ச்சி குறித்தும் வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் பாமகவின் சாதனைகள் மற்றும் கொள்கைகள் குறித்து வீடு வீடாக பொது மக்களுக்கு தெரிவிப்பது, திருப்பூர் மேற்கு மாவட்டத்திற்கு உட்பட்ட உடுமலை மடத்துக்குளம் சட்டமன்ற தொகுதிகளில் கிராமங்கள் தோறும் பாமக கொடி ஏற்றுவது, பாமகவின் கொள்கைகளை வீடுதோறும் திண்ணைப் பிரச்சாரம் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்து உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.



முன்னதாக குமரலிங்கம் பேரூராட்சி பகுதியில் பஸ் நிறுத்தும் பகுதியில் பாமக கட்சி கொடியினை மேற்கு மண்டல அமைப்பு செயலாளர் பாஸ்கரன் கொடியேற்றி பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினர் நிகழ்வில் உழவர் பேரியக்க மாவட்ட செயலாளர் பழனிச்சாமி, திருப்பூர் மேற்கு மாவட்ட தலைவர் சிங்காரம், வன்னியர் சங்க மாவட்ட செயலாளர் மின்னல் செந்தில், அமைப்பு செயலாளர் மனோகர், குமரலிங்கம் பேரூராட்சி செயலாளர் மாரிமுத்து உடுமலை கிழக்கு ஒன்றிய செயலாளர் சிவ பாலு, குடிமங்கலம் மேற்கு ஒன்றிய செயலாளர் மகேந்திரன், சமூக ஊடக பேரவை மாவட்ட செயலாளர் கனகராஜ் உட்பட ஒன்றிய பேரூர் நகர பாமக நிர்வாகிகள் நூற்றுக்கு மேற்பட்டோர் திரளாக கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு 35-வது வெடிகுண்டு மிரட்டல்

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு இன்று காலை இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்தது. வெடிகுண்டு கண்டறியும் குழுவினர...

கோவை அரசு மருத்துவமனையில் ஹீட் ஸ்ட்ரோக் சிகிச்சைக்கு சிறப்பு பிரிவு

கோவையில் வெப்பநிலை 38 டிகிரி செல்சியஸ் எட்டியதால், ஹீட் ஸ்ட்ரோக் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால் அரசு மருத்துவமனையி...

இந்தியா-நியூசிலாந்து FTA: ஜவுளித் துறைக்கு புதிய வாய்ப்பு

இந்தியா-நியூசிலாந்து தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தை சைமா வரவேற்று, ஜவுளி ஏற்றுமதி, புதிய சந்தை அணுகல் மற்றும் வளர்ச்சி வாய்...

மேட்டுப்பாளையம்: புதிய ரயில்கள், சேவை நீட்டிப்பு; வந்தே பாரத் மேட்டுப்பாளையம் வரை நீட்டிப்பு?

மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்திலிருந்து புதிய ரயில் சேவைகள் மற்றும் நீட்டிப்புகளை தெற்கு ரயில்வே முன்மொழிந்து, சுற்றுலா...

எல்.பி.ஜி சிலிண்டர் தட்டுப்பாட்டால் கோவை தொழில் நிறுவனங்களில் உற்பத்தி பணிகள் முடக்கம்

கோவையில் எல்.பி.ஜி சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக தொழில் நிறுவனங்களில் உற்பத்தி பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. வழக்க...

கோடைக்காலம்: போத்தனூர் வழித்தடத்தில் மங்களூரு-சென்னை சிறப்பு ரயில் இயக்கம்

கோடைக்காலத்தை முன்னிட்டு கர்நாடகா மாநிலம் மங்களூரில் இருந்து சென்னை எழும்பூர்க்கு போத்தனூர் வழித்தடத்தில் சிறப்பு ரயில்...