பல்லடத்தில் நாட்டு துப்பாக்கியுடன் விலங்குகளை வேட்டையாடச் சென்ற 3 இளைஞர்கள் கைது

திருப்பூர் மாவட்டம் பல்லடம் மாணிக்காபுரத்தில் இரவு நேரத்தில் விலங்களை வேட்டையாட சென்ற மூன்று இளைஞர்களை போலீசார் கையும் களவுமாக கைது செய்தனர்.


திருப்பூர்: ஆவணங்கள் இல்லாம் நாட்டு துப்பாக்கியை வைத்து விலங்குகளை வேட்டையாட சென்ற மூன்று இளைஞர்களையும் போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

திருப்பூர் மாவட்டம் பல்லடம் மாணிக்காபுரம் சாலையில் இரவு நேரத்தில் இளைஞர்கள் சிலர் துப்பாக்கியுடன் வலம் வருவதாக பல்லடம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து மாணிக்காபுரம் சாலையில் ரோந்து மேற்கொண்டனர். அப்போது 3 இளைஞர்கள் நாட்டுத் துப்பாக்கியுடன் காட்டு பகுதியில் வலம் வந்து கொண்டிருந்ததை கண்ட போலீசார் அவர்களை பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.



விசாரணையில் அவர்கள் அறிவொளி நகர் குறவர் காலனி பகுதியை சேர்ந்த பூவரசன், ஹரிகிருஷ்ணன் மற்றும் சக்திவேல் என்பதும், காட்டுப்பகுதியில் முயல், காடை, கொக்கு போன்ற பறவை மற்றும் விலங்குகளை வேட்டையாட ஆவணம் எதுவுமின்றி நாட்டு துப்பாக்கியை பயன்படுத்தி வந்ததும் தெரியவந்தது.



இதனையடுத்து மூன்று பேரையும் கைது செய்த போலீசார் துப்பாக்கிகளை பறிமுதல் செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Newsletter

பெரியநாயக்கன்பாளையம் பட்டத்தரசி அம்மன் திருவிழா - O.K. சின்னராஜ் வழிபாடு

கோவை பெரியநாயக்கன்பாளையம் அருகே நாயக்கனூரில் உள்ள அருள்மிகு பட்டத்தரசி அம்மன் திருக்கோவிலில் பங்குனி திருவிழா இன்று நடைப...

2026 தேர்தல்: தொண்டாமுத்தூர் ரவி பங்கேற்ற மேட்டுப்பாளையம் தொகுதி பிரச்சார திட்டமிடல்

மேட்டுப்பாளையம் தொகுதி அலுவலகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான திமுக வேட்பாளரின் பிரச்சார சுற்றுப்பயண தயாரிப்பு மற்றும...

N.R. கார்த்திகேயன் தலைமையில் திமுக தேர்தல் பணிகள் குறித்த ஆலோசனை

கோவை தொண்டாமுத்தூர் தொகுதியில் சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெறுவதற்கான ஆக்கபூர்வமான பணிகள் குறித்து திமுக நிர்வாகிகள் கலந்...

தேர்தல் பார்வையாளர்கள் பட்டியல்: Dr மகேந்திரன் பொள்ளாச்சி வால்பாறை தொகுதி நியமனம்

2026 சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு தமிழகம் முழுவதும் வாக்குச்சாவடிகளில் Dr மகேந்திரன் உள்ளிட்டோர் பார்வையாளர்களாக நியமி...

கோவையில் ஏர் இந்தியா நிறுவனத்தின் விமான சேவைகளை அதிகரிக்க தொழில்துறையினர் வலியுறுத்தல்

கோவையில் ஏர் இந்தியா விமான சேவைகளை அதிகரிக்க கொங்கு குளோபல் போரம் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. தற்போது டெல்லி மற்...

கோயம்புத்தூர் மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு: மார்ச் 31 நிலவரம்

கோயம்புத்தூர் மாவட்டத்தில் ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் மழை நீர் வரத்தால் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. திருப்ப...