தாராபுரத்தில் அதிமுக பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம் - தேர்தல் ஏற்பாடுகள் குறித்து நிர்வாகிகள் கலந்துரையாடல்

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் அஇஅதிமுக திருப்பூர் புறநகர் கிழக்கு மாவட்ட பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம் நாமகிரி தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.


திருப்பூர்: கடந்த இரண்டு சட்டமன்ற தேர்தலில் தாராபுரம் தொகுதி அதிமுக கைவிட்டது. ஆனால் இனி தாராபுரம் தொகுதி அதிமுகவின் இரும்பு எஃகோட்டையாக இருக்க வேண்டும் என்று பூத் கமிட்டி கூட்டத்தில் இளைஞர் மற்றும் இளம் பெண்கள்பாசறை மகளிர் அணி நிர்வாகிகள் பேசினர்.

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் அஇஅதிமுக திருப்பூர் புறநகர் கிழக்கு மாவட்ட பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம் நாமகிரி தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு தாராபுரம் நகர செயலாளர் சி.ராஜேந்திரன் தலைமை தாங்கினார். மாவட்ட பொருளாளர் சின்னப்பன் (என்கிற) பழனிச்சாமி முன்னிலை வகித்தார்.

இதில் இளைஞர் மற்றும் இளம் பெண்கள்பாசறை மகளிர் அணி நிர்வாகிகள் பேசுகையில்,வரக்கூடிய நாடாளுமன்ற தேர்தலானாலும் சரி, அடுத்த சட்டமன்ற தேர்தலானாலும் சரி தாராபுரம் தொகுதியில் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும்.

தாராபுரம் சட்டமன்ற தொகுதி எப்போதும் அதிமுகவின் கோட்டை. கடந்த அதிமுக ஆட்சியில் வழங்கிய நலத்திட்டங்களை எடுத்துச் சொல்லி வாக்கு சேகரிக்க வேண்டும்.

கடந்த இரண்டு சட்டமன்ற தேர்தலில் தாராபுரம் தொகுதி அதிமுக கைவிட்டது. ஆனால் இனி தாராபுரம் தொகுதி அதிமுகவின் இரும்பு எஃகோட்டையாக இருக்க வேண்டும்.



அதை கட்டமைக்க நிர்வாகிகள் அனைவரும் ஒன்றிணைந்து பாடுபட வேண்டும். அப்படி அமைக்கப்படும் அதிமுக இரும்பு எஃகோட்டையை இனிவரும் எந்த ஒரு கட்சியினரும் உடைக்க முடியாத அளவிற்கு பலமானதாக உருவாக்க வேண்டும். எனவே தொண்டர்கள் முன்னாள் முதலமைச்சரும் அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் கரத்தை வலுப்படுத்தி அவரை மீண்டும் முதலமைச்சராக அமர்த்த அனைவரும் பாடுபடுவோம் என இவ்வாறு தெரிவித்தனர்.

இந்த நிகழ்ச்சியில் நகர இலக்கிய அணி செயலாளர் கிளை செயலாளர் மாதவன்ஒருங்கிணைப்பில் மாவட்ட இணை செயலாளர் திருப்பூர் மாவட்ட ஊராட்சி மன்ற குழு தலைவர் சத்யபாமா, மாவட்ட மகளிர் அணி செயலாளர் ரேவதி குமார், மாவட்ட மகளிரணி இணை செயலாளர் கௌரிசித்ரா முருகேசன், மாவட்ட பாசறை தலைவர் சிவசுகுந்தன், மாவட்ட அண்ணா தொழிற்சங்க பொருளாளர் பா.ரா அரசகுமாரன், நகர அம்மா பேரவை செயலாளர் ராமசாமி, அமைப்புசாரா ஓட்டுனர் அணி மாவட்ட செயலாளர் பங்க் மகேஷ், பிரதிநிதிகள் கோல்டன் ராஜ். உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

பூண்டி வெள்ளியங்கிரி ஆண்டவர் கோயில் பங்குனி உத்திரம் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

Coimbatore மாவட்டம் பூண்டியில் உள்ள வெள்ளியங்கிரி ஆண்டவர் கோயிலில் பங்குனி உத்திரம் திருத்தேரோட்ட திருவிழா கொடியேற்றத்து...

தாராபுரம் தொகுதியில் அதிமுக வேட்பாளராக முன்னாள் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் அறிவிப்பு

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் தொகுதியில் அதிமுக வேட்பாளராக மாவட்ட கழக இணைச் செயலாளரும் முன்னாள் ஊராட்சி ஒன்றிய குழு தலைவ...

கண்ணம்பாளையம் குளத்தில் மீன் பிடிக்கச் சென்ற இரு மாணவர்கள் மூழ்கி உயிரிழப்பு

கோவை மாவட்டம் சூலூரை அடுத்த கண்ணம்பாளையத்தில் குளத்தில் மீன் பிடிக்கச் சென்ற இரு ஆறாம் வகுப்பு மாணவர்கள் மூழ்கி உயிரிழந்...

Ponraj மீது தவெக மகளிர் அணி புகார் - உடனடி கைது வலியுறுத்தல்

Coimbatore: அரசியல் விமர்சகர் Ponraj தமிழக வெற்றி கழகத்தின் பெண் நிர்வாகிகள் மீது சர்ச்சைக்குரிய கருத்துக்கள் தெரிவித்தத...

உடுமலை தொகுதியில் அதிமுக வேட்பாளராக கே ராதாகிருஷ்ணன் அறிவிப்பு

திருப்பூர் மாவட்டம் உடுமலை சட்டமன்றத் தொகுதியில் அதிமுக வேட்பாளராக முன்னாள் அமைச்சர் உடுமலை கே ராதாகிருஷ்ணன் போட்டியிடுவ...

பேரூர் பட்டீஸ்வரர் கோவில் தேரின் உறுதித்தன்மை சோதனைக்கு இன்று ஓட்டம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவில் தேரின் உறுதித்தன்மை குறித்து பொதுப்பணித்துறை சந்தேகம் தெரிவித்ததை அடுத்து, ஹிந்து அமைப்பி...