கோவையில் கோலம் போட்ட மூதாட்டியிடம் 15 பவுன் செயின் பறிப்பு - சிசிடிவி காட்சிகள் வெளியீடு

கோவையில் வீட்டின் முன்பு கோலமிட்டு கொண்டிருந்த மூதாட்டியின் கழுத்தில் இருந்து 15 சவரன் தங்க சங்கிலியை பறித்து சென்ற நபரின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது.


கோவை: மூதாட்டியிடம் தங்க நகையை பறித்து சென்றவர் யார் என சிங்காநல்லூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கோவை ஒண்டிப்புதூர், செந்தில் ஜனதா வீதியில் வசிப்பவர் கலைவாணி. இவர் இன்று உறவினர்கள் வீட்டு நிகழ்ச்சிக்கு செல்வதற்காக அதிகாலை 3.30 மணியளவில் வீட்டின் முன்பு கோலம் போட்டுகொண்டு இருந்த போது அவர் கழுத்தில் அணிந்திருந்த 15 சவரன் தங்க சங்கிலியை மர்ம நபர் பறித்து சென்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் தங்க சங்கிலியில் இணைக்கப்பட்டு இருந்த மணிகள் மற்றும் டாலர்களும் சேர்ந்து 17 சவரன் பறிபோனதாக பாதிக்கப்பட்டவர் வேதனை தெரிவிக்கின்றனர். சம்பவம் தொடர்பாக சிங்காநல்லூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 75 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் ந...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ச்சியான மழை பெய்து வருவத...

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...