வால்பாறை அருகே கரடி தாக்கி 2 வட மாநில பெண்கள் படுகாயம் - மருத்துவமனையில் சிகிச்சை அளிப்பு

கோவை மாவட்டம் வால்பாறை அருகே கரடி தாக்கியதில் தேயிலை தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்த இரண்டு வட மாநில பெண் தொழிலாளர்கள் படுகாயமடைந்தனர்.


கோவை: தேயிலை தோட்டத்தில் சுற்றி வரும் கரடியை வனப்பகுதிக்கு விரட்ட வேண்டும் என்று வனத்துறையினருக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கோவை மாவட்டம் வால்பாறை அருகே மாணிக்க எஸ்டேட் பகுதியில் 38 வது தேயிலை தோட்டத்தில் சுமார் 20க்கும் மேற்பட்ட தொழிலாளிகள் வேலை செய்து கொண்டிருந்தனர். சுமார் 11 மணியளவில் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய இரண்டு கரடிகள் தேயிலை தோட்டத்திற்குள் ஓடின.

அப்போது தேயிலைக்கு உரம் போட்டு கொண்டிருந்த சுமதி வயது 25 மற்றும் ஹித்தினி குமாரி வயது 26 ஆகிய இரண்டு பெண்களை கால் மற்றும் தலைப்பகுதியில் கரடி தாக்கியது. இதனைப்பார்த்த அருகில் உள்ளவர்கள் சத்தம் போட்டு விரட்டியதில் கரடி மீண்டும் வன பகுதிக்குள் ஓடி ஒளிந்துக்கொண்டது.

ரத்த வெள்ளத்தில் இருந்த இரண்டு பெண்களையும் அருகில் இருந்தவர்கள் தனியார் வாகனத்தின் மூலம் வால்பாறை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.



இதில் ஒரு பெண்ணுக்கு தலையிலும், மற்றொரு பெண்ணுக்கு காலில் முறிவு ஏற்பட்டுள்ளது. அவர்களுக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.



மேலும் மானாம்பள்ளி வன சரகர் மணிகண்டன் தலைமையில் மேல் சிகிச்சைக்காக ஒருவருக்கு 10 ஆயிரம் வீதம் இருவருக்கு 20 ஆயிரம் வழங்கினார். தேயிலை தோட்டத்தில் சுற்றி வரும் கரடியை வனப்பகுதிக்கு விரட்ட வேண்டும் என்று வனத்துறையினருக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் புதிய கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களை ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா, தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில் கட்டப்பட்டுவரும் கழிவுநீர் சுத்திகர...

வடவள்ளி உள்ளிட்ட பகுதிகளில் நாளை 8 மணி நேரம் மின்தடை

கோவை எஸ்.என்.பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுவதால், வடவள்ளி உள்ளிட்ட 11 பகுதிகளில் கா...

குறிச்சி பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

குறிச்சி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சிட்கோ குற...

கிணத்துக்கடவு பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

கிணத்துக்கடவு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 முதல் மாலை 5 வரை சுலக்கல், தாம...

கோவையில் அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் - பல்வேறு கோரிக்கைகள் முன்வைப்பு

நீதித்துறையின் சுதந்திரம், சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ் அலுவல் மொழி, இளம் வழக்கறிஞர்களுக்கு உதவித்தொகை உள்ளிட்ட பல்வே...

அமராவதி அணை 50.56 அடி, திருமூர்த்தி அணை 27.75 அடி நீர்மட்டம்

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...