பல்லடத்தில் நாட்டு துப்பாக்கியுடன் விலங்குகளை வேட்டையாடச் சென்ற 3 இளைஞர்கள் கைது

திருப்பூர் மாவட்டம் பல்லடம் மாணிக்காபுரத்தில் இரவு நேரத்தில் விலங்களை வேட்டையாட சென்ற மூன்று இளைஞர்களை போலீசார் கையும் களவுமாக கைது செய்தனர்.


திருப்பூர்: ஆவணங்கள் இல்லாம் நாட்டு துப்பாக்கியை வைத்து விலங்குகளை வேட்டையாட சென்ற மூன்று இளைஞர்களையும் போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

திருப்பூர் மாவட்டம் பல்லடம் மாணிக்காபுரம் சாலையில் இரவு நேரத்தில் இளைஞர்கள் சிலர் துப்பாக்கியுடன் வலம் வருவதாக பல்லடம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து மாணிக்காபுரம் சாலையில் ரோந்து மேற்கொண்டனர். அப்போது 3 இளைஞர்கள் நாட்டுத் துப்பாக்கியுடன் காட்டு பகுதியில் வலம் வந்து கொண்டிருந்ததை கண்ட போலீசார் அவர்களை பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.



விசாரணையில் அவர்கள் அறிவொளி நகர் குறவர் காலனி பகுதியை சேர்ந்த பூவரசன், ஹரிகிருஷ்ணன் மற்றும் சக்திவேல் என்பதும், காட்டுப்பகுதியில் முயல், காடை, கொக்கு போன்ற பறவை மற்றும் விலங்குகளை வேட்டையாட ஆவணம் எதுவுமின்றி நாட்டு துப்பாக்கியை பயன்படுத்தி வந்ததும் தெரியவந்தது.



இதனையடுத்து மூன்று பேரையும் கைது செய்த போலீசார் துப்பாக்கிகளை பறிமுதல் செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Newsletter

பெங்களூர் -கோவைக்கு காரில் கடத்தி வரப்பட்ட 450 கிலோ புகையிலைப் பொருட்கள் பறிமுதல்

பெங்களூரில் இருந்து கோவைக்கு காரில் கடத்தி வரப்பட்ட 450 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை வடவள்ளி போலீசார் பறிமு...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 75 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் ந...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ச்சியான மழை பெய்து வருவத...

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...