மருதமலை மலைப்பாதை சீரமைப்பு - போக்குவரத்துக்கு தடை விதித்த கோவில் நிர்வாகம்

கோவை மருதமலை மலைப்பாதை பழுது நீக்கி செப்பனிடும் பணி நடைபெற இருப்பதால் இரு சக்கர, நான்கு சக்கர வாகனங்கள் செல்ல ஒரு மாதத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.


கோவை: மருதமலை மலைப்பாதை சீரமைப்பு பணி நடைபெறுதால் போக்குவரத்துக்கு தடை விதித்து கோவில் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

கோவை மாவட்டம், மருதமலை அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி, திருக்கோயிலுக்கு சுவாமி தரிசனத்துக்கு வருகை தரும் பக்தர்களின் வசதிக்காக மின் தூக்கி அறை, சேவார்த்திகள் காத்திருப்பு அறை, கட்டணச் சீட்டு வழங்குமிடம் ஆகியவற்றுடன் கூடிய மின்தூக்கி (LIFT) வசதி ஏற்படுத்தும் பணி, மலைச் சாலையில் உள்ள தார் சாலைகள் சீரமைத்தல் பணி, திருக்கோயிலின் மலை மேல் புதியதாக யாகசாலை மண்டபம் கட்டும் பணி, திருக்கோயிலில் வாகனங்கள் நிறுத்துமிடத்தில் புதியதாக ஆண்கள் மற்றும் பெண்களுக்கான கழிப்பறைகள் கட்டும் பணி மற்றும் திருக்கோயில் தங்கரதம் உலாவரும் பாதையில் கருங்கல் தளம் அமைக்கும் பணி ஆகிய பணிகள் நடைபெறுகின்றன.



இதனால் இன்று முதல் ஒரு மாத காலத்திற்கு மலைப் பாதையில் இரண்டு சக்கர வாகனங்கள் மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் செல்ல அனுமதி இல்லை என்பதையும், பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய திருக்கோயில் பேருந்து மற்றும் படிப்பாதையை பயன்படுத்திக் கொள்ளலாம் என மருதமலை திருக்கோவில் நிர்வாக உயர் அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

Newsletter

கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை: இளைஞர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு கஞ்சா விற்பனை செய்ததாக பல தொடர் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான 22 வயது இளைஞர் மீத...

கோவையில் தேசிய ஜூனியர் ஆண்கள் ஹாக்கி சாம்பியன்ஷிப்: ஜூலை 28 முதல்; 32 மாநில அணிகள் பங்கேற்பு

16வது ஹாக்கி இந்தியா ஜூனியர் ஆண்கள் தேசிய சாம்பியன்ஷிப் போட்டி, ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 8 வரை கோவை ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி...

வெள்ளலூரில் குப்பை தரம் பிரிக்கும் மையத்துக்கு எதிர்ப்பு: பொது மக்கள் சாலை மறியல்

வெள்ளலூரில் குடியிருப்பு பகுதிக்கு அருகே குப்பை தரம் பிரிக்கும் மையம் அமைக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து 100-க்கும்...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் - வார்டு கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு, பூங்கா தூய்மை மற்றும் மர குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்ப...

ரூ.10.69 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் திறப்பு: கோவையில் புதிய விளையாட்டு அரங்குகள், பள்ளி வசதிகளை தொடங்கி வைத்த அமைச்சர் வே.சம்பத்குமார்

கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களில் ரூ.10.69 கோடி மதிப்பிலான பள்ளி கட்டிடங்கள், விளையாட்டு அரங்குகள், அங்கன்வாடி, மகள...

அமராவதி அணை நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 25ஆம் தேதி நிலவரப்படி 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்...