மருதமலை மலைப்பாதை சீரமைப்பு - போக்குவரத்துக்கு தடை விதித்த கோவில் நிர்வாகம்

கோவை மருதமலை மலைப்பாதை பழுது நீக்கி செப்பனிடும் பணி நடைபெற இருப்பதால் இரு சக்கர, நான்கு சக்கர வாகனங்கள் செல்ல ஒரு மாதத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.


கோவை: மருதமலை மலைப்பாதை சீரமைப்பு பணி நடைபெறுதால் போக்குவரத்துக்கு தடை விதித்து கோவில் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

கோவை மாவட்டம், மருதமலை அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி, திருக்கோயிலுக்கு சுவாமி தரிசனத்துக்கு வருகை தரும் பக்தர்களின் வசதிக்காக மின் தூக்கி அறை, சேவார்த்திகள் காத்திருப்பு அறை, கட்டணச் சீட்டு வழங்குமிடம் ஆகியவற்றுடன் கூடிய மின்தூக்கி (LIFT) வசதி ஏற்படுத்தும் பணி, மலைச் சாலையில் உள்ள தார் சாலைகள் சீரமைத்தல் பணி, திருக்கோயிலின் மலை மேல் புதியதாக யாகசாலை மண்டபம் கட்டும் பணி, திருக்கோயிலில் வாகனங்கள் நிறுத்துமிடத்தில் புதியதாக ஆண்கள் மற்றும் பெண்களுக்கான கழிப்பறைகள் கட்டும் பணி மற்றும் திருக்கோயில் தங்கரதம் உலாவரும் பாதையில் கருங்கல் தளம் அமைக்கும் பணி ஆகிய பணிகள் நடைபெறுகின்றன.



இதனால் இன்று முதல் ஒரு மாத காலத்திற்கு மலைப் பாதையில் இரண்டு சக்கர வாகனங்கள் மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் செல்ல அனுமதி இல்லை என்பதையும், பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய திருக்கோயில் பேருந்து மற்றும் படிப்பாதையை பயன்படுத்திக் கொள்ளலாம் என மருதமலை திருக்கோவில் நிர்வாக உயர் அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

Newsletter

திருப்பூரில் டியிருப்பு பகுதியில் பதுக்கி வைத்து குட்கா விற்பனை; 60 கிலோ பறிமுதல் – 2 வட மாநில இளைஞர்கள் கைது

திருப்பூர் நொச்சிபாளையம் பகுதியில் குடியிருப்பு வீட்டில் பதுக்கி வைத்து விற்பனை செய்யப்பட்ட 60 கிலோ குட்கா பொருட்களை போல...

மின்கம்பி விழுந்து சோலார் மின்வேலியில் மின்சாரம் பாய்ந்து பெண் விவசாயி பரிதாபமாக உயிரிழப்பு

கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் ஒன்றியம் நாயக்கன்பாளையம் ஊராட்சி அண்ணாநகர் பகுதியில் அறுந்து விழுந்த மின்கம்பி சோலார்...

அம்மா உணவகங்கள்: புதுப்பித்து, தரமான, சுவையான உணவு வழங்க முதல்வர் உத்தரவு – எஸ்.பி.வேலுமணி பாராட்டு..!

தமிழகம் முழுவதும் செயல்பட்டு வரும் 620 அம்மா உணவகங்களை புதுப்பித்து, தரமான மற்றும் சுவையான உணவு வழங்க முதலமைச்சர் விஜய்...

அம்மா உணவகங்கள்: புதுப்பித்து, தரமான, சுவையான உணவு வழங்க முதல்வர் உத்தரவு – எஸ்.பி.வேலுமணி பாராட்டு..!

தமிழகம் முழுவதும் செயல்பட்டு வரும் 620 அம்மா உணவகங்களை புதுப்பித்து, தரமான மற்றும் சுவையான உணவு வழங்க முதலமைச்சர் விஜய்...

விபத்தில் உயிரிழந்த கோவை கல்லூரி மாணவரின் உடல் உறுப்புகள் தானம்; அரசு சார்பில் மரியாதை

விபத்தில் மூளைச்சாவு அடைந்த கோவை மாணவர் சங்கீதின் குடும்பத்தினர் உடல் உறுப்புகள் தானம் செய்த நிலையில், கோயம்புத்தூர் வடக...

கோவை போலீஸ் முயற்சி: கடந்த ஆண்டை விட 27 சதவீதம் குறைந்த சாலை விபத்துகள்

கோவை மாநகரில் விபத்து அதிகம் நிகழும் பகுதிகளில் அமைக்கப்பட்ட ஜிக்-ஜாக் தடுப்புகள் மூலம் சாலை விபத்து மரணங்கள் 27 சதவீதம்...