திருமூர்த்தி அணையில் புதர் மண்டி காணப்படும் பூங்கா - சீரமைத்து தர பொதுமக்கள் கோரிக்கை

உடுமலை அருகே புதர் மண்டி காணப்படும் திருமூர்த்தி அணை பூங்காவை முறையாக பராமரித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர கோரிக்கை எழுந்துள்ளது.


திருப்பூர்: திருமூர்த்தி அணை வளாகத்தில் உள்ள பூங்காவை சீரமைக்க வேண்டும் என சுற்றுலா பயணிகள் வலியுறுத்தியுள்ளனர்

திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்துள்ள திருமூர்த்தி அணைக்கு விடுமுறை மற்றும் விசேஷ தினங்களில் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை புரிந்து வருகின்றனர்.



குறிப்பாக இப்பகுதியில் பஞ்சலிங்க அருவி மற்றும் திருமூர்த்தி மலை அவணலிங்கேஸ்வரர் திருக்கோவில் மற்றும் நீச்சல் குளம் உள்ளிட்ட பல்வேறு சுற்றுலா தளங்கள் இருப்பதால் விடுமுறை மற்றும் விசேஷ நாட்களில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகமாக காணப்படும்.



இந்த நிலையில் திருமூர்த்தி அணைப்பகுதியில் கடந்து சில வருடங்களுக்கு முன்பு அமைக்கப்பட்ட பூங்கா தற்பொழுது போதிய பராமரிப்பு இல்லாமல் காணப்படுகின்றன.

பூங்காவில் அமைக்கப்பட்டிருந்த விலங்குகள் மற்றும் இருக்கைகள் உபகரணங்கள் சேதம் அடைந்து காணப்படுகின்றன.

பல லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்ட பூங்கா தற்பொழுது போதிய பராமரிப்பு இல்லாமல் காணப்படுவதால் இங்கே வரும் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்லும் நிலை உள்ள காரணத்தால் பூங்காவை சம்பந்தப்பட்ட பொதுப்பணித்துறையினர் பராமரிப்பு செய்து பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என சமூக ஆர்வலர்கள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

Newsletter

கோவை மாநகராட்சி 24x7 குடிநீர் திட்டப் பகுதிகளில் சாலை சீரமைப்பு பணிகள் தொடக்கம்: மாநகராட்சி நிர்வாகம் அறிவிப்பு

கோவை மாநகராட்சியில் 24x7 குடிநீர் திட்டப்பணிகள் நடைபெறும் திருச்சி சாலை, மேட்டுப்பாளையம் சாலை, சத்தியமங்கலம் சாலை, அவினா...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் இன்னோவிஷன்-2026 அறிவியல் மற்றும் தொழில்நுட்பப் போட்டிகள் நடைபெற்றன

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் மாணவர்களின் சிந்தனைத்திறன் மற்றும் ஆய்வுநோக்கை ஊக்குவிக்கும் வகையில் இன்னோவிஷன்-2026 அறிவிய...

கோவை வடக்கு மண்டல வளர்ச்சித் திட்டங்களை மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் மற்றும் ஆணையாளர் கட்டா ரவி தேஜா முன்னிலையில் இணைப்பு பா...

கோவை மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் 51 மனுக்கள் பெறப்பட்டன

கோவை மாநகராட்சியில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. ஆணையாளர் க...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரியில் ராகிங் எதிர்ப்பு வார விழா நிறைவு

கோவை நவ இந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஆகஸ்ட் 12 முதல் 18 வரை நடைபெற்ற ராகிங் எதிர்ப...

கோவையில் மாநகராட்சியில் மக்கள் தொகை கணக்கெடுப்பு 61% நிறைவு: விடுபட்ட வீடுகளுக்கு உதவி எண்கள் வெளியீடு

கோவை மாநகராட்சியில் ஆகஸ்ட் 1 முதல் நடைபெறும் மக்கள் தொகை கணக்கெடுப்பு 2027-ன் முதற்கட்ட வீட்டு பட்டியல் பணி 61% நிறைவடைந...