மனநலம் பாதிக்கப்பட்ட பெண் நான்கு மாதங்களுக்குப் பின் ஈர நெஞ்சம் அறக்கட்டளையால் குடும்பத்தினருடன் ஒப்படைப்பு

கடந்த ஒருவாரத்திற்கு முன்பு கோவை, சரவணம்பட்டி சாலையில் மனநலம் பாதிக்கப்பட்ட பெண் அப்பகுதி பொதுமக்களால் மீட்கப்பட்டு ஈரநெஞ்சம் அறக்கட்டளையில் சேர்க்கப்பட்டார்.



அப்பெண்ணை தொடர்ந்து பராமரித்து வந்த ஈரநெஞ்சம் அறக்கட்டளையினர் மருத்துவ சிகிச்சை உள்ளிட்டவற்றை அளித்துவந்தனர். தொடர்ந்து அப்பெண்ணிடம் மேற்கொண்ட விசாரணையில் அவர் புலி வளம் என்னும் பகுதியை தெரிவித்துள்ளார். அதன்படி புலிவளம் குறித்து விசாரணை மேற்கொண்ட அறக்கட்டளையினர் அந்தப்பகுதி திருவாரூர் மாவட்டத்தில் உள்ளது என கண்டறிந்தனர். 

அதனைத்தொடர்ந்து, திருவாரூர் காவல்நிலையத்திற்கு தொடர்புகொண்டு தெரிவித்ததைத் தொடர்ந்து, காணாமல் போனவர் பட்டியல் உள்ளிட்டவற்றை சோதனை செய்த காவல்துறையினர், அப்பெண் சத்யா என்பவரது தாய் ராஜேஸ்வரி என்றும், மனநலம் பாதிக்கப்பட்டவர் என்றும் கண்டறிந்தனர்.



இதைத்தொடர்ந்து, ஈரநெஞ்சம் அறக்கட்டளைக்கு வந்த சத்யா, நான்கு மாதங்களுக்குப் பின் தனது தாயைக்கண்டு நெகிழ்ச்சியுற்றார். தொடர்ந்து தாயும், மகளும் கட்டித்தளுவி மகிழ்ச்சியில் அழுத காட்சி அங்கிருந்தோரை நெகிழ வைத்தது.

இதுகுறித்து சத்யா தெரிவிக்கையில், நான்கு மாதங்களுக்கு முன்பு எனது தாய் திருவாரூரில் காணாமல் போனார். நாங்கள் பல்வேறு பகுதியில் அவரை தேடினோம். எங்கும் காணவில்லை. தற்போது கோவையில் ஈரநெஞ்சம் அறக்கட்டளையால் எனது தாய் மீண்டும் என்னுடன் இணைந்துள்ளார். இந்த மகிழ்ச்சியை விவரிக்க என்னிடம் வார்த்தைகளே இல்லை' என தெரிவித்தார். 

இதனையடுத்து, ராஜேஸ்வரியின் சில ஆவணங்களை சரிபார்த்து உறுதிசெய்த ஈரநெஞ்சம் அறக்கட்டளையினர், மனநலம் பாதிக்கப்பட்ட தாயின் மீது கூடுதல் கவனம்  செலுத்தி பாதுகாக்குமாறு அறிவுரைகூறி மகள் சத்யாவுடன் வீட்டிற்கு அனுப்பி வைத்தனர்.

Newsletter

எதிர்க்கட்சியாக மக்களின் நலனுக்காக தொடர்ந்து திமுக போராடும் – முதல்வர் மு.க. ஸ்டாலின்

தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து, திமுக தலைவர் முக ஸ்டாலின்  வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்களுக்காக சிறப்பாக ஆளும் கட்சியாக...

கோவையில் 5 தொகுதிகளில் த.வெ.க முன்னிலை – ஜி.சி.டி முன்பு பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!

கோவை மாவட்டத்தில் 5 தொகுதிகளில் தமிழக வெற்றிக் கழகம் முன்னிலை பெற்ற நிலையில், ஓட்டுகள் எண்ணப்படும் ஜி.சி.டி கல்லூரி வளாக...

தமிழக அரசியலில் புதிய திருப்பம்: தவெக முன்னிலை, மூத்த கட்சிகள் பின்னடைவு

தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளில் காலை 9 மணி நிலவரப்படி தவெக 38 இடங்களில் முன்னிலையில் உள்ளது. முதல் முறையாக தேர...

Tomorrow’s Counting at GCT to Begin with Postal Ballots at 8 AM

Vote counting for all 10 constituencies in Coimbatore district will be held at the Government College of Technology (GCT...

139th Kandhuri Urs Festival in Udumalpet Marked by Prayers and Feast

The 139th annual Kandhuri Urs festival at Mureedu Baba Dargah in Udumalpet was marked by special prayers, spiritual disc...

உடுமலையில் 139வது உரூஸ் கந்தூரி விழா: சிறப்பு பிரார்த்தனை, அன்னதானம்

உடுமலையில் முரீது பாபா தர்காவில் நடைபெற்ற 139வது ஆண்டு உரூஸ் கந்தூரி விழாவில் சிறப்பு பிரார்த்தனை, ஆன்மீக உரைகள் மற்றும்...