வால்பாறை கலை கல்லூரியில் போக்குவரத்து விதிமுறைகளை பற்றி மாணவர்களுக்கு விழிப்புணர்வு கருத்தரங்கம்

வால்பாறை கலை கல்லூரியில் போக்குவரத்து விதிமுறைகள் பற்றி விழிப்புணர்வு கருத்தரங்க கூட்டம் போக்குவரத்து வட்டார அலுவலக போக்குவரத்து அலுவலர் முருகானந்தம் தலைமையில் நடைபெற்றது.


கோவை: வாகனங்களை ஓட்டும் பொழுது வாகனத்திற்கு உரிய ஆவணங்கள் வைத்திருக்க வேண்டும் உட்பட சாலை போக்குவரத்து விதிகள் பற்றி கல்லூரி மாணவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

கோவை மாவட்டம் வால்பாறையில் அரசு கலைக்கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்த அரசு கலைக் கல்லூரியில் சுமார் 2000திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.

சாலை விதிமுறைகளை கடைபிடிப்பதற்கு போக்குவரத்து வட்டார அலுவலக போக்குவரத்து அலுவலர் முருகானந்தம் தலைமையில் கல்லூரியில் சாலை விதிமுறைகளை பற்றி விழிப்புணர்வு கருத்து அரங்க கூட்டம் நடைபெற்றது.

இதில் மாணவ,மாணவிகள், பேராசிரியர்கள் கலந்து கொண்டனர். சாலையில் வாகனங்களை ஓட்டும் பொழுது வாகனத்திற்கு உரிய ஆவணங்கள் வைத்திருக்க வேண்டும். 18 வயதிற்கு மேல் நிரம்பியவர் வாகனம் ஓட்டுநர் உரிமை வைத்திருக்க வேண்டும். சாலை விதியில் விதிகளை கடைபிடிக்க வேண்டும். இரண்டு சக்கர வாகனத்தில் செல்லும் பொழுது கட்டாய தலைக்கவசம் அணிந்திருக்க வேண்டும். நான்கு சக்கர வாகனத்தில் செல்லும் பொழுது சீட் பெல்ட் அணிந்திருக்க வேண்டும். இரண்டு சக்கர வாகனத்தில் இரண்டு பேருக்கு மேல் ஏற்றக்கூடாது.

வேக கட்டுப்பாடு அவசியம். ஒலி எழுப்பும் இடத்தில் ஒலி எழுப்ப வேண்டும். மது அருந்தி விட்டு வாகனம் ஓட்டக்கூடாது. வாகனங்களை விளையாட்டாக ரேஸ் போன்றவை வைக்கக்கூடாது. இவைகள் அனைத்தும் உயிருக்கு கேடாக விளைவிக்கும் போன்ற விதிமுறைகளை பற்றி வட்டாரப் போக்குவரத்து அலுவலர் முருகானந்தம் மாணவ, மாணவிகளிடம் விழிப்புணர்வு மேற்கொண்டனர்.

Newsletter

கோவை துப்பாக்கி சூடு வீரர்கள் 168 பதக்கங்கள் வென்று சாதனை

சென்னையில் நடைபெற்ற 51வது மாநில அளவிலான ரைபிள், பிஸ்டல் துப்பாக்கி சூடு போட்டியில் கோவை வீரர்கள் 168 பதக்கங்களை வென்றனர்...

கோவை குனியமுத்தூர் அருகே ஜவுளிக்கடை மேலாளருக்கு கத்திக்குத்து; தொழிலாளி கைது

கோவை குனியமுத்தூர் அருகே ஜவுளிக்கடை மேலாளரை கத்தியால் தாக்கிய தொழிலாளியை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். படுக...

கோவை மாநகராட்சி ஆணையர் மத்திய மண்டல தூய்மைப் பணிகளை நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா மத்திய மண்டலத்தின் வார்டு 48ல் தூய்மைப் பணிகளை ஆய்வு செய்து, தூய்மைப் பணியாளர்களுக...

ஒண்டிப்புதூரில் ரயில்வே மேம்பாலம் அமைக்கக் கோரி மக்கள் போராட்டம்; கிழக்கு மண்டல அலுவலகம் முற்றுகை

கோவை ஒண்டிப்புதூர் சூர்யா நகர் பகுதியில் ரயில்வே மேம்பாலம் அமைக்க வலியுறுத்தி அப்பகுதி பொதுமக்கள் சிங்காநல்லூர் கிழக்கு...

அட்டப்பாடி-முள்ளி அருகே கார் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து: நீலகிரியைச் சேர்ந்த மூவர் பலி

கேரளா-தமிழ்நாடு எல்லைப்பகுதியான அட்டப்பாடி முள்ளி அருகே கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில்,...

கிணத்துக்கடவு கொலை வழக்கு: சிறுவன் சீர்திருத்தப் பள்ளியில் அடைப்பு; காயமடைந்த மற்றொரு குற்றவாளி மருத்துவமனையில் சிகிச்சை

கிணத்துக்கடவு அருகே இளைஞர் அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட 17 வயது சிறுவன், கோவை சிறுவர் நீதிமன்றத்தி...